முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தென் மண்டல கிராமப்புற வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம்

 சென்னையில் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று தென் மண்டல கிராமப்புற வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.



மத்திய அரசின் முக்கிய திட்டங்களில் மண்டல கிராமப்புற வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று  தென் மண்டல கிராமப்புற வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகாவின் நிதித் துறையின் நிதி/சிறப்புச் செயலர்கள்/முதுநிலை அதிகாரிகள் பிரதிநிதித்துவத்துடன், நிதிப்பணிகள் துறை  செயலர் மற்றும் ரிசர்வ் வங்கி மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, யூனியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு வங்கி  ஆகியவற்றின் மேலாண்மை இயக்குநர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில், நிதிப்பணிகள் துறை  செயலர், மண்டல கிராமப்புற வங்கிகளின் பல்வேறு நிதி அளவீடுகள் பற்றிய விளக்கத்தை அளித்ததால்,  கிராமப்புற வங்கிகளின் நிதி செயல்திறன் பற்றி விவாதங்கள் நடந்தன.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் முக்கிய திட்டங்களான பிஎம் ஸ்வநிதி, அடல் ஓய்வூதிய திட்டம், பிஎம் ஜன் தன் திட்டம், முத்ரா திட்டம், உழவர் கடன் அட்டை,  கால்நடை வளர்ப்பு, மீன் வளம் போன்றவற்றில் மண்டல  கிராமப்புற வங்கிகள்  தொடர்ந்து கவனம் செலுத்துவதுடன், அதில் முழுமையான நோக்கத்தை அடைய வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

தென் மண்டல  கிராமப்புற வங்கிகளின் வாராக் கடன்கள்,  கடன்  வழங்கல்  ஆகியவை தேசிய சராசரியை விட சிறப்பாக இருந்ததை எடுத்துக்காட்டிய அமைச்சர், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு விகிதத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொழில்நுட்பம், கடன் மேலாண்மை அமைப்பு மற்றும் கோர் பேங்கிங் சிஸ்டம் ஆகியவற்றை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகிய பணிகளை தென் மண்டலத்தின் கிராமப்புற வங்கிகளில் காலக்கெடுவுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார்.  அதிக டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி நகரும் அரசின் முயற்சிக்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் செயல்படும் வாடிக்கையாளர்களை அதிகரிப்பதில் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

எம்எஸ்எம்இக்கு சிறந்த முறையில் சேவை செய்ய புதுமையான திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நிதி அமைச்சர், தென் பிராந்தியத்தைச் சேர்ந்த கிராமப்புற வங்கிகள், ரிசர்வ் வங்கி மற்றும்  சம்பந்தப்பட்ட மாநில அதிகாரிகளுடன் இணைந்து மாநிலம் முழுவதும் தங்கள் இருப்பை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

பிஎம் ஸ்வநிதியின் கீழ், தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதைத் தவிர மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொடர்புடைய விவசாயத் துறைக்கு கடன் வழங்குவதற்கான  கட்டமைப்பை மேம்படுத்துவதையும் அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...