நள்ளிரவில் நடந்த கார் விபத்து. புதுக்கோட்டை மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிமன்ற பெண் நீதிபதி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனயில் தீவிர சிகிச்சை
திருமயம் நீதிமன்றம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில்,
புதுக்கோட்டை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக ஜெயக்குமாரி ஜெமிரத்னா பணியாற்றுகிறார். இரண்டு நாள் முன் இரவு தனது காரில் புதுக்கோட்டையிலிருந்து மதுரை நோக்கி திருமயத்திலருந்து மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த காரை, பொன்னமராவதி வலையப்பட்டியை சேர்ந்த வரதராஜன்( வயது 35) ஓட்டிச் சென்றார். அப்போது திருமயம் புதிய நீதிமன்றம் பகுதியில் கார் செல்ல எதிரில் வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
எதிர் காரை ஓட்டி வந்த நபர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வெங்கடேஸ்வரன் என்பவராவார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நீதிபதிக்கு உயர்சிகிச்சைக்காக திருச்சிராப்பள்ளியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கார் ஓட்டுநர் வரதராஜனுக்கு புதுக்கோட்டையிலேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ் (வயது 29) என்பவரிடம் விசாரணை நடத்தினர். படுகாயமடைந்த நீதிபதி தொடரந்து சிகிச்சையில் உள்ளார்.
கருத்துகள்