அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் கிராமப்புறங்களில் கல்வி அணுகலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது
டிஜிட்டல் அணுகல், டிஜிட்டல் உள்ளடக்கம், டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் இந்தியாவை டிஜிட்டல் ரீதியாக அதிகாரமளிக்கப்பட்ட சமூகமாகவும், அறிவு அடிப்படையிலான பொருளாதாரமாகவும் மாற்றும் நோக்கில் இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைத் தொடங்கியது.
இந்த நோக்கங்களை அடைய, குறிப்பாக கிராமப்புற, பழங்குடியினர் மற்றும் தொலைதூர பகுதிகளில், டிடிஎச் சேனல்கள் மற்றும் பிரதமர் இ-வித்யாவின் ஆதரவின் கீழ் வலை தளங்கள் மூலம் உயர்தர கல்வி திட்டங்களை கல்வி அமைச்சகம் வழங்குகிறது.
சில முக்கிய கல்வி முன்முயற்சிகள் பின்வருமாறு:
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் பள்ளிக் கல்விக்கான தரமான மின் உள்ளடக்கத்தை வழங்குவதற்கான நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் அனைத்து வகுப்புகளுக்கும் (ஒரே நாடு, ஒரே டிஜிட்டல் தளம்) க்யூஆர் குறியிடப்பட்ட சக்திவாய்ந்த பாடப்புத்தகங்கள். இன்று வரை (25.07.2023) திக்ஷா 524 கோடிக்கும் அதிகமான கற்றல் அமர்வுகளையும், 6,125 கோடிக்கும் அதிகமான கற்றல் நிமிடங்களையும், 2.2 கோடிக்கும் அதிகமான ஹிட்டுகளையும் பெற்றுள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 3,17,496 மின் உள்ளடக்கங்கள் டிக்ஷாவில் நேரலையில் உள்ளன.
பள்ளிக் கல்வியில் 12 டிடிஎச் சேனல்களும், உயர்கல்வியில் 22 ஸ்வயம் பிரபா சேனல்களும் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின்படி, 12 டி.டி.எச் சேனல்கள் 200 (இருநூறு) பி.எம் இ-வித்யா டி.டி.எச் டிவி சேனல்களாக விரிவுபடுத்தப்படும்.
சுயம் (இளம் ஆர்வமுள்ள மனங்களுக்கான செயலில் கற்றலின் ஆய்வு வலைகள்) என்பது பல்கலைக்கழகங்களுக்கு, உயர் கல்வி படிப்புகளுக்கான தேசிய தளமாகும். என்.ஐ.ஓ.எஸ் மற்றும் என்.சி.இ.ஆர்.டி ஆகியவை ஸ்வயம் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்புகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பு அமைப்புகளாக உள்ளன, இது 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி படிப்புகளை வழங்குகிறது. சுயம் போர்ட்டலில் மொத்தம் 10,451 படிப்புகளும், என்.சி.இ.ஆர்.டியின் 257 படிப்புகளும், என்.ஐ.ஓ.எஸ் இன் 431 படிப்புகளும் கிடைக்கின்றன. என்.சி.இ.ஆர்.டி படிப்புகளுக்கு 4.1 லட்சம் மாணவர்களும், என்.ஐ.ஓ.எஸ் படிப்புகளுக்கு 34 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.
டிஜிட்டல் இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க, தற்சார்பு இந்தியா, திட்டத்தின் ஒரு பகுதியாக, பல வழி கல்வியை அணுகுவதற்கு ஏதுவாக டிஜிட்டல் / ஆன்லைன் / ஆன்-ஏர் கல்வி தொடர்பான அனைத்து முயற்சிகளும் பிரதமர் இ-வித்யா தொகுப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இத்தகவலை மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக இன்று தெரிவித்தார்.
கருத்துகள்