உலகையாளும் தமிழர்கள் வரிசையில் சிங்கப்பூர் ஜனாதிபதியாகத் தேர்வான இலங்கை வாழ் தமிழர் தர்மன் சண்முக ரத்தினம்.
உலகையாளும் தமிழர்கள் வரிசையில் சிங்கப்பூர் ஜனாதிபதியாகத் தேர்வான இலங்கை வாழ் தமிழர் தர்மன் சண்முக ரத்தினம்.
இலங்கைத் தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தேர்வானார்.
முன்னாள் துணைப் பிரதமரும் ஆளும் கட்சியின் வேட்பாளரான தர்மன் சண்முகரத்தினம், வயது 66, சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 70.4 சரவீத வாக்குகளில் அபார வெற்றி பெற்று முன்னால் அதிபர் நாதனுக்குப் பிரகு தேர்தலில் வெற்றி பெற்ற இரண்டாவது தமிழர் சீனரல்லாதவர் எனும் பெருமையைப் பெற்றவராவார்.
இவரது குடும்பம் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து, நான்கு தலைமுறைகளாகவே சிங்கப்பூரில் வசிக்கின்றனர். தர்மன் சண்முகரத்தினம் புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நோயியல் தொடர்பான பல சர்வதேச அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவரும் Singapore Cancer Registry- ன் நிறுவனருமான பேராசிரியர் கே.சண்முகரத்தினத்தின் மகனாவார். பேராசிரியர் K.சண்முகரத்தினம் "சிங்கப்பூரில் நோயியலின் தந்தை" என்றும் அழைக்கப்படுபவர்.
15 சதம் மற்றும் 14 சதம் வாக்குகளைப் பெற்ற பெரும்பான்மையான சீனர்களாண மற்ற இரண்டு வேட்பாளர்களையும் தர்மன் சண்முகரத்தினம் எளிதாகவே தோற்கடித்தார்.
மிகவும் மதிக்கப்படும், புகழ்பெற்ற அரசியல் தலைவரானவர், சுதந்திரம் பெற்றதிலிருந்து சிங்கப்பூரை ஆண்ட People's Action Party (PAP) எனும் கட்சியிலிருந்து வௌியேறி, ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தார்.
பொருளாதார நிபுணராக, 2003 ஆம் அண்டு முதல் இரண்டு தசாப்தங்களாக கேபினட் அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் (2007 முதல் 2015 வரை ) துணைப் பிரதமராகவும் (2011முதல் 2019 வரை) பணியாற்றியவர்.
பலரும் இவரை தற்போதைய பிரதமர் Lee Hsien Loong- ன் அரசியல் வாரிசாகவே கருதினர்.
சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி நடைபெற்றது.
சிங்கப்பூரின் தற்போதைய ஜனாதிபதி Halimah Yacob-இன் 6 ஆண்டு பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் வாழ்த்து
சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்தினத்துக்கு ( @Tharman_s ) மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உத்திசார் கூட்டு செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உங்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்றுவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்