குடிநீர் இணைப்பை உரிய காலத்தில் வழங்காத ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் ஊராட்சித் தலைவருக்கு அபராதம் விதித்தது சிவகங்கை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியப் பணியாளர்களுக்கு சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் அபராதம் விதித்தது
சிவகங்கை மாவட்டம், தேவ கோட்டை வட்டம் , தானாவயல் கிராமத்மத்தில் வசிக்கும். மருதமுத்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது வீட்டிற்கு புதிய தண்ணீர் குழாய் இணைப்பிற்காக ஊராட்சி மன்றத்தில் விண்ணப்பித்து தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையான ரூபாய் .3002- ஐ செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளார். அரசின் விதிமுறைகளுக்கு மாறாக தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தனாவயல் கிராம ஊராட்சி மன்றத் தலைவர், தானாவயல் ஊராட்சி மண்றச் செயலாளர் ஆகியோருக்கு மனுதாரர் டெப்பாசிட் செலுத்தி ஆறு மாதங்கலாகியும் குடிதண்ணீர் இணைப்பு வழங்காததால் வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பி அதன் பின் மருதமுத்து உரிய சான்றுகள் கொண்ட ஆதாரங்களுடன்
சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இரா.லெட்சுமணன் மற்றும் லெ.ரம்யா மூலமாக வழக்குத் தாக்கல் செய்து அது CC 32/2022 ஆக கடந்த ஓராண்டுக்கும் மேலாக உரிய சட்ட வழிமுறைப்படி விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்கில் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் இரண்டு தரப்பு சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களைப் பரிசீலித்து விசாரணை செய்த பின்
கடந்த 09.ஆகஸ்ட் 2023 ஆம் தேதியன்று வழங்கிய தீர்ப்பில், அன்றய தேதி முதல் 30 தினங்களுக்குள் வழக்கின் மனுதாரர் . மருதமுத்து என்பவரது வீட்டிற்குப் புதிய குடி தண்ணீர் இணைப்பை வழங்க வேண்டுமென்றும் மனுதாரருக்கு வீனாக அலைச்சல், மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்திய தற்காகவும், சேவைக் குறைபாடு காரணத்திற்காகவும் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) , தானாவயல் கிராமத்தின் ஊராட்சிச் செயலாளராகப் பணிசெய்யும் பூங்கோதை, தானாவயல் ஊராட்சி மன்றத்தின் தலைவராகவுள்ள
பிரேமா க/பெ . கணேசன் ஆகியோருக்கு நீதிமன்றத்தில் தலா ரூபாய்.15,000/- அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,
கருத்துகள்