நடிகரும் இயக்குநருமான நாம் தமிழர் கட்சி நடத்தும் செபஸ்தியான் சைமன் என்ற செந்தமிழன் சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி நடத்திய ஆட்டம்,
க்ளைமாக்ஸுக்கு ஒரு கட்சியின் மூத்த தலைவர் முயற்சியால் முடிவுக்கு வந்தது, சண்டைக்கு. முக்கிய காரணம் வீரலட்சுமி தான் என்பதும் வீரலட்சுமியை களத்தில் இறக்கியது யார் என்பதை பத்திரிக்கைகள் அறியும் என்றாலும் அதை மக்கள் அறியாத நிலை நள்ளிரவில் புகாரை வாபஸ் பெற்று பெங்களூர் புறப்பட்டார் விஜயலட்சுமி! அவரது பூர்வீகம் இலங்கை வாழ் பிள்ளை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திடீரென சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, 12 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வராக இருந்த காலஞ்சென்ற ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் கொடுத்த புகாரை தூசு தட்டி அதே பஞ்சாயத்தை மீண்டும் கூட்டினார். அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக,
தமிழர் முன்னேற்றப் படை என்ற வெகுஜன மக்கள் அறியாத கட்சியின் தலைவர் வீரலட்சுமியும் அவருடன் களத்துக்கு வந்தார். சென்னை காவல்துறையினரும் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர் பின் மருத்துவப் பரிசோதனை நடத்தியது நீதித்துறை நடுவர் முன்பு சி ஆர் பி சி 161 பிரிவு மூலம் வாக்குமூலம் கொடுத்தார் பின் சம்மன் அனுப்பி சீமானையும் விசாரணைக்கு அழைத்தது சென்னை காவல்துறை.
அந்த விசாரணையானது அப்போது நடிகர் சீமான் விஸ்வரூபம் காட்டினார். 12 ஆண்டுகளுக்கு முந்தைய வாபஸ் பெறப்பட்ட ஒரு வழக்கு விவகாரம் இப்போது ஏன் தூசு தட்டப்படுகிறது? காரணம் கேட்டார் நடிகர் சீமான். காவல்துறை விசாரணைக்குப் போக மறுத்தார். நீதிமன்ற ஒப்புதல் இருக்கிறதா? என எதிர்கேள்வியும் கேட்டார். நடிகர் சீமான் தன் பக்கம் உள்ள வாதங்களை அடுக்கிய நிலையில், வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே உக்கிரமான மோதலும் வந்தது இடதுசாரிகளின் ஜனநாயக மாதர் சங்கத்துக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே உக்கிர மோதல்- கைது என அன்றாடம் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் ஒரு ஒன்றுமில்லாத விஷயம் ஊடக நண்பர்கள் ஊதிப் பெரிது படுத்தியதால் நகர்ந்தது இந்த விவகாரம்.
இப்போது க்ளைமாக்ஸ் சண்டை நடக்கிறது : சீமான் ஒரு திரை நட்சத்திரம்.. விஜயலட்சுமி ஒரு திரைநட்சத்திரம்.. அதனால் என்னவோ க்ளைமாக்ஸ் காட்சிகள் ஆக்ஷன் ரேஞ்சில் தான் இருந்தன பார்ப்பதற்கு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி என என எத்தனை பேர் வந்தாலும் ஒருவரையும் விடாமல் வெளுத்து எடுத்தார். ஒரு கட்டத்தில் கட்சியாவது ஒன்றாவது வெட்டிப் போட்டு போயிடுவேன்.. என எகிரிப் பேசிய நிலையில் வீரலட்சுமியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவேன் என்றெல்லாம் க்ளைமாக்ஸ் ஆக்ஷன் காட்சிகளாக நடிகர் சீமான் பேட்டிகள் அமைந்திருந்தன.
இறுதி சீன் வந்தது : இதன் உச்சமாக யாருமே எதிர்பாராத திருப்பமாக, நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி நடிகர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக் காவல்நிலையத்தில் வந்து தெரிவித்தார். அப்போது பேசியவர் சீமானை எதிர்த்துப் போராட முடியவில்லை; எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என அறிவித்து விட்டுப் பெங்களூரு போய்விட்டார். திரைப்படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கலந்த ஒரு கலவையான படைப்பு போல இந்த விவகாரம் முடிந்துவிட்டது நடிகர் சீமான் Vs நடிகை விஜயலட்சுமி மோதல்! இவ்வளவு பிரச்சனைக்கும் முக்கிய காரணம் அந்த வீரலட்சுமி தான்.. அவரால் மனரீதியாக மிகுந்த வேதனை அடைந்தேன் என விரக்தியுடன் கூறிய. நடிகை விஜயலட்சுமி பெங்களூரு செல்கிறேன் இனி தமிழ்நாட்டிற்கு வர மாட்டேன் என்று நடிகைக்கான சாமுந்திரிகா லட்சனத்துடன் அதற்கான கிளிசரின் கண்ணீருடன் கிளம்பினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் மீது புகார் கூறி 12 ஆண்டுகள் போராடிய நடிகை விஜயலட்சுமி இரண்டாவது முறையாக தமது புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார். நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் நடிகர் சீமான் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்
சென்னை வளசரவாக்கம் காவல்துறை அளித்த விளக்கம் வருமாறு விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப காவல்துறை முடிவு
பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப முடிவு செய்யப்படுள்ளது,
நடிகை விஜயலட்சுமி புகாரை இரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது நடிகர் சீமான் தரப்பு பெங்களூரில் சொகுசாகவே வாழ்ந்துவிட்டு வாங்கிய பணத்தை செலவு செய்து முடித்ததும் திரும்ப வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது தான் நடிகை விஜி என்பது ஒரு தரப்பில் வாதம் . இப்போது வீரலட்சுமி ஒத்தைக்கு ஒத்தைன்றாங்கோ
ஆனா நீ உன் படையோட வா, நான் என் படையோட வான்றாங்கோ.
எது சரியா இருக்கும்?
ஷத்திரிய வன்னியர்ன்னு சொன்ன சொல்லோ டங் சிலிப் டைப்படிச்சதை பலர் சென்னை மொழியில் கண்டுகினீங்களா?
முதலியார் என் மாமனாருன்றாங்கோ, தன்னை வன்னியருன்றாங்கோ.
அப்போ இவங்க பிள்ளை என்ன ஜாதின்னு சொல்லுவாங்கோ?
இதுவே மக்கள் தற்போது விவாதிப்பதாகும்
சரி. விவகாரத்திற்கு வருவோம். எல்லோருக்கும் ஒரு சிறியதோ அல்லது பெரியதோ ஒரு கூட்டம் இருக்குன்னா நீங்கள் சம்பாதிங்க கூட இருக்கறவங்களும் ஜாதிகாரர்களும் ஒருத்தரை ஒருத்தரை ஆங்காங்கே அடித்துக் கொண்டு சாகணுமா?
இங்கு சிக்கலே அனைத்து தமிழ் ஜாதிகள் பெயரிலும் ஒளிந்துள்ள சில நாடகக் கூட்டங்கள் கொக்கரிப்பது தான்.வாழ்க்கை பயணத்தில் ஒரு முறை தவறு செய்யும் போது காலம் இன்னொரு வாய்ப்பை தரும்.அது நடிகை விஜலட்சுமிக்கும் வந்தது.
நாம அதுலயும் தவறு செய்யும் பட்சத்தில் அதிலிருந்து மீள ஒரு எச்சரிக்கையை அடையாளம் காட்டும்.அப்படித்தான் இப்போது அந்தத் தலைவர் வழி காட்டியுள்ளார்,
மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பட்சத்தில் மீளவே முடியாத சிக்கல்களையே காலம் இவர்களுக்குப் பரிசாக கொடுக்கும்....இது விஜயலெட்சுமிக்கும் பொருந்தும் தானே ...!?
கருத்துகள்