முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் சீமானுக்கு எதிரான புகாரை இரண்டாம் முறையாக வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி பெங்களூருக்கு ஓடடம்

நடிகரும் இயக்குநருமான நாம் தமிழர் கட்சி நடத்தும் செபஸ்தியான் சைமன் என்ற செந்தமிழன் சீமானுக்கு எதிராக  விஜயலட்சுமி நடத்திய ஆட்டம்,


க்ளைமாக்ஸுக்கு ஒரு கட்சியின் மூத்த  தலைவர் முயற்சியால் முடிவுக்கு வந்தது, சண்டைக்கு. முக்கிய காரணம்  வீரலட்சுமி தான் என்பதும் வீரலட்சுமியை களத்தில் இறக்கியது யார் என்பதை பத்திரிக்கைகள் அறியும் என்றாலும் அதை மக்கள் அறியாத நிலை நள்ளிரவில் புகாரை வாபஸ் பெற்று  பெங்களூர் புறப்பட்டார் விஜயலட்சுமி! அவரது பூர்வீகம் இலங்கை வாழ் பிள்ளை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திடீரென சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, 12 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வராக இருந்த காலஞ்சென்ற ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் கொடுத்த புகாரை தூசு தட்டி அதே பஞ்சாயத்தை மீண்டும் கூட்டினார். அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக,


தமிழர் முன்னேற்றப் படை என்ற வெகுஜன மக்கள்  அறியாத கட்சியின் தலைவர் வீரலட்சுமியும் அவருடன் களத்துக்கு வந்தார். சென்னை காவல்துறையினரும் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர் பின்  மருத்துவப் பரிசோதனை நடத்தியது நீதித்துறை நடுவர் முன்பு சி ஆர் பி சி 161 பிரிவு மூலம் வாக்குமூலம் கொடுத்தார்  பின் சம்மன் அனுப்பி சீமானையும் விசாரணைக்கு அழைத்தது சென்னை காவல்துறை.

அந்த  விசாரணையானது அப்போது நடிகர் சீமான் விஸ்வரூபம் காட்டினார். 12 ஆண்டுகளுக்கு முந்தைய வாபஸ் பெறப்பட்ட ஒரு வழக்கு விவகாரம் இப்போது ஏன் தூசு தட்டப்படுகிறது? காரணம் கேட்டார் நடிகர் சீமான். காவல்துறை விசாரணைக்குப் போக மறுத்தார். நீதிமன்ற ஒப்புதல் இருக்கிறதா? என எதிர்கேள்வியும்  கேட்டார்.         நடிகர் சீமான் தன் பக்கம் உள்ள வாதங்களை அடுக்கிய நிலையில், வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே உக்கிரமான  மோதலும் வந்தது இடதுசாரிகளின் ஜனநாயக மாதர் சங்கத்துக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே உக்கிர மோதல்- கைது என அன்றாடம் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் ஒரு ஒன்றுமில்லாத விஷயம் ஊடக நண்பர்கள் ஊதிப் பெரிது படுத்தியதால் நகர்ந்தது இந்த விவகாரம்.


இப்போது க்ளைமாக்ஸ் சண்டை நடக்கிறது : சீமான் ஒரு திரை நட்சத்திரம்.. விஜயலட்சுமி ஒரு திரைநட்சத்திரம்.. அதனால் என்னவோ க்ளைமாக்ஸ் காட்சிகள் ஆக்‌ஷன் ரேஞ்சில் தான் இருந்தன பார்ப்பதற்கு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி என என எத்தனை பேர் வந்தாலும் ஒருவரையும் விடாமல் வெளுத்து எடுத்தார். ஒரு கட்டத்தில் கட்சியாவது ஒன்றாவது வெட்டிப் போட்டு போயிடுவேன்.. என எகிரிப் பேசிய நிலையில் வீரலட்சுமியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவேன் என்றெல்லாம் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளாக நடிகர் சீமான் பேட்டிகள் அமைந்திருந்தன.


இறுதி சீன் வந்தது : இதன் உச்சமாக யாருமே எதிர்பாராத திருப்பமாக, நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி நடிகர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக் காவல்நிலையத்தில் வந்து தெரிவித்தார். அப்போது பேசியவர் சீமானை எதிர்த்துப் போராட முடியவில்லை; எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என அறிவித்து விட்டுப் பெங்களூரு போய்விட்டார். திரைப்படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கலந்த ஒரு கலவையான படைப்பு போல இந்த விவகாரம் முடிந்துவிட்டது நடிகர் சீமான் Vs நடிகை விஜயலட்சுமி மோதல்!  இவ்வளவு பிரச்சனைக்கும் முக்கிய காரணம் அந்த வீரலட்சுமி தான்.. அவரால் மனரீதியாக மிகுந்த வேதனை அடைந்தேன் என விரக்தியுடன் கூறிய. நடிகை  விஜயலட்சுமி பெங்களூரு செல்கிறேன் இனி தமிழ்நாட்டிற்கு வர மாட்டேன் என்று நடிகைக்கான சாமுந்திரிகா லட்சனத்துடன் அதற்கான கிளிசரின் கண்ணீருடன் கிளம்பினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் மீது புகார் கூறி 12 ஆண்டுகள் போராடிய நடிகை விஜயலட்சுமி இரண்டாவது  முறையாக தமது புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார்.  நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும்  நடிகர் சீமான் செப்டம்பர் மாதம்  18 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்

சென்னை வளசரவாக்கம் காவல்துறை  அளித்த விளக்கம் வருமாறு விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப காவல்துறை முடிவு 

பெண்கள்  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப முடிவு செய்யப்படுள்ளது, 

நடிகை விஜயலட்சுமி புகாரை இரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது நடிகர் சீமான் தரப்பு  பெங்களூரில்  சொகுசாகவே வாழ்ந்துவிட்டு  வாங்கிய பணத்தை செலவு செய்து முடித்ததும் திரும்ப வந்து காவல் நிலையத்தில்  புகார் கொடுப்பது தான் நடிகை விஜி என்பது ஒரு தரப்பில் வாதம் .  இப்போது வீரலட்சுமி ஒத்தைக்கு ஒத்தைன்றாங்கோ







ஆனா நீ உன் படையோட வா, நான் என் படையோட வான்றாங்கோ.

எது சரியா இருக்கும்?

ஷத்திரிய வன்னியர்ன்னு சொன்ன  சொல்லோ டங் சிலிப் டைப்படிச்சதை பலர் சென்னை மொழியில் கண்டுகினீங்களா?

முதலியார் என் மாமனாருன்றாங்கோ, தன்னை வன்னியருன்றாங்கோ.

அப்போ இவங்க பிள்ளை என்ன ஜாதின்னு சொல்லுவாங்கோ?

இதுவே மக்கள் தற்போது விவாதிப்பதாகும் 


சரி. விவகாரத்திற்கு வருவோம். எல்லோருக்கும் ஒரு சிறியதோ அல்லது பெரியதோ ஒரு கூட்டம் இருக்குன்னா நீங்கள் சம்பாதிங்க கூட இருக்கறவங்களும் ஜாதிகாரர்களும் ஒருத்தரை ஒருத்தரை ஆங்காங்கே அடித்துக் கொண்டு சாகணுமா?

இங்கு சிக்கலே அனைத்து தமிழ் ஜாதிகள் பெயரிலும் ஒளிந்துள்ள சில நாடகக் கூட்டங்கள் கொக்கரிப்பது தான்.வாழ்க்கை பயணத்தில் ஒரு முறை தவறு செய்யும் போது காலம்  இன்னொரு வாய்ப்பை தரும்.அது நடிகை விஜலட்சுமிக்கும் வந்தது.

 நாம அதுலயும் தவறு செய்யும் பட்சத்தில்  அதிலிருந்து மீள ஒரு எச்சரிக்கையை  அடையாளம் காட்டும்.அப்படித்தான் இப்போது அந்தத் தலைவர் வழி காட்டியுள்ளார்,

மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பட்சத்தில்  மீளவே முடியாத சிக்கல்களையே காலம் இவர்களுக்குப் பரிசாக கொடுக்கும்....இது விஜயலெட்சுமிக்கும் பொருந்தும் தானே ...!?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...