முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் சீமானுக்கு எதிரான புகாரை இரண்டாம் முறையாக வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி பெங்களூருக்கு ஓடடம்

நடிகரும் இயக்குநருமான நாம் தமிழர் கட்சி நடத்தும் செபஸ்தியான் சைமன் என்ற செந்தமிழன் சீமானுக்கு எதிராக  விஜயலட்சுமி நடத்திய ஆட்டம்,


க்ளைமாக்ஸுக்கு ஒரு கட்சியின் மூத்த  தலைவர் முயற்சியால் முடிவுக்கு வந்தது, சண்டைக்கு. முக்கிய காரணம்  வீரலட்சுமி தான் என்பதும் வீரலட்சுமியை களத்தில் இறக்கியது யார் என்பதை பத்திரிக்கைகள் அறியும் என்றாலும் அதை மக்கள் அறியாத நிலை நள்ளிரவில் புகாரை வாபஸ் பெற்று  பெங்களூர் புறப்பட்டார் விஜயலட்சுமி! அவரது பூர்வீகம் இலங்கை வாழ் பிள்ளை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திடீரென சென்னை வந்த நடிகை விஜயலட்சுமி, 12 ஆண்டுகளுக்கு முன்னர் முதல்வராக இருந்த காலஞ்சென்ற ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் கொடுத்த புகாரை தூசு தட்டி அதே பஞ்சாயத்தை மீண்டும் கூட்டினார். அப்போது நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக,


தமிழர் முன்னேற்றப் படை என்ற வெகுஜன மக்கள்  அறியாத கட்சியின் தலைவர் வீரலட்சுமியும் அவருடன் களத்துக்கு வந்தார். சென்னை காவல்துறையினரும் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தினர் பின்  மருத்துவப் பரிசோதனை நடத்தியது நீதித்துறை நடுவர் முன்பு சி ஆர் பி சி 161 பிரிவு மூலம் வாக்குமூலம் கொடுத்தார்  பின் சம்மன் அனுப்பி சீமானையும் விசாரணைக்கு அழைத்தது சென்னை காவல்துறை.

அந்த  விசாரணையானது அப்போது நடிகர் சீமான் விஸ்வரூபம் காட்டினார். 12 ஆண்டுகளுக்கு முந்தைய வாபஸ் பெறப்பட்ட ஒரு வழக்கு விவகாரம் இப்போது ஏன் தூசு தட்டப்படுகிறது? காரணம் கேட்டார் நடிகர் சீமான். காவல்துறை விசாரணைக்குப் போக மறுத்தார். நீதிமன்ற ஒப்புதல் இருக்கிறதா? என எதிர்கேள்வியும்  கேட்டார்.         நடிகர் சீமான் தன் பக்கம் உள்ள வாதங்களை அடுக்கிய நிலையில், வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே உக்கிரமான  மோதலும் வந்தது இடதுசாரிகளின் ஜனநாயக மாதர் சங்கத்துக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே உக்கிர மோதல்- கைது என அன்றாடம் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லாமல் ஒரு ஒன்றுமில்லாத விஷயம் ஊடக நண்பர்கள் ஊதிப் பெரிது படுத்தியதால் நகர்ந்தது இந்த விவகாரம்.


இப்போது க்ளைமாக்ஸ் சண்டை நடக்கிறது : சீமான் ஒரு திரை நட்சத்திரம்.. விஜயலட்சுமி ஒரு திரைநட்சத்திரம்.. அதனால் என்னவோ க்ளைமாக்ஸ் காட்சிகள் ஆக்‌ஷன் ரேஞ்சில் தான் இருந்தன பார்ப்பதற்கு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி என என எத்தனை பேர் வந்தாலும் ஒருவரையும் விடாமல் வெளுத்து எடுத்தார். ஒரு கட்டத்தில் கட்சியாவது ஒன்றாவது வெட்டிப் போட்டு போயிடுவேன்.. என எகிரிப் பேசிய நிலையில் வீரலட்சுமியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவேன் என்றெல்லாம் க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளாக நடிகர் சீமான் பேட்டிகள் அமைந்திருந்தன.


இறுதி சீன் வந்தது : இதன் உச்சமாக யாருமே எதிர்பாராத திருப்பமாக, நள்ளிரவில் நடிகை விஜயலட்சுமி நடிகர் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொள்வதாக் காவல்நிலையத்தில் வந்து தெரிவித்தார். அப்போது பேசியவர் சீமானை எதிர்த்துப் போராட முடியவில்லை; எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை என அறிவித்து விட்டுப் பெங்களூரு போய்விட்டார். திரைப்படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் கலந்த ஒரு கலவையான படைப்பு போல இந்த விவகாரம் முடிந்துவிட்டது நடிகர் சீமான் Vs நடிகை விஜயலட்சுமி மோதல்!  இவ்வளவு பிரச்சனைக்கும் முக்கிய காரணம் அந்த வீரலட்சுமி தான்.. அவரால் மனரீதியாக மிகுந்த வேதனை அடைந்தேன் என விரக்தியுடன் கூறிய. நடிகை  விஜயலட்சுமி பெங்களூரு செல்கிறேன் இனி தமிழ்நாட்டிற்கு வர மாட்டேன் என்று நடிகைக்கான சாமுந்திரிகா லட்சனத்துடன் அதற்கான கிளிசரின் கண்ணீருடன் கிளம்பினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் மீது புகார் கூறி 12 ஆண்டுகள் போராடிய நடிகை விஜயலட்சுமி இரண்டாவது  முறையாக தமது புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார்.  நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும்  நடிகர் சீமான் செப்டம்பர் மாதம்  18 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்

சென்னை வளசரவாக்கம் காவல்துறை  அளித்த விளக்கம் வருமாறு விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப காவல்துறை முடிவு 

பெண்கள்  வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்ப முடிவு செய்யப்படுள்ளது, 

நடிகை விஜயலட்சுமி புகாரை இரத்து செய்யக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது நடிகர் சீமான் தரப்பு  பெங்களூரில்  சொகுசாகவே வாழ்ந்துவிட்டு  வாங்கிய பணத்தை செலவு செய்து முடித்ததும் திரும்ப வந்து காவல் நிலையத்தில்  புகார் கொடுப்பது தான் நடிகை விஜி என்பது ஒரு தரப்பில் வாதம் .  இப்போது வீரலட்சுமி ஒத்தைக்கு ஒத்தைன்றாங்கோ







ஆனா நீ உன் படையோட வா, நான் என் படையோட வான்றாங்கோ.

எது சரியா இருக்கும்?

ஷத்திரிய வன்னியர்ன்னு சொன்ன  சொல்லோ டங் சிலிப் டைப்படிச்சதை பலர் சென்னை மொழியில் கண்டுகினீங்களா?

முதலியார் என் மாமனாருன்றாங்கோ, தன்னை வன்னியருன்றாங்கோ.

அப்போ இவங்க பிள்ளை என்ன ஜாதின்னு சொல்லுவாங்கோ?

இதுவே மக்கள் தற்போது விவாதிப்பதாகும் 


சரி. விவகாரத்திற்கு வருவோம். எல்லோருக்கும் ஒரு சிறியதோ அல்லது பெரியதோ ஒரு கூட்டம் இருக்குன்னா நீங்கள் சம்பாதிங்க கூட இருக்கறவங்களும் ஜாதிகாரர்களும் ஒருத்தரை ஒருத்தரை ஆங்காங்கே அடித்துக் கொண்டு சாகணுமா?

இங்கு சிக்கலே அனைத்து தமிழ் ஜாதிகள் பெயரிலும் ஒளிந்துள்ள சில நாடகக் கூட்டங்கள் கொக்கரிப்பது தான்.வாழ்க்கை பயணத்தில் ஒரு முறை தவறு செய்யும் போது காலம்  இன்னொரு வாய்ப்பை தரும்.அது நடிகை விஜலட்சுமிக்கும் வந்தது.

 நாம அதுலயும் தவறு செய்யும் பட்சத்தில்  அதிலிருந்து மீள ஒரு எச்சரிக்கையை  அடையாளம் காட்டும்.அப்படித்தான் இப்போது அந்தத் தலைவர் வழி காட்டியுள்ளார்,

மீண்டும் மீண்டும் தவறு செய்யும் பட்சத்தில்  மீளவே முடியாத சிக்கல்களையே காலம் இவர்களுக்குப் பரிசாக கொடுக்கும்....இது விஜயலெட்சுமிக்கும் பொருந்தும் தானே ...!?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்