நாம் தமிழர் சீமான் மீது நடிகை விஜயலெட்சுமி வைத்த ஒரே குற்றச்சாட்டுக்கு இரு வேறு வழக்குகளா என்பதே அரசியல் களம்
என்னைத் திருமணம் செய்தார்
வீடியோ அனுப்பி மிரட்டுகிறார்
திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி முன் நடிகை விஜயலட்சுமி 3 மணிநேரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 161 ன் படி வாக்குமூலம்: வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சட்ட நிபுணர்களுடன் காவல்துறை தீவிர ஆலோசனை செய்த நிலையில் வழக்குப்பதிவு
தன்னைத் திருமணம் செய்த பிறகு தற்போது அவரது கட்சியினர் மூலம் சீமான் மிரட்டி வருகிறார் என திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராகி 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.
பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி, பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சீமான் இயக்கத்தில் 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்தார். அதனால் இயக்குநரும் நடிகருமான சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும்
சீமான் விஜயலட்சுமியை மதுரை மீனாட்சி யம்மன் கோவிலில் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் . அதன் காரணமாக, தனக்கு மிகவும் பெரிய கஷ்டம் ஏற்பட்டாகவும் எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நடிகை விஜயலட்சுமி சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்ததைத் தொடர்ந்து விஜயலட்சுமி அளித்த புகாரின் படி, சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் அப்போதே சீமான் மீது ஐபிசி 417, 420, 354, 376, 506(1) மற்றும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்தனர்.
ஆனால், அப்போது அதிமுக ஆட்சி என்பதால் சீமான் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நடிகை விஜயலட்சுமி இயக்குநர் சீமானுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியதில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு சூழலில் விஜயலட்சுமி தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவர் அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சையிலிருந்த போது நடிகை விஜயலட்சுமியிடம் அவரது தற்கொலை முயற்சி குறித்து மாஜிஸ்திரேட் வாக்குமூலமும் பெற்றார். அப்போதும் அதிமுக ஆட்சி என்பதால் திருவான்மியூர் காவல் நிலையத்தில் சீமான் மீது நடவடிக்கைகள் எடுக்கவில்லை. என்பதாலும்.
நிலைமை கைமீறிச் செல்வதால், நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் நடத்தும் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான மதுரை செல்வம் என்பவர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி மாதம் ரூபாய் .50 ஆயிரம் தருவதாகவும், நடிகை விஜயலட்சுமியை மனைவியாகவும், கயல்விழியை துணைவியாகவும் வைத்து வாழ்க்கை நடத்துவதாக சீமான் கூறியதாகச் சமாதானம் செய்துள்ளார் எனவும் அதன்படி 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீமான் தரப்பு சொன்னபடி மாதம் ரூ.50 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளதாகவும் அதற்குப் பிறகு பணம் அனுப்பவில்லை. எனவும்
அது குறித்து நடிகை விஜயலட்சுமி கேட்ட போது, மதுரை செல்வம் மூலம் சீமான் ஒரு வீடியோ அனுப்பி மிரட்டியதாகவும், அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி மிரட்டியதாகவும் கூறப்படும் நிலையில் . அதிர்ச்சியடைந்த நடிகை விஜயலட்சுமி, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி இயக்குனர் சீமான் மீது மீண்டும் புகாரளித்தார். புகாரின் படி விசாரணை நடத்த இராமாபுரம் காவல்துறையினருக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டதன் படி தற்போது இராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியளித்த புகாரின் மீது இரண்டு தினம் முன்பு முதல் விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்டமாக நடிகை விஜயலட்சுமியை இராமாபுரம் காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து 8 மணி நேரம் விசாரணை நடத்திய போது, அவர், இயக்குனர் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறியுள்ளார். அதேநேரம், சீமான் மதுரையில் தங்கி இருந்த போது விஜயலட்சுமிக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து வரழைத்த ஆதாரங்கள், பணம், நகைகள் கொடுத்த ஆதாரங்கள், சீமான் தரப்பில் ஒவ்வொரு மாதமும் அளித்த பணத்திற்கான வங்கிக் கணக்கு ஆதாரங்களை அவர் அங்கு சமர்ப்பித்துள்ளதாகவும்.
அத்தோடு இல்லாமல், சீமானுக்கு வெளிநாடுகளிலிருந்து தங்கம் மற்றும் பணம் அதிகளவில் வந்ததற்கான பல ரகசியங்களையும் நடிகை நவிஜயலட்சுமி விசாரணையின் போது வாக்குமூலமாக அளித்ததாகத் தெரிகிறது . இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சீமான், இயக்குநரா
க இருந்தாலும், அவர் தற்போது தனியாகக் கட்சி நடத்தி வருகிறார். இதனால் அவர் மீது காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், காவல்துறையினர் தங்களிடம் அளித்த வாக்குமூலத்தை திருவள்ளூர் குற்றவியல் நடுவரான நீதிபதி முன்பு நடிகை விஜயலட்சுமி நேரில் பதிவு செய்ய நடவடிக்கையும் எடுத்தனர்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றக் கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு ஆஜராகி நடிகை விஜயலட்சுமி நேற்று முன் தினம் மதியம் 1.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி முன்பு அவர், சீமானுடன் எந்த ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது உடனிருந்த நபர்கள் யார் யார்? இருவரும் தங்கி இருந்த மதுரையில் உள்ள 3 நட்சத்திர தங்கும் விடுதி விவரங்கள், சீமானால் நிகழ்த்தப்பட்ட வன் கொடுமைகளுக்கான மருத்துவ ரசீதுகள் என அவரிடமிருந்த அனைத்து ஆதாரங்களையும் நீதிபதியிடம் அளித்ததாகவும், தன்னை நீதிமன்றத்திற்கு செல்லாதபடி இயக்குநர் சீமான் பல வழிகளில் தடுத்ததாகவும் அவர் நீதிபதியிடம் குற்றச்சாட்டாக கூறியதாகத் தெரிகிறது
அப்போது கூடுதல் நீதிபதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய ஆவணங்களுடன் நடிகை விஜயலட்சுமி பதில் அளித்தாகவும், தற்போது மதுரை செல்வம் மூலம் அனுப்பிய வீடியோவையும் ஆதாரமாக அளித்ததாகவும் தெரிவித்த நிலையில்
கூடுதல் நீதிபதி பவித்ரா முன்பு மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை அதாவது 3 மணி நேரம் நடிகை விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்கு பிறகு விஜயலட்சுமியை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து காவல்துறையினர் காரில் அழைத்துச் சென்றனர்.
சீமானுக்கு எதிராக வலுவான ஆதாரங்களுடன் மகளிர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியிடம் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளதால், சீமான் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதனால் ராமாபுரம் காவல்துறையினர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன் பிறகு நீதிபதியிடம் நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிகிறது.
மேலும் நடிகை விஜயலட்சுமி திருவள்ளூர் நீதிமன்றத்திற்கு வரும்போது அங்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமலிருக்க திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா மற்றும் நகர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பிரபல திரைப்பட இயக்குநரும், அரசியல் கட்சியின் தலைவருமான ஒருவர் மீது, பாலியல் புகார் எழுந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு பிரசாரம் செய்யும்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த விசாரணைக்காக ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி ஆஜராக சீமானுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நேற்று சீமான் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பூருக்கு சென்றிருந்தார். சம்மனை அவரிடம் வழங்க ஒரு சார்பு ஆய்வாளர் தலைமையிலான 3 காவலர்கள் காரில் ஈரோட்டிலிருந்து திருப்பூருக்குச் சென்றனர். அங்கு அவினாசி ரோட்டிலுள்ள ஒரு ஹோட்டலிலிருந்த. இயக்குநர் சீமானிடம் காநல்துறையினர் சம்மனை வழங்கினர்.
இந்த நிலையில் சீமான் திருப்பூரில் நிருபர்களைச் சந்தித்தபோது நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து கேட்டனர். அதற்கு அவர் ''என் மீதான அக்கறையில் இதை கேட்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. உன் மேல் வைக்கிற குற்றச்சாட்டு, விமர்சனம் உண்மை இல்லை என்றால் அதற்கு விளக்கம் சொல்லத் தேவையில்லை என்பது எனது கருத்து. ஒரு பெண் என்னை ஏமாற்றிவிட்டு புருஷனோட வாழ்ந்து கொண்டு இருக்கும் போது, நான் சமூகத்திடம் அந்த பெண் என்னை ஏமாற்றிவிட்டு போனது என்று சொன்னால் என்னை நீங்க காரித்துப்ப மாட்டீங்க. அதை ஏன் எல்லாரும் ரசிக்கிறீங்க? எனக்கு குடும்பம் இருக்கிறது. 2 பிள்ளைங்க இருக்கிறார்கள். ஒரு கனவு இருக்கிறது. யார் மனு கொடுத்தாலும் விசாரிக்க வேண்டியது காவல்துறை கடமை. அதை அவர்கள் செய்வார்கள். உண்மையிலேயே நான் குற்றவாளியாக இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று தான் சொல்கிறோம். அதற்குப் பயப்படுகிற ஆள் இல்லையே நான். என்ன வேறு ஊருக்கு ஓடிப்போயிட்டேனா? தேர்தல் வருவதால் என் மீது வீண்பழி சுமத்துகிறார்கள்'' என்றும் நான் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டு வருகிறேன். நீங்கள் 2 லட்சுமிகளைக் கொண்டு வந்து அவதூறுகளை வீசுகிறீர்கள்! -என்றார் சீமான்!
எத்தனை லட்சுமிகளை வைத்து அவதூறு பரப்பினாலும் அண்ணனை எதுவும் செய்ய முடியாது! எனத் தெரிவித்தவர் மற்றொரு வேறு ஒரு இடத்தில் உள்ள அவரது பதிவில்
நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து திமுக நேரடியாகக் களம் கண்டால், நாம் தமிழர் கட்சி அங்கு போட்டியிடாது. திமுகவுக்கு ஆதரவளிக்கும்: என கோயமுத்தூரில் சீமான் அளித்த பேட்டியைக் காணும் போது அவரது தடுமாற்றம் தெரிகிறது இதில் மக்களால் பேசி விவாதிக்கப்படும் அறியாத பொது நீதி உண்மை தெரிந்த அரசியல் அறிந்தவர்கள் பார்க்கும் பொதுநீதி என்பது இருவேறு இது நம்புகிற மாதிரியாகவா இருக்கிறது ?
நடிகரும் இயக்குநருமான நாம்தமிழர் கட்சி சீமான் மீது புகார் வழங்கிய உடனேயே திருவள்ளூர் மகளிர் நீதிபதியிடம் 3 மணி நேரம் வாக்குமூலம் நடிகை விஜயலெட்சுமி தருகிறார். காவல்துறை ஊட்டி விரைகிறது என்கிறார்கள். ஆனால் முன்னால் முதல்வர் காலஞ்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சியில் நடிகை விஜயலெட்சுமி கொடுத்த புகாரில் சீமான் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் அந்த வழக்கின் நிலை தற்போது என்ன என்பது இங்கு உற்று நோக்குவது சட்டம் அறிந்த நபர்களின் பணியாகும், ஒரே குற்றச்சாட்டுக்கு இருவேறு வழக்குகள் எப்படி வரும் என்ற வினா ? இணிமேல் எழும், அதற்கு அதை மேலெடுத்துச் செல்ல நாம் தமிழர் கட்சியில் சட்ட வல்லுநர்கள் இல்லை போல என்பது இங்கு நமது பார்வையில் தெரியும்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு அரங்கக் கூட்டத்தில் பேசியது ஒரு இரவிலேயே டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் புகார் தருகிறார்.
நடிகரும் இயக்குநருமான அரணையூர் செபஸ்தியான் சைமன் என்ற சீமான் நடத்தும் நாம் தமிழர் என்ற காலம்சென்ற சி.பா ஆதித்தனார் வளர்த்த அதே பெயர் உள்ள கட்சி மூன்றாவது நான்காவது கட்சியாக இருந்த நிலையில் அது இரண்டாவது கட்சியாக மாறுவதை அதிமுகவின் எடப்பாடி கே.பழனிச்சாமியோ அல்லது பாஜகவோ விரும்பவில்ல. காங்கிரஸ் சார்ந்த இந்தியா கூட்டணியில் வலுவாக திமுக இருப்பதால் இதற்கு முட்டுக்கட்டை போட பாஜக விரும்புகிறது என்பது மட்டும் புரிகிறது . ஆனால் அரசின் உளவுத்துறையை விட பா ஜ கவிற்கு வேலை செய்வது யார்? இங்கு
என்னதான் நடக்கிறது? என்பது மக்கள் அறிவதே இங்கு பொது நீதியாகும்.
கருத்துகள்