முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும் பங்கு மாநகராட்சி ஆணையர் தகவல்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன:


பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருமான  திரு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


 சென்னை சாஸ்திரி பவனில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய மக்கள் தொடர்பகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள  மக்கள் தொடர்பக அலுவலர்களுக்கான இரண்டு நாள் மண்டலப் பயிலரங்கை இன்று (06.09.2023) தொடங்கிவைத்து அவர் உரையாற்றினார்.  ஊடகங்கள் இன்று பலவிதமாக வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றில் செய்திகளும் வெகு வேகமாகப் பரவி வருகின்றன.  மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றுள்ள ஊடகங்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இதனை மக்கள் தொடர்பக அலுவலர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக, அனைத்து மக்களுக்குமான திட்டங்கள், குறிப்பாக பெண்கள், மாறிய பாலினத்தினர் மற்றும் முதியோர்களுக்கான திட்டங்கள் உள்ளன. இவற்றை உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமாகும்.  மாணவர்கள், விவசாயிகள், சமூகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரையும் இதற்கான பணிகளில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று திரு ராதாகிருஷ்ணன் கூறினார்.

கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் அதனை மட்டுப்படுத்த உதவியது, வல்லுநர்கள் மற்றும் அரசுகளின்  முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தன என்றாலும்,  மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் பெரும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. எனவே, மாறி வரும் சூழலுக்கேற்ப அனைத்து வகையான ஊடகங்களையும் நல்ல, மக்களுக்குப் பயன்தரும் தகவல்களை கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும் என்று திரு ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இந்தப் பயிலரங்கில் தலைமையுரையாற்றிய பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மக்கள் தொடர்பகத்தின் தென்மண்டல தலைமை  இயக்குநர் பொறுப்பு வகிக்கும் திரு வி பழனிச்சாமி பேசுகையில், மக்களிடையே நடத்தை மாற்ற தகவல் தொடர்பு மிகவும் இன்றியமையாதது என்றார். புதிய நடைமுறைகளை  ஏற்பதில் தயக்கம் காட்டுவோரின்  சதவீதம் 16-ஆக மட்டுமே உள்ளது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. எஞ்சிய 84 சதவீத மக்கள் உடனடியாகவோ அல்லது படிப்படியாகவோ ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பெற்றிருக்கிறார்கள் என்பதால் இவர்களை பயன்படுத்தி வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது மக்கள் தொடர்பக அலுவலர்களின் பணியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

9-ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் ரூ.  1,25,000 வரை  படிப்பு உதவித்தொகை கிடைக்கின்ற பிரதமரின் யசாஸ்வி திட்டம் பற்றி குறிப்பிட்ட திரு பழனிச்சாமி, இது போன்ற எளிய மக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்றார்.

இந்தப் பயிலரங்கின் நோக்கத்தை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக, மத்திய மக்கள் தொடர்பகக்  கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, தென் மண்டலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த ஆண்டு 70 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகக் கூறினார். புகைப்பட கண்காட்சிகள், இசை, பாடல், நிகழ்வுகள், கருத்தரங்குகள் போன்ற பல வடிவங்களில் நடத்தப்பட்ட  நிகழ்ச்சிகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களிடம் மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் திட்டங்கள் தவிர, இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு என்பதாலும், சத்துணவு சம்பந்தப்பட்டது என்பதாலும், சிறுதானியங்களின் பயன் குறித்து மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது என்று அவர் கூறினார். இதேபோல், லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற இயக்கத்தையும் மக்கள் தொடர்பகம் முன்னெடுத்துச் செல்கிறது என்று திரு அண்ணாதுரை குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை இயக்கம் காரணமாக கிராமப்பகுதிகளில் கூட திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். தொடக்க நிகழ்வின் நிறைவாக, மத்திய மக்கள் தொடர்பகத்தின் பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.

இந்த இரண்டு நாள் பயிலரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட தென் மண்டலத்தில் உள்ள மக்கள் தொடர்பக அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...