முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும் பங்கு மாநகராட்சி ஆணையர் தகவல்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன:


பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும், மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளருமான  திரு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


 சென்னை சாஸ்திரி பவனில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், மத்திய மக்கள் தொடர்பகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள  மக்கள் தொடர்பக அலுவலர்களுக்கான இரண்டு நாள் மண்டலப் பயிலரங்கை இன்று (06.09.2023) தொடங்கிவைத்து அவர் உரையாற்றினார்.  ஊடகங்கள் இன்று பலவிதமாக வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றில் செய்திகளும் வெகு வேகமாகப் பரவி வருகின்றன.  மக்களிடையே அதிக கவனத்தைப் பெற்றுள்ள ஊடகங்கள் மூலமாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். இதனை மக்கள் தொடர்பக அலுவலர்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக, அனைத்து மக்களுக்குமான திட்டங்கள், குறிப்பாக பெண்கள், மாறிய பாலினத்தினர் மற்றும் முதியோர்களுக்கான திட்டங்கள் உள்ளன. இவற்றை உரியவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியமாகும்.  மாணவர்கள், விவசாயிகள், சமூகத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோரையும் இதற்கான பணிகளில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று திரு ராதாகிருஷ்ணன் கூறினார்.

கொரோனா நோய் தொற்றுக் காலத்தில் அதனை மட்டுப்படுத்த உதவியது, வல்லுநர்கள் மற்றும் அரசுகளின்  முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தன என்றாலும்,  மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் பெரும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. எனவே, மாறி வரும் சூழலுக்கேற்ப அனைத்து வகையான ஊடகங்களையும் நல்ல, மக்களுக்குப் பயன்தரும் தகவல்களை கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும் என்று திரு ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இந்தப் பயிலரங்கில் தலைமையுரையாற்றிய பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மக்கள் தொடர்பகத்தின் தென்மண்டல தலைமை  இயக்குநர் பொறுப்பு வகிக்கும் திரு வி பழனிச்சாமி பேசுகையில், மக்களிடையே நடத்தை மாற்ற தகவல் தொடர்பு மிகவும் இன்றியமையாதது என்றார். புதிய நடைமுறைகளை  ஏற்பதில் தயக்கம் காட்டுவோரின்  சதவீதம் 16-ஆக மட்டுமே உள்ளது என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. எஞ்சிய 84 சதவீத மக்கள் உடனடியாகவோ அல்லது படிப்படியாகவோ ஏற்றுக்கொள்ளும் மனநிலையை பெற்றிருக்கிறார்கள் என்பதால் இவர்களை பயன்படுத்தி வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது மக்கள் தொடர்பக அலுவலர்களின் பணியாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

9-ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் ரூ.  1,25,000 வரை  படிப்பு உதவித்தொகை கிடைக்கின்ற பிரதமரின் யசாஸ்வி திட்டம் பற்றி குறிப்பிட்ட திரு பழனிச்சாமி, இது போன்ற எளிய மக்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்றார்.

இந்தப் பயிலரங்கின் நோக்கத்தை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக, மத்திய மக்கள் தொடர்பகக்  கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை, தென் மண்டலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த ஆண்டு 70 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகக் கூறினார். புகைப்பட கண்காட்சிகள், இசை, பாடல், நிகழ்வுகள், கருத்தரங்குகள் போன்ற பல வடிவங்களில் நடத்தப்பட்ட  நிகழ்ச்சிகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களிடம் மக்கள் நலத்திட்டங்களின் பயன்கள் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் திட்டங்கள் தவிர, இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு என்பதாலும், சத்துணவு சம்பந்தப்பட்டது என்பதாலும், சிறுதானியங்களின் பயன் குறித்து மக்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது என்று அவர் கூறினார். இதேபோல், லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை என்ற இயக்கத்தையும் மக்கள் தொடர்பகம் முன்னெடுத்துச் செல்கிறது என்று திரு அண்ணாதுரை குறிப்பிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை இயக்கம் காரணமாக கிராமப்பகுதிகளில் கூட திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் கூறினார். தொடக்க நிகழ்வின் நிறைவாக, மத்திய மக்கள் தொடர்பகத்தின் பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.

இந்த இரண்டு நாள் பயிலரங்கில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட தென் மண்டலத்தில் உள்ள மக்கள் தொடர்பக அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்