முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2023 அக்டோபர் 7 முதல் 9 வரை சாகர் பரிக்ரமாவின், 9-வது கட்டம்


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2023 அக்டோபர் 7 முதல் 9 வரை நடைபெறவுள்ள சாகர் பரிக்ரமாவின், 9-வது கட்டத்தை மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைக்கிறார்



மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் சாகர் பரிக்ரமாவின் 9-வது கட்டத்தை அக்டோபர் 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தொடங்கி வைக்கின்றனர். புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 8 கடலோர மாவட்டங்களிலும், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் நடைபெறும் இந்த சாகர் பரிக்ரமாவில் இரண்டு மத்திய அமைச்சர்களும், முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

சாகர் பரிக்ரமாவின் 9-வது கட்டப் பயணத்தின் போது, திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் டாக்டர் எல்.முருகன் மீனவர்களுடன் கலந்துரையாடுகின்றனர். பிரதமரின் மத்சய சம்பட யோஜனா,  மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், கிசான் கடன் அட்டை மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான சான்றிதழ்கள் மற்றும்  ஒப்புதல் ஆணைகளை மீனவர்கள் மற்றும் பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்க உள்ளனர்.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை திட்டங்களின் செயலாக்கங்களில் உள்ள  முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் ஆய்வு செய்கின்றனர்.

07.10.2023 அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம், 08.10.2023 அன்று பூம்புகார் மீன்பிடித் துறைமுகம் மற்றும் கடலூர் மீன்பிடித் துறைமுகம் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்டுள்ள விழாக்களிலும் இரு அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த   பரிக்ரமா பயணத்தின் போது, பிரதமரின் மத்சய சம்பட யோஜனா, அரசுத் திட்டங்கள், இ-ஷ்ரம் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

சாகர் பரிக்ரமா என்பது நாட்டின் அனைத்து கடலோரப் பகுதியிலும் உள்ள மீனவ சமூகத்தை சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும். மீனவர்களின் பிரச்சினைகள், அனுபவங்கள் மற்றும் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

சாகர் பரிக்ரமா 9-வது கட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீன்வளத் துறை அதிகாரிகள், மாவட்ட அலுவலர்கள், மத்திய அரசின் மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், இந்திய கடலோர காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு மையம், தேசிய மீன்வள அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப மற்றும் பயிற்சி நிறுவனம், மத்திய மீன்வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து புதுச்சேரி உள்ளிட்ட பிற பகுதிகள் வழியாக சென்னை சென்றடையும் சாகர் பரிக்ரமா பயணத்தில் மீனவர்கள், மீனவ பிரதிநிதிகள், மீன் வளர்ப்போர், தொழில் முனைவோர், மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், அறிவியலாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1400 ஹெக்டேர் உள்நாட்டு நீர்ப்பரப்பு குளம் மற்றும் கண்மாய்கள் மீன்பிடித்தல் மற்றும் மீன் வளர்ப்பு ஆகிய இரண்டிற்கும் ஏற்றதாக உள்ளது. 800 ஹெக்டேர் உவர்நீர்ப் பகுதிகளில் உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது.  இது நாட்டிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை மாநிலமாகும். இம்மாநிலம் கடல், உவர்நீர் மற்றும் உள்நாட்டு மீன்வளம் ஆகியவற்றில் செழுமையானதாகவும் மீன் பிடிப்பு மற்றும் வளர்ப்புக்கு ஏற்றதாகவும் உள்ளது. மாநிலத்தின் கடல் மீன் உற்பத்தி (2021-22) 5.95 இலட்சம் மெட்ரிக் டன் ஆகும். இதில் ரூ. 6,559.64 கோடி மதிப்புள்ள 1.14 லட்சம் மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 5,830 விசைப்படகுகள் மற்றும் 45,685 பாரம்பரிய மீன்பிடி படகுகள் மூலமாக மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் பதிவு 4,41,977 கடல் மீனவர்கள் பதிவு செய்துள்ளனர். 10.48 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு இத்தொழில் உறுதுணையாக உள்ளது

தமிழ்நாட்டின் வளமான மீன்வளம் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நேரடியாகவும் துணை நடவடிக்கைகளிலும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குகிறது. 2021-22 ஆம் ஆண்டில், மாநில விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இத்துறையின் பங்களிப்பு 5.78 சதவீதம் ஆகும். 2021-22 ஆம் ஆண்டில் 1.14 இலட்சம் மெட்ரிக் டன் மீன் மற்றும் மீன் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் அந்நியச் செலாவணியில் மீன்வளத் துறையின் பங்கு ரூ. 6,559.64 கோடியாக இருந்தது. மீன்வளத் துறை, மீனவர்களின் வாழ்வாதாரமாக இருந்து சமூகத்தில் பெருமளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, தேசிய உணவுப் பாதுகாப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது அத்துடன் புதுச்சேரிக்கு அந்நியச் செலாவணி வருவாயை வழங்கும் ஒரு முக்கிய துறையாக  இது மாறியுள்ளது.

சாகர் பரிக்ரமாவின் முதல் எட்டு கட்டங்கள் குஜராத், டையூ மற்றும் டாமன், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் மற்றும்  நிக்கோபார் உள்ளிட்ட 8 கடலோர மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4,115 கிலோ மீட்டர் பயணத்தைக் கொண்டதாக அமைந்தது. அதில்  அந்த கடலோரப் பகுதி முழுவதும் உள்ள மீனவ மக்கள், மீன் பண்ணையாளர்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான மத்திய அரசின் முன்முயற்சியை எடுத்துக் காட்டியது. பிரதமரின்  மத்சய சம்பட யோஜனா, கிசான் கடன் அட்டை போன்ற அரசு திட்டங்களால் பல்வேறு மீன்வளத் திட்டங்கள் மற்றும் இதர திட்டங்களால்  மீனவ சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுவதற்கு சாகர் பரிக்ரமா வகை செய்கிறது. நிலையான சமநிலையை மையமாகக் கொண்டு பல்வேறு மீன்வளத் திட்டங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கும், பொறுப்பான மீன்வளத்தை ஊக்குவிப்பதற்கும், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் இது முக்கிய பங்காற்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு