முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சாகர் பரிக்ரமா

 சாகர் பரிக்ரமா: களத்தில் மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒரு வெற்றிகரமான பயணம்

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் மீன்பிடிப் படகில் மாயமான மீனவர்களை மீட்கும் பணியை விரைவுபடுத்த


மத்திய அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்

சாகர் பரிக்ரமாவின் முந்தைய கட்டத்தின் போது குளச்சலில் அவரைச் சந்தித்த உள்ளூர் மீனவர் ஒருவரிடமிருந்து படகு கவிழ்ந்தது குறித்து அவருக்கு குறுஞ்செய்தி வந்தத

2023 அக்டோபர் 8 ஆம் தேதி காலை 08.30 மணி முதல் இந்திய கடற்படையின் இரண்டு கப்பல்கள் மற்றும் இந்திய கடலோரக் காவல்படையின் ஒரு கப்பலும் மீட்புப் பணிகளை தொடங்கின.

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினரின் மீட்பு நடவடிக்கையில் உயிரிழந்த மீனவர் ஒருவரின் உடல் மீட்பு

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் சாகர் பரிக்ரமா பயணம் என்ற மாபெரும் மீனவர் மற்றும் மீன் விவசாயிகளை சந்திக்கும் திட்டம் மார்ச் 2022 முதல் குஜராத்திலிருந்து மேற்கு வங்கம் வரை சுமார் 8000 கி.மீ நீளமுள்ள கடல் மார்க்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குஜராத்தின் மாண்டவியில் தொடங்கி புதுச்சேரியின் மாஹே மற்றும் 8 கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 8 கட்டங்களாக 68 இடங்களில் 4676 கி.மீ தூரம் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் இணையமைச்சர்கள் இதுவரை பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒன்பதாம் கட்ட பயணம் நடைபெற்று வருகிறது. பயணத்தின் இரண்டாம் நாளான இன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் பூம்புகார் ஆகிய இடங்களில் மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா, இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர் வழங்கினர்.



மீனவர்களை அவர்களின் வீட்டு வாசலில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளைப் புரிந்துகொள்வது, நிலையான மீன்பிடிப்பை ஊக்குவித்தல் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் திட்டங்களை கொண்டு செல்வதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.

இதுவரை இந்திய அரசால் செயல்படுத்தப்படும் மீன்வளம் தொடர்பான திட்டங்கள்,  திட்டங்கள் குறித்த தகவல்களைப் பரப்புவதற்கும், சிறந்த நடைமுறைகளை முன்னிலைப்படுத்துவதற்கும், பொறுப்பான மீன்வளத்தை ஊக்குவிப்பதற்கும், அனைத்து மீனவ மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் முக்கிய பங்கு வகித்துள்ளது.






மீனவர்களுடனான இந்த உரையாடல்கள், கள நிலவரங்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், கிராம அளவிலான கள நிலவரங்களை பார்வையிடுவதற்கும், அரசாங்க மானியங்கள் மற்றும் முன்முயற்சிகள் களத்திற்கும் தேவைப்படும் பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதற்கு இருவழி தகவல்தொடர்பு நிறுவப்பட்டுள்ளன.

சாகர் பரிக்ரமாவின் போது, மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசின் மீன்வளத் துறை, மாநில அரசு அதிகாரிகளுடன் மீனவர்கள் தங்கள் வீட்டு வாசலில் உரையாடும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

சாகர் பரிக்ரமாவின் முந்தைய கட்டத்தின் போது குளச்சலில் தன்னை  சந்தித்த உள்ளூர் மீனவர் ஒருவரிடமிருந்து படகு கவிழ்ந்தது குறித்து  மத்திய அமைச்சருக்கு குறுஞ்செய்தி வந்தது. குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் மீன்பிடிப் படகில் மாயமான மீனவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வத்துறை  அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா உடனடியாக உத்தரவு பிறப்பித்தார்.

சாகர் பரிக்ரமாவின் தற்போதைய கட்டத்தில் மீனவர்களுடன் உரையாடிய  மத்திய அமைச்சர், குளச்சலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததால் 3 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவித்தார்.

துரதிர்ஷ்டவசமாக 3 மீனவர்களில் ஓருவர் இறந்தநிலையில், மற்ற 2 மீனவர்களையும் காணவில்லை. காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்கும் மீட்பதற்கும் அவர்களது குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீனவரின் உடலை  மீட்கும்படி கடற்படை நீச்சல் வீரர்களுக்கு  அமைச்சர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். மீனவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.




கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், அரசு மீனவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும், அவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார். மீனவர்களை நேரில் சந்திப்பது அவர்களின் கோரிக்கைகள் மட்டுமின்றி அவர்களிடமிருந்து ஆலோசனைகளையும் கேட்க முடிகிறது என்றார்.

அரசு ஒதுக்கும் நிதி அனைத்தும் மீனவர்களை சென்றடைவதை உறுதி செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  அதனைத் தொடர்ந்து புதுச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்களுடன் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அமைச்சர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.மேலும் 









புதுச்சேரியில் ரூ.53.39 கோடியில் மீன்பிடி துறைமுக திட்டம் உள்பட 3 உள்கட்டமைப்பு திட்டங்களை மத்திய மீன் வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்திய அரசின், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மூலம் சாகர் பரிக்கரமா 9வது பயண திட்டம், PMMSY உள்ள கட்டமைப்பு திட்டங்களை துவக்கி வைத்தல், மீனவர்களுடன் கலந்துரையாடல் மீனவர்களுக்கான மத்திய மாநில நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபலா தலைமையில் புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இன்று (08.10.2023) மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது 





இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர். (திருமதி) தமிழிசை சௌந்தரராஜன்,மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் L.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். புதுச்சேரி முதலமைச்சர் திரு.N.ரங்கசாமி ள் விழாவினை துவக்கிவைத்து தலைமையுரையாற்றி மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில்  புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர். திரு. R.செல்வம் ,  உள்துறை அமைச்சர் திரு.A.நமச்சிவாயம்,  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு.K.லட்சுமிநாராயணன் ,  விவசாயத்துறை அமைச்சர் திரு.C.ஜெயக்குமார்.  குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், திரு.AK.சாய்.ஜே. சரவணன் குமார்.  சட்டமன்ற உறுப்பினர் திரு. ப.லட்சுமிகாந்தன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், மீன்வளத்துறை இயக்குநர் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும், இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக கீழ்கண்ட PMMSY உள்கட்டமைப்பு திட்டங்களை  மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபலா துவக்கிவைத்தார்.

1) தேங்காய்திட்டில் (அரிக்கமேடு) ரூ.53.39 கோடி மதிப்பிலான மீன்பிடி துறைமுக விரிவாக்க/கட்டுமான திட்டம்.


2) பெரிய காலாபட்டில் ரூ.20.14கோடி மதிப்பிலான மீன் இறங்குதளம் அமைத்தல்.

3) நல்லவாடில் ரூ.18.94 அமைத்தல். கோடி மதிப்பிலான மீன் இறங்குதளம் மையம்

வ எண்

தொகை

கீழ்காணும் மத்திய அரசு நலத்திட்ட உதவிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர். (திருமதி) தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர்.திரு.L.முருகன் ஆகியோர்  வழங்கினார்

1.           2 நபருக்கு குளிரூட்டப்பட்ட கனரக வாகனம் (Insulated Vehicle) மானிய விலையில் வழங்கினார்

ரூ.20.00 (லட்சம்)

2

1140 மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை (KCC) வழங்கினார்.

ரூ.3.01 (கோடி)

கீழ்காணும், மாநில அரசு நலத்திட்ட உதவிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் திரு. K.லட்சுமிநாராயணன்  முன்னிலையில், முதலமைச்சர் திரு. N. ரங்கசாமி  வழங்கினார்.

3 புதுச்சேரி யூனியன் பிரதேச மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணமாக மீனவ குடும்பம் ஒன்றிற்கு ரூ. 3,000/- வீதம் சுமார் 18504 எண்ணிகையிலான மீனவ குடும்பங்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது 

5.55. (கோடி)

2023-24ஆம் ஆண்டிற்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.6,500/- வீதம் இரண்டாவது கட்டமாக 1010 மீனவ குடும்பங்களுக்கு ரூ.65,65,000/- அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படவுள்ளது.

ரூ.65.65 லட்சம்

இயற்கை சீற்ற காலங்களில் சேதமடைந்த படகு/வலைகளுக்கு, மற்றும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு பாண்டிச்சேரி மீனவர் நலம் மற்றும் துயர் துடைப்பு சங்கத்தின் மூலம் நிவாரணமாக 504 மீனவர்களுக்கு ரூ.49.52 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது

ரூ.49.52 லட்சம்

ரூ.6.70 கோடி

இந்நிகழ்ச்சியில மீன்வளத்துறை இயக்குநர் திரு.A.முகமது இஸ்மாயில்  நன்றியுரையாற்றினார். மீன்வளத்துறை இணை இயக்குநர் திரு.K.தெய்வசிகாமணி , துறை அதிகாரிகள், புதுச்சேரி பகுதியை சேர்ந்த மீனவ கிராமபஞ்சாயத்து தலைவர்கள், மீனவ கூட்டுறவு சங்கத்தினர்கள், விசைப்படகு மற்றும் FRP விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மீனவ நலச்சங்கங்கள் மற்றும் ஏராளமான மீனவபெருமக்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு