நாகப்பட்டினம் காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து சேவை
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது; மத்திய அமைச்சர் சர்பானந்த சொனோவால் தகவல்
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே கப்பல் போக்குவரத்தினை 14 அக்டோபர் 2023 அன்று மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சர் சார்பானந்த சொனோவால் தொடங்கி வைத்தார்.
சேவையை தொடங்கி வைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இந்தியா - இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து மூலமாக தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள். கப்பலின் இந்த 3 மணிநேரப் பயணம் மிகுந்த மகிழ்ச்சியினை கொடுக்கும். இந்த கப்பல் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான மக்கள் தொடர்பினையும் நல்லுறவுவினையும் வளர்ப்பதாக உள்ளது. இந்தப் பயணம், கடலில் உள்ள இயற்கை சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் நிலையில் நல்லமுறையில் அமையும். இதன் மூலம் இலங்கை இந்தியா இடையே கலாச்சார உறவு மற்றும் வர்த்தகம் பெருகும் வாய்ப்புள்ளது.
குறைந்த செலவிலான இந்தப் பயணத்தின் மூலம் இருநாட்டு மக்களும் விரைவாக பயணிக்க முடியும் எனவும் சுற்றுலாத்துறையும் நன்கு வளர்ச்சியடையும் என்றார். இதன் மூலம் இருநாட்டு மக்களும் நல்ல பயனடைவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரவிக்கிறோம். பிரதமரின் தொலைநோக்கு மற்றும் சிறப்புக் கவனம் மற்றும் ஒத்துழைப்பு
ஆகியவற்றால் இந்த கப்பல் போக்குவரத்து சாத்தியமானது என்றார். இதனால் அனைத்து தரப்பு முன்னேற்றங்களும் இருநாடுகளுக்கும் ஏற்படும் என்றார்.தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் சேவை தொடங்கியதன் தொடக்க விழா காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசி புதிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில்
சமீபத்தில் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்ததையடுத்து இருநாடுகளிடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி தமிழ்நாட்டின் நாகபட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதையடுத்து கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்தில் கப்பல் தயாரிக்கப்பட்டது. செரியாபாணி எனப் பெயரிடப்பட்டுள்ளது ஏற்கனவே இயங்கிய கப்பல் ராமானுஜம் இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்ட நிலையில் இந்தக் கப்பல் நாகபட்டினம் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டதன் பிறகு 2 நாட்கள் மட்டும் சோதனை வெள்ளோட்டம் நடந்ததையடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி கப்பல் சேவை தொடங்குவதாக இருந்த நிலையில் இறுதி நேரத்தில் கப்பல் சேவை தொடங்கும் விழா தள்ளிவைக்கப்பட்டதையடுத்து தற்போது நாகபட்டினம் துறைமுகம்-இலங்கையின் காங்கேசன் துறைமுகத்துக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டது. நாகை துறைமுகத்திலிருந்து மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த் சோனாவால் , தமிழ்நாடு மாநில அமைச்சர்கள் ஏ.வ.வேலு, எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்று பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டவர்கள் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்ற விழாவில்
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்தியா இலங்கையில் அமல்படுத்தும் திட்டங்கள் அந்த மக்களை வளர்ச்சியடைய செய்து வருகிறது. இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் பல திட்டங்களை இந்தியா செய்துள்ளது. காங்கேசன் துறைமுகத்தை இந்தியா அரசு வளப்படுத்தி வருகிறது. இலங்கையின் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்க இருப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது.மேலும் ஜாப்னா பண்பாட்டு மையத்தை அமைத்து கொடுத்துள்ளோம். பல அவசர உதவி மையங்களை அமைத்து வழங்கப்பட்டுள்ளது. டிக்கோயாவில் பன்னோக்கு மருத்துவமனையை அமைத்து கொடுகக்கிறோம். அனைவரோடு இணைந்து அனைவரின் வளர்ச்சிக்காக பயணித்தல் என்ற தொலைநோக்கு பார்வையுட்ன செயல்பட்டு வருகிறோம்.
ஜி20 உச்சி மாநாட்டில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்தை கூறினோம். அதன்படி தற்போது செயல்பட்டு வருகிறோம். ஜி20 உச்சிமாநாட்டின் இந்தியா, மத்தி கிழக்கு நாடுகள், சிரியா வரை பொருளாதார காரிடார் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இது அந்த நாடுகளின் பொருளாதார நிலையை வெகுவாக முன்னேற்றும். இதனால் இருநாடுகள் இணைக்கப்படும்.தற்போதைய இந்த கப்பல் சேவை (நாகை-காங்கேசன் துறைமுகம் கப்பல் சேவை) தொடங்குவதற்காக இலங்கை அதிபர், மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதன்பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்ப்படும். இலங்கையுடன் சேர்ந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக உள்ளது. நன்றி'' என்றார் இலங்கை காங்கேசந்துறைக்கு நாகப்பட்டினத்தில் இருந்து இன்று தொடங்கப்பட இருந்த பயணிகள் கப்பல் சேவை 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது துவங்கியது
150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணிகள் கப்பல் சேவை நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல் தொலைவிலிருக்கும் இலங்கையின் காங்கேசந் துறைமுகத்திற்குச் செல்லும் என கடந்த சில வாரங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை மற்றும் வெளியுறவுத் துறை மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலமாக நாகப்பட்டினம் துறைமுக கால்வாயை தூர்வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இது தொடர்பாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை முன்பே ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவிக்கையில், "நாகப்பட்டினம் சிறு துறைமுகத்திலிருந்து, 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கைகள்
“சிரியா பாணி”.. முதல் பயணம் 12. ஆம் தேதி ஒத்திவைத்த நிலையில்
இலங்கை காங்கேசந்துறைக்கு நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கப்பட்டது . மேலும், இந்தப் பயணியர் கப்பல் பயணம், வெளிநாட்டுப் பயணம் என்பதால் மத்திய அரசின் தொழிற்துறை பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி , தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினைத் துவக்க மத்திய அரசு உத்தேசித்த நிலையில்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணிகள் கப்பல் போக்குவரத்து, இலங்கை மக்கள் குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்கள், வணிகம், ஆன்மீகம் மற்றும் சுற்றுலா ஆகிய தேவைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன், தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மாவட்டங்கள் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகள், கலாச்சாரப் பகிர்வு, பொருளாதாரம் ஆகியவற்றில் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெறும்." என்றார். இந்தப் பயணத்துக்கு பயன்படுத்தப்படும் சிரியா பாணி கப்பல் கொச்சியில் தயாரிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை நாகபட்டினம் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான சோதனை ஓட்டம் 2 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்று பயணிகளுக்காக கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் 12 ஆம் தேதிக்கு இந்த முதல் கப்பல் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில், தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக .செரியாபாணி கப்பலின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் (09.10.2023) இடம்பெற்றிருந்தது. எனினும் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக சேவைகள் நிறுத்தப்படுவதாக இலங்கையில் அறிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான கப்பல் சேவை 12 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள நிலையில் கப்பல் பயணத்திற்கான செலவு தொடர்பிலான தகவல் வெளியாகியுள்ளது.“செரியாபாணி” என்ற பெயரைக் கொண்ட இந்த பயணிகள் கப்பலில் பயணிகளுக்கான அனுமதிச்சீட்டுக் கட்டணம் மற்றும் எவ்வளவு நிறை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.குளிரூட்டி வசதியுடன் கூடிய இந்த பயணிகள் கப்பல் நாகபட்டினம் துறைமுகம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டின் கடவுச்சீட்டு மற்றும் விஷா மற்றும் குடிபெயர்வு அனுமதி பெற்றவர்கள் பயணம் செய்ய ஏதுவானது.
- Advertisement -
கருத்துகள்