கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் உள்ள ஜம்ரா சர்வதேச மையத்தில் இன்று காலை நடந்த கிறிஸ்துவ மத ஜெபக் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு. ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி. அடுத்தடுத்து குண்டு வெடித்ததால் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு.. ஒருவர் உயிரிழப்பு.. 36 பேர் காயம் காலை 9.40 மணியளவில் முதல் குண்டுவெடிப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குண்டு வெடிப்பு நடந்த போது அங்கிருந்த நபர் ஒருவர் கூறுகையில், "பிரார்த்தனைக் கூடாரத்தின் மையப் பகுதியில் தான் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. மொத்தம் மூன்று முறை வெடிச்சத்தம் கேட்டது. மண்டபத்தின் நடுவில் திடீரென நிறையப் புகை எழுந்தது. இந்த குண்டு வெடிப்பு பெண் ஒருவர் உயிரிழந்ததுள்ளார்" என்றும் தெரிவித்தார். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரார்த்தனைக் கூடாரத்தில் பல இடங்களில் தீ பரவியுள்ளது. புகைக்கு நடுவில் மக்கள் தடுமாறிக் கொண்டு வெளியே வரும் காடசியும் இணையத்தில் வெளியாகியது இந்தத் தாக்குதலுக்கு ஐஇடி என்ற வகைக் குண்டு பயன்படுத்தப்பட்டதாகக் கேரளா மாநிலக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.. முதற்கட்ட விசாரணையில் டிபன் பாக்ஸில் இருந்த குண்டு வெடித்துச் சிதறியதாகத் தகவல் வெளியாகியானது.
யெகோவாவின் சாட்சிகள் என்ற குழுவினர் நடத்திய பிராத்தனை கூட்டத்தில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள 2,500 க்கும் மேற்பட்ட மக்கள் பிரார்த்தனைக்குக் கூடியிருந்தனர்.
அப்போது நடந்த குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்ககளிடம் கூறியதாவது, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேரளா முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினார் அதன்பின் தேசியப் புலனாய்வு அமைப்பு மற்றும் என்.எஸ்.ஜி சம்பவ இடத்தில் விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டார். யெகோவாவின் சாட்சிகள் எனும் ஒரு கிறிஸ்தவ மதப் பிரிவினர், ஆனால் கிருஸ்துவத்தில் (தந்தை, குமாரன் (இயேசு கிறிஸ்து) மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று சம நபர்களில் கடவுள் இருக்கிறார் எனும் கொள்கை) மீது நம்பிக்கை இல்லாதவர்கள் யெகோவாவை “உண்மையும் சர்வவல்லமையும் கொண்ட ஒரே கடவுள், படைப்பாளர்”, “ஆபிரகாம், மோசே மற்றும் இயேசுவின் கடவுள்” என்று வணங்கி வருகிறார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவை "பரலோகத்திலுள்ள கடவுளின் ராஜ்யத்தின் ராஜா" என்று நம்புகிறார்கள், ஆனால் சர்வவல்லமையுள்ள கடவுள் அல்ல என்பதும். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளை பைபிளின் உரையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளனர், அதை அவர்கள் கடவுளின் வார்த்தையாகக் காண்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் ஈஸ்டர் விழாக்களைக் கொண்டாடுவதில்லை, இந்தப் பண்டிகைகள் பேகன் மரபுகளால் ஈர்க்கப்பட்டதாக நம்புகிறவர்கள்.
யெகோவாவின் சாட்சிகள் சுவிசேஷப் பணிக்காகப் பெயர் பெற்றவர்கள் ஆவர், அதற்காக அவர்கள் வீடு வீடாகச் சென்று மதம் சார்ந்த “விபரங்களைப்” பரப்புகிறார்கள். உலகத்தின் முடிவு நெருங்கி விட்டதாவே அவர்கள் நம்புகிறவர்கள், மேலும் “கடவுளுடைய ராஜ்யம்” “மனித அரசாங்கங்களை மாற்றி பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றும்”. என மதப்பிரிவுக்கு உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களும் கொண்டுள்ளனர்.
கருத்துகள்