முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் உகாண்டா காவல் படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு கல்வியில் சர்வதேச ஒத்துழைப்பை ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் விரிவாக்கம்

சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு கல்வித் துறைகளில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை  ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகம் (ஆர்.ஆர்.யு), அக்டோபர் 4, 2023 அன்று எடுத்துள்ளது. உகாண்டாவின் நாகுருவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உகாண்டா காவல் படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆர்.ஆர்.யு கையெழுத்திட்டது. ஆர்.ஆர்.யு.வின் அங்கீகாரம் மற்றும் சேர்க்கை இயக்குநர் கமாண்டர் மனோஜ் பட், பல்கலைக்கழகத்தின் ஐ.சி.ஓ.டி தலைவர் திரு ரவீஷ் ஷா மற்றும் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் ஏ.ஐ.ஜி.பி கோலுபா காட்ஃப்ரே ஆகியோர்  இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டனர்.



ஆர்.ஆர்.யு மற்றும் உகாண்டா காவல் படைக்கு இடையிலான ஒத்துழைப்பு, சட்ட அமலாக்க பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் பரஸ்பர புரிதல் மற்றும் அறிவு பரிமாற்றத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. படைகளில் இணைவதன் மூலம், இரு நிறுவனங்களும் தங்கள் கல்வித் திட்டங்களை மேம்படுத்தவும், சட்ட அமலாக்க பணியாளர்களின் தொழில்முறை வளர்ச்சிக்கு பங்களிக்கவும் முயல்கின்றன.

இந்தப்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஆர்.ஆர்.யு , உகாண்டா காவல் படை ஆகியவை ஆசிரியர் பரிமாற்ற திட்டங்கள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள், பாடத்திட்ட மேம்பாட்டு முன்முயற்சிகள் மற்றும் சட்ட அமலாக்க கல்வியில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது போன்ற பல்வேறு கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும். இரு நிறுவனங்களும் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களிலிருந்து பயனடைய இந்த முயற்சிகள் உதவுவதுடன், இறுதியில் அந்தந்த நாடுகளில் மேம்பட்ட சட்ட அமலாக்க நடைமுறைகளுக்கும் வழிவகுக்கும்.


இந்த கூட்டாண்மை குறித்து பேசிய கமாண்டர் மனோஜ் பட், "உகாண்டா காவல் படையுடன் இந்த உத்தி சார்ந்த கூட்டு முயற்சியில்  ஈடுபடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சட்ட அமலாக்க கல்வியில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது. அறிவு மற்றும் வளங்களைப் பகிர்வதன் மூலம், உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்க முகமைகள் எதிர்கொள்ளும் வளர்ந்து வரும் சவால்களை கூட்டாக எதிர்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று கூறினார்.

"இந்த ஒத்துழைப்பு ஆர்.ஆர்.யு.வுக்கு அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதற்கும் உகாண்டாவில் சட்ட அமலாக்க கல்வியின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. உகாண்டா காவல் படையுடன் நெருக்கமாக பணியாற்றவும், இரு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் இது உதவும் ”, என்று திரு ரவீஷ் ஷா கூறினார்.

உகாண்டா காவல் படையின் மனிதவள மேம்பாட்டு இயக்குநர் ஏ.ஐ.ஜி.பி கோலூபா காட்ஃப்ரே, இந்த கூட்டாண்மைக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்: "எங்கள் பணியாளர்களுக்குத் தரமான பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதற்கான எங்கள் திறனை மேம்படுத்துவதில் ராஷ்டிரிய ரக்ஷா பல்கலைக்கழகத்துடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை பரிமாறிக்கொள்ள உதவும், இது எங்கள் சட்ட அமலாக்க நடைமுறைகளை மேம்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பிற்கு பங்களிக்கவும் உதவும்”, என்றார், அவர்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது ஆர்.ஆர்.யு.வுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.  ஏனெனில் அது அதன் சர்வதேச ஒத்துழைப்பு முயற்சிகளை விரிவுபடுத்துவதுடன்,  சட்ட அமலாக்கம் மற்றும் பாதுகாப்பு கல்வியில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது. உகாண்டா காவல் படையுடனான இந்தக்  கூட்டாண்மை, மற்ற சர்வதேச அமைப்புகளுடன் எதிர்கால ஒத்துழைப்புக்கான களத்தை அமைக்கிறது. அறிவு பகிர்வு மற்றும் ஒத்துழைப்பின் உலகளாவிய வலையமைப்பை ஊக்குவிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...