குடியரசுத் தலைவர் ஒப்புதலைபஹ பெற்ற பத்திரப் பதிவுத்துறைக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் சட்டத் திருத்த மசோதா:
போலியான பத்திரப்பதிவு செய்தால் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை ; உரிய ஆதாரங்களுடன் புகார் செய்தால் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்
பதிவுத்துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் தமிழ்நாட்டில் மட்டும் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
அவ்வாறு பதிவு செய்யப்படும் போது, ஒரு சில சார்பதிவாளர்கள் பதிவுப் பணியின் போது, மூலப்பத்திரங்களைக் கேட்டு அதாவது பி ஆர் ஆவணம் உள்ளதா என ஆய்வு செய்வதில்லை. அதே போன்று அந்த சொத்துக்கான வில்லங்கமும் சரி பார்க்காமல், பத்திரப்பதிவு செய்கின்றனர்.
அதைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் போலியான ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்வதால் அது மோசடியாகிறது. இந்த விவகாரம் தொடர்பாக
நிலத்தின் உரிமையாளர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழ்நிலை வருகிறது.ஏற்கனவே,
இது போன்ற வழக்குகள் ஏராளமானவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது , போலி ஆவணப் பதிவு விவகாரத்தில் உடனடியாகவும் தீர்ப்புகள் வருவதில்லை. அதனால், உண்மையான நில உரிமையாளர்கள் தங்களது சொத்துக்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு னாகும் நிலை தான் உள்ளது தற்போது சட்டமாக நிறைவேற்றப்பட்டதன் காரணமாகத்
தாடுக்கப்பட்டது, இப்போதிலிருந்து போலியாகப் பதிவு செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டணை அளிக்கப்படும் இறுதியில் கவர்னர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அரசின் சட்டத்துறைக்கு இந்த மசோதா அனுப்பிவைக்கப்பட்டதையடுத்து
அரசின் சட்டத்துறை சார்பில் கடிதம் எழுதியது இது தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அதிகாரிகளும் மத்திய அரசின் சட்டத்துறை அதிகாரிகளுடன் பேசி வந்தனர். தற்போது
மத்திய அரசின் சட்டத்துறை இந்த மசோதாவுக்கு அனுமதியளித்துள்ளது. அதைச் தொடர்ந்து அங்கிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி
யைக்கப்பட்ட நிலையில் தற்போது மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை இரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரமளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி திரௌபதிமுர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டத்திருந்த மசோதா தற்போது அமலாகிறது இந்த சட்ட திருத்த மசோதா மூலம் சட்ட விரோதமாக நிலங்களை பத்திரப்பதிவு செய்த நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு சொத்துகளை உரியவர்களுக்கு பெற்றுத் தர முடியும் இந்தச் சட்டத் திருந்த மசோதா கொண்டு வருவரற்கு காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வணிவரி மாநிலப் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்