முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவாவில் நடைபெரும் 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்படவிழா 'ஃபேமிலி ஆல்பம்' திரைப்படத்தை உருவாக்குவதில் தனிப்பட்ட அனுபவங்கள் உத்வேகம் அளித்தன -



பெற்றோர்களும் குழந்தைகளும் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொள்ள படம் உதவும்: உருகுவே திரைப்பட இயக்குனர் கில்லெர்மோ ரோகாமோரா

கோவாவில் நடைபெற்று வரும் 54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களுடனான கலந்துரையாடல் இன்று (25-11-2023) நடைபெற்றது. இதில் உலக சினிமா (சினிமா ஆஃப் தி வேர்ல்ட்) பிரிவின் கீழ் திரையிடப்பட்ட 'ஃபேமிலி ஆல்பம்' என்ற திரைப்படத்தின் இயக்குநர் கில்லெர்மோ ரோகாமோரா தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். தமது தனிப்பட்ட அனுபவங்கள் படத்தை வடிவமைப்பதில் எவ்வாறு உத்வேகம் அளித்தன என்பது குறித்து உருகுவே இயக்குனர் கூறுகையில், இது தமது குடும்ப அனுபவத்தைப் பற்றியது என்றும் தமது பெற்றோர் விவாகரத்து பெற்றபோது தமக்கு 16 வயது என்றும் கூறினார். 




ஸ்பானிஷ் மொழிப்படமான இப்படம், பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான சிக்கலான உறவு மற்றும் தந்தை மகன் உறவை மையமாகக் கொண்டதாகும் என அவர் தெரிவித்தார். பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் இந்த படம் பயனளிக்கும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

வாழ்க்கையில் இசையின் தாக்கம் குறித்தும், படத்தில் அது ஒரு முக்கிய அம்சமாக இருப்பது குறித்தும் இயக்குநர் எடுத்துரைத்தார்.

இந்தப் படம் குடும்பச் சிக்கல்களை ஆராய்வதுடன் அன்பு, நீடித்த பிணைப்பு ஆகிய கருப்பொருள்களுடன் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று அவர் தெரிவித்தார்.







இயக்குனர் பற்றி:

கில்லெர்மோ ரோகாமோரா ஒரு திரைப்பட மற்றும் விளம்பர தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவரது குறும்படமான பியூன் வியாஜே (2008) கேன்ஸ் எஃப்.எஃப் இல் போட்டியிட்டது. அவரது முதல் படமான சோலோ (2013) மியாமியில் திரையிடப்பட்டு சிறந்த திரைப்பட விருதை வென்றது. டிஸ்கவரி சேனலுக்காக லா எசென்சியா டி கரோலினா ஹெரேரா டி பேஜ் (2013) என்ற ஆவணப்படத்தை இவர் எழுதி இயக்கியுள்ளார்.இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் 'சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது' போட்டியில் ஏழு படங்கள் போட்டியிடுகின்றன

கோவாவில் நடைபெறும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குநர் பிரிவில் 7 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு திரையிடப்படுகின்றன. இந்தப் பிரிவு வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அவர்களின் சிறந்த திரைப்படங்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.

இந்த ஆண்டு இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள்:

அல்மோஸ்ட் என்டைர்லி எ ஸ்லைட் டிசாஸ்டர்: உமுத் சுபாஸால் இயக்கப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் இஸ்தான்புல்லில் உள்ள நான்கு நபர்களின் வாழ்க்கையை ஆராய்கிறது. புதிய தலைமுறையினர் எதிர்கொள்ளும் கவலைகளுடன் நகைச்சுவையை சாமர்த்தியமாக இந்தப் படம் இணைத்துள்ளது.

லெட் மீ கோ: மாக்சிம் ராப்பாஸ் இயக்கிய இந்தப் படம் சுவிட்சர்லாந்தில் கதைக் களத்தைக் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் கேன்ஸ்  திரைப்பட விழா, ஸ்டாக்ஹோம் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் இடம்பெற்றது.

ஒகாரினா: அல்பான் ஜோக்ஜானி இயக்கிய அல்பேனியத் திரைப்படமான ஒகாரினா, ஒரு புதிய நாட்டிற்குச் செல்லும்போது வாழ்க்கை முறை மாற்றத்தால் எழும் குடும்பப் பிரச்சினைகளின் கதையாகும்.


ஸ்லீப்: ஜேசன் யூவின் என்ற இயக்குநரால் இயக்கப்பட்ட இந்தத் தென் கொரிய திரைப்படம் ஒரு கர்ப்பிணி மனைவியின் கதையைச் சொல்கிறது.

வென் தி சீட்லிங்ஸ் குரோ: துருக்கிய திரைப்பட இயக்குநர் ரீகர் ஆசாத் கயா இயக்கிய இந்த திரைப்படம் கோபானேவில் உள்ள ஹுசைன் மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றி சுழல்கிறது, அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூகத்தின் மீது போரின் விளைவுகளையும் இது இணைக்கிறது.

தாய் ஆகர்: அம்ரிக் சிங் தீப்பின் 'தீர்த்தன் கே பாத்' நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரவீன் அரோரா இயக்கிய இந்தி திரைப்படமான இது 1980-களில் உத்தராகண்ட் மாநிலத்தில் நடக்கும் கதை ஆகும்.  பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அழுத்தமான செய்தியுடன் காதலை ஒரு விடுதலை சக்தியாக இந்தப் படம் வலியுறுத்துகிறது.

இரட்டா: ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இயக்கிய இந்திய மொழியான மலையாளத் திரைப்படமான இரட்டா, காவல் துறையில் பணிபுரியும் இரட்டையர்கள், அதில் ஒருவரின் மரணம் மற்றும் அது தொடர்பான விசாரணைகளை விவரிக்கிறது.'குல்மோஹர்' திரைப்படம் மூன்று தலைமுறைகளாக குடும்பம் மற்றும் வீட்டின் அர்த்தங்களை ஆராய்கிறது: இயக்குநர் ராகுல் வி. சித்தெல்லா

கோவாவில் நடைபெற்று வரும் 54-வதுசர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பிரிவில் ராகுல் வி.சித்தெல்லா எழுதி இயக்கிய குல்மோஹர் என்ற இந்திப் படம் திரையிடப்பட்டது. இந்த படம் குடும்பம் மற்றும் வீடு என்பதன் அர்த்தங்களை ஆராய்கிறது, பத்ரா சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்களின் தனிப்பட்ட கதைக்களங்களை இது ஒன்றிணைக்கிறது.

பத்திரிகைத் தகவல் அலுவலகம் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஊடகங்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் உரையாடிய, குல்மோஹர் திரைப்படத்தின் முன்னணி நடிகரான மனோஜ் பாஜ்பாய், படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநரால் உருவாக்கப்பட்ட குடும்ப சூழல் ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது என்றார். படப்பிடிப்பின்போது நிலவிய "குடும்பமும் அதன் உணர்வும் அதைத் தாண்டி நீண்டதாக அவர் தெரிவித்தார். இத்திரைப்படம் குடும்பம், அதன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட உறவுகளை சித்தரிக்கிறது என்று அவர் கூறினார்.

குல்மோஹர் பற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட படத்தின் இயக்குனர் ராகுல் வி சித்தெல்லா, குடும்பம் மற்றும் வீட்டின் அர்த்தங்கள் மற்றும் வரையறை காலப்போக்கில் மாறுகிறது என்றார். ஆனால் இந்த இரண்டு விஷயங்கள் மட்டுமே எப்போதும் முக்கியம் என்று அவர் கூறினார். மூன்று தலைமுறையாக குடும்பம், வீடு என்ற அர்த்தத்தை இப்படம் பேசுகிறது என அவர் கூறினார்.  குல்மோஹர் என்ற தலைப்பு ஒரு கவித்துவமானது என்றார். குல்மோஹர் மிக விரைவாக பூத்து விழும் ஒரு மலர் என்றும் அதன் தன்மை தாம் சொல்ல முயற்சிக்கும் கதைக்கு பொருந்துவதாகவும் மனோஜ் பாஜ்பாய் கூறினார்.

மனோஜ் பாஜ்பாய், ஷர்மிளா தாகூர், சிம்ரன், அமோல் பாலேகர் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளுடன் இந்தி படத்தில் அறிமுகமாவது ஒரு கனவு போன்றது என்று குல்மோஹர் படத்தில் நடித்த நடிகர்களில் ஒருவரான சாந்தி பாலச்சந்திரன் கூறினார். மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு இடையிலான வேறுபாட்டை சுட்டிக்காட்டிய சாந்தி பாலச்சந்திரன், மலையாளத் திரைப்படத் துறையைப் போலல்லாமல், இந்தி சினிமா ஒரு பெரு நிறுவனக் கட்டமைப்பைப் பெற்றுள்ளது என்று கூறினார்.

மனோஜ் பாஜ்பாய் முக்கிய வேடத்தில் நடித்த “சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை” படத்தின் இயக்குனர் அபூர்வ் சிங் கார்கியும் உரையாடலில் பங்கேற்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...