மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை நியமிக்க பரிந்துரை
மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.
மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணிபுரிந்தவர் சஞ்சிஜ் பானர்ஜி. நவம்பர் மாதம் முதல் தேதியுடன் ஓய்வு பெற்றதையடுத்து மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதனை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜீயம் பரிந்துரைத்துள்ளது
ADVERTISEMENT
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி வைத்தியநாதன் கோயமுத்தூரைச் சேர்ந்தவர். சென்னை சட்டக் கல்லுாரியில் சட்டப் படிப்பை முடித்து1986-ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கி பின் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 2013-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்பு 2015-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நிரந்தரமாக்கப்பட்டார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர்
தற்போது மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள நீதிபதி வைத்தியநாதனின் தந்தை வி.சுப்பிரமணியன் சிறந்த தொழிற்சங்கவாதி. 1946-ஆம்ஆண்டு ஒயிட் காலர் எம்ப்ளாயீஸ் யூனியன் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவர். தமது தந்தையின் நூற்றாண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக பதவியேற்றவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய போது, ஆண்கள்- பெண்கள் பயிலும் கிறிஸ்தவக் கல்விநிலையங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலம் என்பது பாதுகாப்பு இல்லாதவை என ஒரு கருத்தைக் கூறி பின் திரும்பப் பெற்றார் மனைவிக்கு எதிராக கணவன் வழக்கு தொடர குடும்ப வன்முறைச் சட்டம் போன்ற ஏற்பாடு இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானதென்றும் கருத்து தெரிவித்திருந்தார் அதேபோல குடிசை மாற்று வீடுகளை வாடகைக்கு விட்டால் ஒதுக்கீடு இரத்து செய்யப்படும் என உத்தரவிட்டவர்
கருத்துகள்