முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நில வளங்கள் துறையின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளங்கள் துறையின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்


ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளங்கள் துறை பின்வரும் இரண்டு திட்டங்களை முக்கியமாக தற்போது செயல்படுத்தி வருகின்றது. டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் (டி.ஐ.எல்.ஆர்.எம்.பி) மற்றும் பிரதமரின் கிரிஷி சின்சாயி திட்டத்தின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அம்சம் (டபிள்யூ.டி.சி- பி.எம்.கே.எஸ்.ஒய்) ஆகியவையே அவையாகும்.

•    டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் (DILRMP): டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் ஏப்ரல் 1, 2016 முதல் மத்திய துறை திட்டமாக மாற்றப்பட்டது.

•    ஒருங்கிணைந்த நிலத் தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் நவீன, விரிவான மற்றும் வெளிப்படையான நிலப் பதிவேடு மேலாண்மை அமைப்பை உருவாக்குவதே டி.ஐ.எல்.ஆர்.எம்.பி. திட்டத்தின் நோக்கமாகும்.

•    டி.ஐ.எல்.ஆர்.எம்.பி திட்டத்தின் கீழ் கணிசமான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. அடிப்படைக் அம்சங்களைப் பொறுத்தவரை, நிலப் பதிவேடுகளை கணினி மயமாக்குதலில் 95.08 சதவீத உரிமைப் பதிவேடுகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன

•    2021-22 முதல் 2025-26 வரை ஐந்து ஆண்டுகளுக்கு டி.ஐ.எல்.ஆர்.எம்.பி.யை நீட்டிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

•    நிலப் பதிவேடு தரவுத்தளத்துடன் ஆதார் எண்ணை ஒருங்கிணைத்தல் மற்றும் வருவாய் நீதிமன்றங்களை கணினிமயமாக்குதல் மற்றும் நில ஆவணங்களுடன் ஒருங்கிணைத்தல் ஆகிய இரண்டு புதிய அம்சங்களும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன.



•    தனித்துவமான நிலத் தொகுப்பு அடையாள எண் (யு.எல்.பி.ஐ.என்) அல்லது பூ-ஆதார்: தனித்துவமான நிலத் தொகுப்பு அடையாள எண் (யு.எல்.பி.ஐ.என்) அமைப்பு என்பது ஒவ்வொரு நிலத் தொகுப்புக்கும் 14 இலக்க அடையாளம் ஆகும். இது நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. யு.எல்.பி.ஐ.என் மனையின் உரிமை விவரங்களையும், அதன் அளவு விவரங்களையும் கொண்டிருக்கும். இது ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை எளிதாக்கும். சொத்து எல்லை சிக்கல்களைத் தீர்க்க உதவும்.

•    ஆந்திரா, ஜார்கண்ட், கோவா, பீகார், ஒடிசா, சிக்கிம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, திரிபுரா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், அசாம், மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், தமிழ்நாடு, பஞ்சாப், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கேரளா, லடாக், சண்டிகர் கர்நாடகா மற்றும் தில்லி ஆகிய 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இதுவரை பூ-ஆதார் / யு.எல்.பி.ஐ.என் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


•    தேசிய பொது ஆவண பதிவு முறை (NGDRS) அல்லது மின் பதிவு: பத்திரங்கள் / ஆவணங்களைப் பதிவு செய்வதற்கான ஒரே மாதிரியான செயல்முறையைக் கொண்டிருக்க, "தேசிய பொதுவான ஆவண பதிவு முறை (என்.ஜி.டி.ஆர்.எஸ்) என்ற ஒரே நாடு ஒரே பதிவு மென்பொருள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது.

•    தேசிய பொது ஆவண பதிவு முறை (என்.ஜி.டி.ஆர்.எஸ்) அல்லது இ-பதிவு என்பது நாடு முழுவதும் உள்ள பதிவுத் துறைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொதுவான பயன்பாடாகும். சார்பதிவாளர்கள், மக்கள் மற்றும் பதிவுத் துறைகளைச் சேர்ந்த பயனர்களின் வசதிக்காக இந்த பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

•    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கோவா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லடாக், பஞ்சாப், திரிபுரா, மகாராஷ்டிரா, மிசோரம், டி.என்.எச் மற்றும் டி.டி, மணிப்பூர், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேகாலயா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 18 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இதுவரை என்.ஜி.டி.ஆர்.எஸ் அல்லது இ-பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

•    ஆந்திரா, ஹரியானா, சண்டிகர், என்.சி.டி டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், புதுச்சேரி, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் பதிவு தொடர்பான தரவுகளை ஏபிஐ / பயனர் இடைமுகம் (யுஐ) மூலம் www.ngdrs.gov.in தேசிய என்ஜிடிஆர்எஸ் தேசிய தளத்துடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளன.

•    நில ஆவணங்கள் / பதிவுத் தரவுத் தளத்துடன் மின்-நீதிமன்றத்தை இணைத்தல்:  மின் நீதிமன்றத்தை நிலப் பதிவேடு மற்றும் பதிவுத் தரவுத் தளத்துடன் இணைப்பதன் நோக்கம், நீதிமன்றங்களுக்கு உண்மையான நேரடித் தகவல்களை கிடைக்கச் செய்வதன் மூலம் வழக்குகளை விரைவாக முடித்து, இறுதியில் நிலத் தகராறுகளைக் குறைப்பதாகும்.

• ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் நீதித் துறையுடன் இணைந்து மின்-நீதிமன்றத்தை நிலப் பதிவு மற்றும் பதிவுத் தரவுத் தளத்துடன் இணைப்பதற்கான முன்னோடி சோதனை நீதித் துறையில் அமைக்கப்பட்ட குழு மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

•    தமிழ்நாடு உள்ளிட்ட 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மின்-நீதிமன்ற பயன்பாட்டு மென்பொருளை நில ஆவணங்கள் பயன்பாட்டு மென்பொருள் மற்றும் பதிவு தரவுத்தளத்துடன் ஒருங்கிணைக்க சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்றுள்ளன.

•    பூமி சம்மான் (மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான டி.ஐ.எல்.ஆர்.எம்.பி.க்கான பிளாட்டினம் கிரேடிங் சான்றிதழ் திட்டம்): உரிமைகளின் பதிவேடுகளை கணினிமயமாக்குதல் போன்ற திட்டத்தின் அடிப்படைக் கூறுகளை நிறைவு செய்வதற்கான இலக்கை டி.ஓ.எல்.ஆர் நிர்ணயித்துள்ளது.

•    20.12.2023 நிலவரப்படி, அசாம், ஆந்திரப் பிரதேசம், பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், திரிபுரா, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 16 மாநிலங்களில் உள்ள 168 மாவட்டங்கள் 6 அம்சங்களில் 99% மற்றும் அதற்கு மேற்பட்ட பணிகளை முடித்து பிளாட்டினம் தரவரிசையை எட்டியுள்ளன.

•    30.11.2022 அன்று வரை பிளாட்டினம் தர நிர்ணயம் பெற்ற 68 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு 18.07.2023 அன்று 'பூமி சம்மான்' என்ற பெயரில் பிளாட்டினம் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை புதுதில்லியில் குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார்.

•    பிரதமரின்  கிரிஷி சின்சாயி யோஜனாவின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அம்சம் (டபிள்யூ.டி.சி- பி.எம்.கே.எஸ்.ஒய்):  இத்திட்டத்தை 2021-22 முதல் 2025-26 வரை 49.5 இலட்சம் ஹெக்டேர் என்ற இலக்குடன், மத்திய அரசின் பங்காக ரூ. 8,134 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உள்பட 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 1149 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசின் பங்காக ரூ.2912.93 கோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 78756 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல் / புதுப்பித்தல், 83342 ஹெக்டேர் கூடுதல் பரப்பு பாதுகாப்பு நீர்ப்பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 471282 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்