முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நில வளங்கள் துறையின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்

ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள நில வளங்கள் துறையின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்


ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நில வளங்கள் துறை பின்வரும் இரண்டு திட்டங்களை முக்கியமாக தற்போது செயல்படுத்தி வருகின்றது. டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் (டி.ஐ.எல்.ஆர்.எம்.பி) மற்றும் பிரதமரின் கிரிஷி சின்சாயி திட்டத்தின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அம்சம் (டபிள்யூ.டி.சி- பி.எம்.கே.எஸ்.ஒய்) ஆகியவையே அவையாகும்.

•    டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் (DILRMP): டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல் திட்டம் மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் ஏப்ரல் 1, 2016 முதல் மத்திய துறை திட்டமாக மாற்றப்பட்டது.

•    ஒருங்கிணைந்த நிலத் தகவல் மேலாண்மை அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் நவீன, விரிவான மற்றும் வெளிப்படையான நிலப் பதிவேடு மேலாண்மை அமைப்பை உருவாக்குவதே டி.ஐ.எல்.ஆர்.எம்.பி. திட்டத்தின் நோக்கமாகும்.

•    டி.ஐ.எல்.ஆர்.எம்.பி திட்டத்தின் கீழ் கணிசமான முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. அடிப்படைக் அம்சங்களைப் பொறுத்தவரை, நிலப் பதிவேடுகளை கணினி மயமாக்குதலில் 95.08 சதவீத உரிமைப் பதிவேடுகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன

•    2021-22 முதல் 2025-26 வரை ஐந்து ஆண்டுகளுக்கு டி.ஐ.எல்.ஆர்.எம்.பி.யை நீட்டிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

•    நிலப் பதிவேடு தரவுத்தளத்துடன் ஆதார் எண்ணை ஒருங்கிணைத்தல் மற்றும் வருவாய் நீதிமன்றங்களை கணினிமயமாக்குதல் மற்றும் நில ஆவணங்களுடன் ஒருங்கிணைத்தல் ஆகிய இரண்டு புதிய அம்சங்களும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன.



•    தனித்துவமான நிலத் தொகுப்பு அடையாள எண் (யு.எல்.பி.ஐ.என்) அல்லது பூ-ஆதார்: தனித்துவமான நிலத் தொகுப்பு அடையாள எண் (யு.எல்.பி.ஐ.என்) அமைப்பு என்பது ஒவ்வொரு நிலத் தொகுப்புக்கும் 14 இலக்க அடையாளம் ஆகும். இது நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. யு.எல்.பி.ஐ.என் மனையின் உரிமை விவரங்களையும், அதன் அளவு விவரங்களையும் கொண்டிருக்கும். இது ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை எளிதாக்கும். சொத்து எல்லை சிக்கல்களைத் தீர்க்க உதவும்.

•    ஆந்திரா, ஜார்கண்ட், கோவா, பீகார், ஒடிசா, சிக்கிம், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, திரிபுரா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், அசாம், மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம், தமிழ்நாடு, பஞ்சாப், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, இமாச்சலப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், கேரளா, லடாக், சண்டிகர் கர்நாடகா மற்றும் தில்லி ஆகிய 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இதுவரை பூ-ஆதார் / யு.எல்.பி.ஐ.என் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


•    தேசிய பொது ஆவண பதிவு முறை (NGDRS) அல்லது மின் பதிவு: பத்திரங்கள் / ஆவணங்களைப் பதிவு செய்வதற்கான ஒரே மாதிரியான செயல்முறையைக் கொண்டிருக்க, "தேசிய பொதுவான ஆவண பதிவு முறை (என்.ஜி.டி.ஆர்.எஸ்) என்ற ஒரே நாடு ஒரே பதிவு மென்பொருள் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது.

•    தேசிய பொது ஆவண பதிவு முறை (என்.ஜி.டி.ஆர்.எஸ்) அல்லது இ-பதிவு என்பது நாடு முழுவதும் உள்ள பதிவுத் துறைகளுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொதுவான பயன்பாடாகும். சார்பதிவாளர்கள், மக்கள் மற்றும் பதிவுத் துறைகளைச் சேர்ந்த பயனர்களின் வசதிக்காக இந்த பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

•    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், கோவா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், லடாக், பஞ்சாப், திரிபுரா, மகாராஷ்டிரா, மிசோரம், டி.என்.எச் மற்றும் டி.டி, மணிப்பூர், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேகாலயா மற்றும் உத்தரகண்ட் ஆகிய 18 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இதுவரை என்.ஜி.டி.ஆர்.எஸ் அல்லது இ-பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

•    ஆந்திரா, ஹரியானா, சண்டிகர், என்.சி.டி டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு, உத்தரபிரதேசம், புதுச்சேரி, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் பதிவு தொடர்பான தரவுகளை ஏபிஐ / பயனர் இடைமுகம் (யுஐ) மூலம் www.ngdrs.gov.in தேசிய என்ஜிடிஆர்எஸ் தேசிய தளத்துடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளன.

•    நில ஆவணங்கள் / பதிவுத் தரவுத் தளத்துடன் மின்-நீதிமன்றத்தை இணைத்தல்:  மின் நீதிமன்றத்தை நிலப் பதிவேடு மற்றும் பதிவுத் தரவுத் தளத்துடன் இணைப்பதன் நோக்கம், நீதிமன்றங்களுக்கு உண்மையான நேரடித் தகவல்களை கிடைக்கச் செய்வதன் மூலம் வழக்குகளை விரைவாக முடித்து, இறுதியில் நிலத் தகராறுகளைக் குறைப்பதாகும்.

• ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் நீதித் துறையுடன் இணைந்து மின்-நீதிமன்றத்தை நிலப் பதிவு மற்றும் பதிவுத் தரவுத் தளத்துடன் இணைப்பதற்கான முன்னோடி சோதனை நீதித் துறையில் அமைக்கப்பட்ட குழு மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

•    தமிழ்நாடு உள்ளிட்ட 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மின்-நீதிமன்ற பயன்பாட்டு மென்பொருளை நில ஆவணங்கள் பயன்பாட்டு மென்பொருள் மற்றும் பதிவு தரவுத்தளத்துடன் ஒருங்கிணைக்க சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்களிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற்றுள்ளன.

•    பூமி சம்மான் (மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கான டி.ஐ.எல்.ஆர்.எம்.பி.க்கான பிளாட்டினம் கிரேடிங் சான்றிதழ் திட்டம்): உரிமைகளின் பதிவேடுகளை கணினிமயமாக்குதல் போன்ற திட்டத்தின் அடிப்படைக் கூறுகளை நிறைவு செய்வதற்கான இலக்கை டி.ஓ.எல்.ஆர் நிர்ணயித்துள்ளது.

•    20.12.2023 நிலவரப்படி, அசாம், ஆந்திரப் பிரதேசம், பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், திரிபுரா, தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 16 மாநிலங்களில் உள்ள 168 மாவட்டங்கள் 6 அம்சங்களில் 99% மற்றும் அதற்கு மேற்பட்ட பணிகளை முடித்து பிளாட்டினம் தரவரிசையை எட்டியுள்ளன.

•    30.11.2022 அன்று வரை பிளாட்டினம் தர நிர்ணயம் பெற்ற 68 மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கு 18.07.2023 அன்று 'பூமி சம்மான்' என்ற பெயரில் பிளாட்டினம் சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை புதுதில்லியில் குடியரசுத் தலைவர் வழங்கி கௌரவித்தார்.

•    பிரதமரின்  கிரிஷி சின்சாயி யோஜனாவின் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு அம்சம் (டபிள்யூ.டி.சி- பி.எம்.கே.எஸ்.ஒய்):  இத்திட்டத்தை 2021-22 முதல் 2025-26 வரை 49.5 இலட்சம் ஹெக்டேர் என்ற இலக்குடன், மத்திய அரசின் பங்காக ரூ. 8,134 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உள்பட 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 1149 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசின் பங்காக ரூ.2912.93 கோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 78756 நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்குதல் / புதுப்பித்தல், 83342 ஹெக்டேர் கூடுதல் பரப்பு பாதுகாப்பு நீர்ப்பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு 471282 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...