முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

திண்டுக்கல் அருகில் ரூபாய் .20 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் சென்ற அமலாக்க துறை உயர் அலுவலர் கைது

திண்டுக்கல்லில் ரூபாய். 20 லட்சம் இலஞ்சப் பணத்துடன் காரில் சென்ற அமலாக்கத் துறையின் உயர் அலுவலரை தமிழ்நாடு ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் தடுப்பு கண்காணிப்புத்  துறையினர்  விரட்டிச் சென்று தடுத்து நிறுத்திப் பிடித்துக் கைது செய்தனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி செய்யும் மருத்துவர் சுரேஷ்பாபு.  மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக  2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தது வந்த  வழக்கிலிருந்து சுரேஷ்பாபு பின்பு விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும், விசாரிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூபாய். 3 கோடி லஞ்சம் தரவேண்டுமென்றும் அமலாக்கத் துறை உயர் அலுவலர் ஒருவர் அந்த மருத்துவரிடம் பேரம் பேசியதாகவும். பின்பு முடிவாக, ரூபாய்.51 லட்சம் தருவதற்கு மருத்துவர் சுரேஷ்பாபு ஒப்புக்கொண்டதாகவும்

அதன்படி முதல் தவணையாக அமலாக்கத் துறை  உயர் அலுவலரிடம் கடந்த மாதம் ரூ.20 லட்சம் கொடுத்ததாகவும்.

இந்த நிலையில், இரண்டாவது தவணையாக ரூபாய்.20 லட்சம் வழங்குவதற்காக அமலாக்கத் துறையின் உயர் அலுவலர் சொன்ன படி திண்டுக்கல் புறவழிச்சாலையில் தோமையார்புரம் பகுதியிலுள்ள ஹோட்டல் அருகில் மருத்துவர் சுரேஷ்பாபு நேற்று காலை சென்றதாகவும்

முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு அவர் தகவல் கொடுத்திருந்ததாகவும் அதன் பேரில், ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையின் துணை கண்காணிப்பாளர்  நாகராஜன் தலைமையிலான ஒரு குழு அப்பகுதியில் மறைந்திருந்து கவணித்துக் காத்திருந்ததாகவும்.

அப்போது, மத்திய பிரதேச மாநிலத்தின்  பதிவெண் கொண்ட ஒரு காரின் பின் பகுதியில் அந்தப் பணத்தை வைத்துவிட்டுச்  செல்லுமாறு மருத்துவரிடம் அந்த அதிகாரி கூறியதன் படி,அந்த  மருத்துவரும் பணத்தை வைத்து விட்டு செல்லவும், ஒருவர் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டதாகவும்

சிறிது தூரத்திலேயே லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்தக் காரை மறித்ததாகவும், அந்தக் கார் நிற்காமல் திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றதாகவும்.


ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடைரோடு சுங்கச்சாவடிக்கு தகவல் கொடுத்ததை யடுத்து, சுங்கச்சாவடியில் கார் நிறுத்தப்பட்ட நிலையில் பின்தொடர்ந்த திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் துணைக் கந்காணிப்பாளர் குழுவினர் காரை மறித்து அதிலிருந்த நபரைப் பிடித்து. காரிலிருந்த ரூபாய்.20 லட்சத்தை கைப்பற்றிய பின் பிடிபட்டவர் நீதிமன்ற  சிறை காவலுக்கு  கொண்டு சென்றனர் 


மத்திய பிரதேச மாநிலம் போபால் அமலாக்கத் துறையின் உயர் அலுவலர் அன்கித் திவாரி ஆவார் சில மாதங்களுக்கு முன்பு இடம் மாறுதலாகி  தமிழகத்தில் பணிபுரிகிறார் எனத் தெரியவர பின் திண்டுக்கல்லில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றிம் லஞ்ச ஒழிப்புத் துறையின் அலுவலகத்துக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு தென்மண்டலக் கண்காணிப்பாளர் சரவணக்குமார், மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன், ஆய்வாளர் ரூபா கீதாராணி ஆகியோர் அவரிடம் பல மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய பின், அன்கித் திவாரியை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நீதிபதி மோகனா முன்பாக இரவு 10 மணியளவில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 15 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்திய திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையை முடித்து திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரி அங்கித் திவாரியிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இடமாறுதலாகி வந்த சில மாதங்களிலேயே இதுபோன்று தனி ஒரு உயர் அலுவலரின் செயல்பாடு இருக்க வாய்ப்பில்லை என்பதால், இதன் பின்னணியில் வேறு சில அமலாக்கத் துறையின் வேறு சில உயர் அலுவலர்களும் இருக்கலாமென பேச்சு எழுந்துள்ளது. அதுகுறித்தும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, திண்டுக்கல் மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் ஏற்கெனவே லஞ்சமாகப் பெற்ற ரூபாய்.20 லட்சத்தில் சென்னையிலுள்ள அமலாக்கத் துறையின் அதிகாரிகள் சிலருக்கும் அன்கித் திவாரி பிரித்துக் கொடுத்துள்ளாதாக விசாரணையில் தெரியவந்ததாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  தெரிவித்துள்ளனர்.


 இதுபோன்று பலரையும் மிரட்டி, கோடிக்கணக்கில் வசூலித்து உயர் அலுவலர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும்  சென்னை சென்னை சாஸ்திரி பவனிலுள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் குவிக்கப்பட்டனர். மேலும், நேற்றிரவு டிசம்பர் 1ஆம் தேதி  சாஸ்திரி பவனில் எப்போதும் இரவுப் பாதுகாப்புப் பணியிலிருக்கும் தனியார் பாதுகாப்பு அலுவலர்களிடமிருந்து வளாகத்தின் சாவியை வாங்கிய சி.ஆர்.பி.எப் வீரர்கள், வளாகத்தின் கேட்டை இழுத்து மூடிப் பூட்டு போட்டனர். மேலும், அங்கு ஏராளமான சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்ட போது, முதலில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். பிறகு நள்ளிரவு நேரத்தில் துணை ராணுவப் படையினர் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்களைத் தமிழ்நாடு ஊழல் தடுப்புக் காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். அனுமதி மறுத்தது குறித்து துணை ராணுவப் படையினர் தமிழ்நாடு காவல்துறையினரிடம் கேட்டபோது, முறையான அனுமதி பெற்று பின்பு உள்ளே வாருங்களென வெளியே நிறுத்தி காக்க வைத்தனர். மேலும், அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், தற்போது வழக்கு தமிழ்நாடு மாநில ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறையில் பதிவாகியுள்ளதனால் தற்போது மாநில அரசின் முறையான அனுமதியின்றி உள்ளே அனுமதிக்க முடியாதென்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், அங்கு மேலும் பரபரப்பான சூழல் அப்போது  நிலவியது. பவன் வளாகத்திலுள்ள அமலாக்கத் துறையின் அலுவலகத்தில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அங்கு அதிகரிக்கப்பட்டது.                       மேலும் கைதான உயர் அலுவலர் பிரதமர் அலுவலகப் பெயரைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுவதால் விசாரணை நீளும் என்றே தெரிகிறதுஇந்த நிலையில் மதுரை அமலாக்கத்துறையின்  அலுவலகத்தில் தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியது இந்தியாவில் இதுதான் முதல் முறை காரணம் அது சி பிஐ கட்டுப்பாட்டில் உள்ளது.


இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை நடத்தினர். இது பெரும் பரபரப்பு ஒருபுறம் இருந்தாலும்  தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் அனுமதியின்றி நுழைந்து அமலாக்கத்துறை சோதனை செய்தது கடந்த காலம் அப்படி உள்ள போது,  இலஞ்சம் பெற்று கையுடன் பிடிபட்ட அமலாக்கத்துறை உயர் அலுவலரின் அறையை இலஞ்ச ஒழிப்புத்துறையினர் ஏன் சோதனை செய்யக்கூடாது? என்ற வினா இங்கு எழுகிறது சென்னையிலுள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் சோதனை நடத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், சென்னை சாஸ்திரி பவனிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டது, இட மாறுதலில் வந்த 

அமலாக்கத்துறை உயர் அலுவலர் ரூபாய் 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாகவும் பிடிபட்டுள்ளதாகம்  சொல்லப்படுகிறது..  


லஞ்சம் வாங்கியதற்கு ஆதாரமிருப்பதாக இது வரை எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதிகாரியின் வாகனத்தில் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியதாக  அந்த அலுவலர் மீது குற்றச் சாட்டில் நீதிமன்றக் காவலில் சிறையில் சேர்க்கப்பட்டார் 


இது மத்திய அமலாக்கத்துறை , வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது  இந்தியா முழுவதும் இச் செய்தி ஒரு பரபரப்பை உறுவாக்கி அரசியலில் ஒரு புதிய பார்வையை தமிழகத்தில் திருப்பியுள்ளது என்பதே பலதும் விவாதிக்கும் நிலை 

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் உச்சகட்ட பதற்றம் DVAC சோதனை நடந்த நிலையில் துணை ராணுவப் படை  குவிக்கப் பட்ட நிலையில் பல ஊடகங்களில் 

லஞ்சப் புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது. 15 கோடி பணம் கைப்பற்றல். இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் பின்வாசல் வழியாக தப்பி ஓட்டம். 

 லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு இதுவே இதில் விசாரணை முடிவில் நீதிமன்றமே இறுதித் தீர்ப்பு வரும் போது சில புரியாத உண்மைகள்  தெரியும் 

அதுவரை ஆட்சி மற்றும் அரசியல் மாற்றங்கள் தான் இந்த வழக்கின் திசை அறியும் 

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் பல மணி நேரமாக தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துகிறது.

இந்தியா முழுக்க இந்த செய்தியை வெற்றிகரமாக தமிழ்நாடு கொண்டு செல்கிறது. காணொளியில்  பணத்துடன் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி.

யாராவது ரொம்ப டார்ச்சர் செய்தால் வேறு வழியின்றி தெய்வத்திடம்  போய் நின்று முறையிடுவோம்.

அந்த தெய்வமே டார்ச்சர் செய்தால் யாரிடம் தான் போய் முறையிடுவது?.

ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டிய அமலாக்கத் துறை அதிகாரியே லஞ்சம் வாங்குவது அதிகாரிகள் மீது மக்களின் நம்பிக்கை பெற வழியே இல்லை.  அப்படி நடந்திருந்தால்  அமலாக்கத்துறை அலுவலகத்தில்  ஊழல் பைல்களும்  சோதனை செய்யப்படலாம்  ஆக  அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு  இலஞ்ச ஒழிப்புத் துறை சோதனை : இந்தியாவில் இது முதல் முறை,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்