முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விஜயகாந்தின் உடல்நலக் குறைவு சரியாகும் முன்பே அவர் பதவியை பறித்து ஓய்வு கொடுத்து தே மு தி க பொதுச்செயலாளரான பிரேமலதா

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தலைமையில் டிசம்பர் 14 ஆம் தேதி


தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது


அக்கட்சித்தலைமை அறிவிப்பு வெளியிட்ட போதே தேமுதிக தொண்டர்களை அது உற்சாகத்தில் ஆழ்த்தியது. தங்களது தலைவர் மியாட் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், அவரது உடல்நலம் குறித்து வதந்திகளும் பரவியது தொண்டர்களை அது சோர்வடையச் செய்தது. இந்த நிலையில், விஜயகாந்த்தை நேரில் சந்திக்கும் ஆவலிலிருந்தனர்


முன்னதாக பூரண உடல்நலத்துடன் மியாட் மருத்துவமனையிலிருந்து  விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது தமிழ்நாட்டு அவரது ஆதரவு மக்களிடையே பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது. கட்சிக்கு அப்பாற்பட்டு, திரையுலகில் மட்டுமல்லாது பொதுமக்களிடையே நடிகர் விஜயகாந்தின் மீது தனிப் பிரியம் இருந்து வருவது நிஜம். மருத்துவமனையில், சிகிச்சைப் பலனளிக்கவில்லை... அபாய கட்டம் என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் கட்சியினர், நண்பர்கள்  மனதிற்குள் பிரார்த்தனை செய்யத் துவங்கியிருந்தனர்.  மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுக்கும் ஆக்ஸிஜன் ஏற்றப்பட்டுள்ளது. இனி கட்சியை சுழன்றடிக்கும் சுனாமியாக நடத்த அவரது மனைவி பிரேமலதா  முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் வரை சுழன்றடிக்க திட்டங்கள் வகுக்கப்படுவதாகவும்  கூறுகிறார்கள். அவரது வளர்ச்சிக்கு இப்போது விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் பலம் சேர்ப்பார் என நம்பும் நிலையில், டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற அக்கட்சித் தலைமை  அறிவித்துள்ளது. 



 டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில், சென்னை, திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் திருமண மண்டபத்தில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும், பொதுக்குழு கூட்டத்தில் தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும் கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்கள் என்று அக் கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.




இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், தேர்தல் பணி குழு செயலாளர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்ட நிலையில்




இனி பொதுமேடைகளுக்கு விஜயகாந்த் வர மாட்டார்.. அக் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பு பிரேமலதா வசமாகும் எனபதே எதிர்பார்ப்பாக நிலவிய போதும் .





அதேபோலவே தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா  கட்சியின் புதிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். விஜயகாந்த் உடல்நிலை மோசமான நிலையில்.. பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலாளராகியுள்ளார்.







பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பிரேமலதாவை ஒருமனதாக் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரேமலதா கையைத் தூக்கி விஜயகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

விஜயகாந்த் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரமளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 இனிமேல் விஜயகாந்த் பொதுமேடைகளுக்கு வர மாட்டார்.. அவர் பெரும்பாலும் ஒதுங்கியே இருக்க வாய்ப்பு ள்ளதாக தேமுதிக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவர் இனி ஒதுங்கியே இருப்பார். கட்சி தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொள்ளவே மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

அவர் கட்சியின் நிறுவனராகவே இருப்பார். மற்றபடி உறுப்பினராக நீடிப்பார். அதைத் தாண்டி கட்சியில் எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டார். அவர் பொது மேடைகளுக்கு வரவே வாய்ப்புகள் இல்லை. அவர் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் அதிகம் உள்ளது. அதனால் இனி அவர் வீட்டிலேயே ஓய்வு எடுப்பார்.

உடல்நிலை மோசமாகி விட்டதால்.. அவர் இனி வரும் காலங்களில் ஓய்வு எடுப்பார். அரசியல் நிகழ்வு, சினிமா நிகழ்வு எதிலும் கலந்து கொள்ள மாட்டார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாகக் கூறப்படுகிறது.

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்தக் கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தது. முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்ட மியாட் மருத்துவமனையும் அறிக்கை வெளியிட்டது. அதில், மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

எனினும் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம் என்று கூறியது. அதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக ஒரு வாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில். முழுமையாக உடல்நிலை குணமாகி அவர் கடந்த 3 நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புகைப்படத்தை அவரின் மனைவியும், கட்சியின் பொருளாளரும் தற்போதய பொதுச்செயலாளருமான பிரேமலதா வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. வதந்திகளை எல்லாம் உடைக்கும் விதமாக இந்தப் புகைப்படத்தை விஜயகாந்த் மனைவி பிரேமலதா வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன. அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டது. மோசமாக்கிக்கொண்டு இருக்கிறது. அதனால் ரசிகர்கள், தொண்டர்கள் அங்கே குவிந்து வந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவரும் மியாட் மருத்துவமனைக்கு காவல்துறைப் பாதுகாப்பு போடப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு சுமார் 10 காவலர்கள் தடுப்புவேலிகளுடன் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

மேலும் சந்தேகத்தை கொடுத்ததையடுசமூக வலைதளத்து நபர்கள் பலரும் தங்கள் கற்பனைகளை, சோகமான பதிவுகளை போடத் தொடங்கினர். இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியதையடுத்தே பிரேமலதா  அந்த போட்டோக்களை வெளியிட்டு வதந்திகளை நீக்கினார் .2016 ஆம் ஆண்டில் விஜயகாந்திடம் திமுக ஆதரவை எதிர் பார்த்தது 




இவையெல்லாம் அப்போது வந்த  கார்ட்டூன்கள்.கைங்கர்யம்

விஜயகாந்த் கூட ஒரு பிரபல இதழ் இப்படியெல்லாம் கார்ட்டூன் போடுவது குறித்து கோபப்பட்டு பேட்டி கொடுத்தார்.. 



ஆனால் கார்ட்டூனிஸ்ட்டுகள் அந்தச் சூழலை  பயன்படுத்திக் கொண்டனர். இந்தச் சூழலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணஸமலை கருத்தாக தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி அவர்கள், தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.


தமிழக மக்களின் பேரன்புக்கு உரியவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆற்றலும், துணிச்சலும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடமும் வெளிப்படுவதைக் கண்டிருக்கிறேன். கேப்டன் அவர்கள் முன்னெடுத்த மாற்று அரசியலை, மேலும் பல படிகள் முன்கொண்டு செல்ல, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என அண்ணாமலை தெரிவித்த தகவல் அதிமுகவை முடித்து வைப்பவராக எடப்பாடி பழனிசயசாமிக்கு ஒரு நிலை வரும் போது பாஜகவுக்கு நேரடியாக வரமுடியாத நபர்களை தேமுதிகவை விழுங்க வைக்க நடக்கும் ஒரு முயற்சியாகவே இந்த நிகழ்வைக் காணலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...