முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வர்மா கன்ஸ்ட்ரக்ஷனுக்கும் சேலம் மாடர்ன் தியேட்டருக்கும் மூன்றாம் தரப்பு நிலை தான் உரிமை சட்டப்படி கோர முடியாது

 சேலம் மாடர்ன் தியேட்டர்


நுழைவாயில்  சம்பந்தமாக வர்மா கன்ஸ்ட்ரக்சன்  விஜயவர்மன் பத்திரிகையாளர்களைச்  சந்தித்தார், தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக நவீன வசதிகளுடன்  சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில், புதிய தொழில் நுட்பங்களை புகுத்தியவர்  திருச்செங்கோடு இராமலிங்க சுந்தரம் முதலியார் - .வெறும் அது ஒரு சினிமாக் கம்பெனி மட்டுமல்ல. சாதனைகளின் சிகரம்.

அதை விட தமிழ்நாட்டில் குறிப்பாக சேலத்தின்  அடையாளம். நாட்டின் சுதந்திரத்திற்கு 12 ஆண்டுக்கு முன் நிறுவப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ். அதன்



நிறுவனரான டி.ஆர்.சுந்தரம் வெளிநாட்டில் படித்தவர்  அங்கு திரைப்பட நிபுணர்களையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு வந்து தமிழ்நாட்டில் சினிமா வளர்ச்சிக்கு  அடித்தளமிட்டவர்.

1940-ஆம் ஆண்டில் பேசும் படத்தை முதன் முதலில் தந்தவர் உத்தமபுத்திரன் என பி யு சின்னப்பாவை வைத்து இரட்டை வேடம் படத்தை தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ். மலை ஏற்காட்டின் இயற்கை வளத்தை ஒவ்வொரு படங்களிலும் காட்டினர்.

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் புதுக்கோட்டை பி யு சின்னப்பா, எம்ஜிஆர், டி.ஆர்.ராஜகுமாரி, வி.என்.ஜானகி, கலைஞர் , சிவாஜி,  கவிஞர் கண்ணதாசன் என பிரபலங்களுக்கு ஏணியாக

சேலம் ஏற்காடு சாலையில் அமைந்த மாடர்ன் தியேட்டர்ஸ் அதன் நுழை வாயிலில் காலடி படாத.  திரைப்பட நட்சத்திரங்களே அந்நாளில் கிடையாது எனலாம்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் டி ஆர் சுந்தரத்தின் அழிக்க முடியாத சாதனை. சேலத்தின் பொதுவான அடையாளம்  




சேலம் ஏற்காடு சாலையில் 1935 ஆம் ஆண்டு  மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ தொடங்கப்பட்டது.மாடர்ன் தியேட்டர்ஸ் லிமிடெட்  1935 ஆம் ஆண்டில் தென் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக் கூடம் இதுவே. சென்னை நகரங்களை விட்டு முதன் முதலாக சேலம் போன்ற வெளி நகரம் ஒன்றில் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கப்பட்டது . மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படக் கூடம் ஒரு காலத்தில் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கியது. முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ணப்படத்தைத் தயாரித்த நிறுவனம் 1982ஆம் ஆண்டுவரை 150க்கும் மேலான தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலத்திலும் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டவற்றில் பெரும்பாலானவை தமிழ்த் திரைப்படங்களே.

டி.ஆர்.சுந்தரம், சேலம் மாவட்டம், திருச்செங்கோட்டில் 1907 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி பிறந்தவருடைய தந்தை நூற்பாலைகளில்  நூல் வாங்கி மொத்த வியாபாரம் செய்த வி.வி.சி. ராமலிங்க முதலியாருக்கும்  . தாயார் கணபதியம்மாளுக்கும் ஐந்தாவது மகனாக டி.ஆர்.சுந்தரம் பிறந்தார். சேலத்தில் கல்வி கற்று பின், சென்னை மாநிலக் கல்லூரியில், "பி.ஏ" மற்றும் "பி.எஸ்.சி" பட்டங்கள் பெற்ற பின்  இங்கிலாந்தில் ஜவுளித் தொழிலில் உயர் கல்வி பயின்றார். நூல்களுக்கு வண்ணம் சேர்க்கும் தொழில் நுட்பத்தை கற்றார்  லண்டனில் டி.ஆர்.சுந்தரத்துக்கும், 'கிளாடிஸ்' என்ற பெண்ணைத்  திருமணம் செய்து கொண்டார்.. லண்டனிலிருந்து  சேலம் திரும்பிய போது 1933 ஆம் ஆண்டில் சேலத்தில் "ஏஞ்சல் பிலிம்ஸ்"  நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டது. திரைப்படத் தொழிலில் ஆர்வம் கொண்ட டி.ஆர்.சுந்தரம், ஏஞ்சல் பிலிம்ஸ் அதிபர்களான வேலாயுதம் பிள்ளை, சுப்பராய முதலியார் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து திரைப்படங்களைத் தயாரித்தார்.



அவை 'திரௌபதி வஸ்திராபரணம்'(1934), 'துருவன்'(1935), 'நல்ல தங்காள்'(1935) ஆகும் அக்காலத்தில் தமிழ்ப் படங்கள் வட இந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. டி.ஆர். சுந்தரம் குழுவினரும் கொல்கத்தா  சென்று இரண்டு படங்களை எடுத்தார்கள். இவ்விரண்டு படங்களும் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்தன. ஒவ்வொரு முறையும் கொல்கத்தா செல்ல வேண்டுமா என நினைத்த சுந்தரம், சேலத்தில் தானே ஒரு படத் தயாரிப்பு நிறுவனம்  ஏற்காடு மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலத்தை  வாங்கினார். வளாகத்தினுள் நுழைந்தால், அங்கேயே முழுப்படத்தையும் தயாரிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் இருக்கவேண்டும்" என்று நினைத்தார். படப்பிடிப்பு தளம், பாடல் பதிவு செய்வதற்கான அறை, கூடம், திரைப்படத்தை போட்டுப்பார்க்க ஒரு அரங்கம் என அனைத்து வசதிகளுடனும், 1935 ஆம் ஆண்டில் "மாடர்ன் தியேட்டர்ஸ்" நிறுவனம் உருவாகி எடுத்த முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் ஆகும்.         இந்த நிலை அந்த நிறுவன வரலாறு 100 ஆண்டுகள் தொடரும் நிலை  இந்த நிலையில்  அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்கள் சந்திப்பில் 

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயிலில் சிலை அமைப்பது தொடர்பான விவகாரம் குறித்து வெளியான செய்திக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக அந்த இடத்தைக் கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன. இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது தற்போது மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியின் நுழைவாயில் வளைவு சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண் 8 இல் உள்ளது.





இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால் டிசம்பர் 2 ஆம் தேதி  அளவீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின்போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அரசின் நில வரைபடத்தில் உள்ளவாறு எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர வேறு இடத்தைக் கேட்டு அரசுத் தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை எனத் தெளிவுபடுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு  விமான நிலையத்திற்கு கு.காமராஜர் பெயர் காணாமல் போனது போனது தான் அப்போது சேலம் காங்கிரஸ் கட்சியின் தூண்களில் ஒருவராக இருந்த டி ஆர் சுந்தரத்தின் மாடர்ன் தியேட்டர்ஸும் ஸ்வாகா ஆகிறதா .என வினா எழக் காரணம் 

அமிர்தாஞ்சன் பங்களாவை சசிகலா நடராஜன் அபகரிக்கப் பார்த்த போது இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் குமுறி எழுந்து களமாடிய பொழுதுகளில் பார்த்து பலர் அந்த அராஜகத்தை எதிர்த்த நாட்கள் உண்டு.

1920 ஆம் ஆண்டுகளிலிருந்திருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸின் வளைவு இருக்கும் இடம்

1945 ஆம் ஆண்டில் உருவான ஆர்ச் நெடுஞ்சாலைத்துறையின்

இடமாக எப்போது ஆனது. என்பது ஏழு வினா? ஆனாலும் இது முன்னணி தொழில்துறை இயந்திரங்கள் வழங்குபவராக உள்ள வர்மா கண்ஸ்ட்ரக்ஷன், தமிழகத்திற்கு வெளியே வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 



வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட். லிமிடெட் என்பது விஜய் குழும நிறுவனங்களின் ஒரு சகோதர நிறுவனமாகும், இது 1984 ஆம் ஆண்டில் சேலத்தில் நிறுவப்பட்ட முன்னணி தொழில்துறை இயந்திரங்கள் வழங்குபவராக உள்ளது, மேலும் இது தமிழகத்திற்கு வெளியே வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. வாடகைக்கு வாங்குதல், ஏற்றுமதி, மூலிகைப் பிரித்தெடுத்தல், நவீன ரியல் எஸ்டேட், வணிக வளாகங்கள் கட்டுதல், தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு வழிச் சாலைகள் அமைத்தல் & ஆம்ப்; ரயில்வே ஒப்பந்தங்கள். வர்மா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் 2006 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, ஒருங்கிணைந்த நுழைவு சமூக நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

வர்மா கன்ஸ்ட்ரக்ஷனின் குறிக்கோள், ஐடி பூங்காவுக்கான SEZ அமைப்பது, சுற்றுலாத் துறையில் நுழைவது, வணிக வளாகங்கள் கட்டுவது மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ஹைப்பர் நகரத்தை உருவாக்குவது, சிறந்த பராமரிப்பு, தனிப்பட்ட வாடிக்கையாளர் கவனம் போன்ற பல செயல்பாடுகளுடன் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற வேண்டும். வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட், மிக உயர்ந்த கட்டுமானத் தரமான சர்வதேச வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது எல்லாத் திட்டங்களுக்கும் அடையாளமாக இருக்கும்.

இயக்குநர்கள் குழுவில் மலர்விழி - நிர்வாக இயக்குநர், ஆர்.விஜய் வர்மன் பி.இ., எம்.பி.ஏ., - இயக்குநர் மற்றும் ரவி வர்மா தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோர் நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகள், நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றால் வழி வகுத்துள்ளனர். ஏற்காடு மலையடிவாரத்தில் சுந்தர் கார்டர்ன் எனப் பெயரிடப்பட்டுள்ள நவீனமயமாக்கப்பட்ட வீடுகளுடன் கூடிய 9 ஏக்கர் சாட்டிலைட் டவுன்ஷிப்பின் புதிய முயற்சி, இதில் சேலம் மாநகரில் அனைத்து நவீன வசதிகளுடன் 74 அழகான தனிநபர் வில்லாக்கள்  கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியானது எங்கள் NRI வாடிக்கையாளர்கள் மற்றும் சேலம் மாவட்ட மக்களிடையே சரியான நற்பெயரை பெற்றுள்ளது.

அதன் இலக்கின் ஒரு பகுதியாக வர்மா கட்டுமான பிரைவேட் லிமிடெட். லிமிடெட் பல அரசு திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

சேலம் மக்கள் மத்தியில் எங்களின் நற்பெயர், எங்கள் ஊழியர்களின் நேர்மையான பக்தி, முறையான வேலைத் திட்டம் மற்றும் நடுத்தர பட்ஜெட் வீடுகளுக்கான எதிர்கால தேவை பற்றிய தொலைநோக்கு ஆகியவற்றின் அடிப்படையில். வர்மா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட். லிமிடெட் மற்றொரு ஒருங்கிணைந்த நுழைவு சமூக ஸ்மார்ட் நகரத்தை உருவாக்க 50 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட். லிமிடெட், சேலம் நகரின் மையப்பகுதியில், சேலம் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் வணிக வளாகம் கட்டவும் திட்டமிட்டுள்ளது. உத்தேச வணிக வளாகத்தில் அனைத்து சமீபத்திய உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் இருக்கும், இது வர்மா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின்  மேலும் ஒரு வலு சேர்க்கும். சேலம் வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் மேலாண்மை இயக்குனர் விஜய வர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது, "சேலம் ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் உள்ளது மார்டன் தியேட்டர். முன்னாள் முதலமைச்சர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்களை உருவாக்கியது என்றாலும்  மார்டன் தியேட்டர்ஸ் 2004 ஆம் ஆண்டு ரவிவர்மா என்பவருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகம் விற்பனை செய்தது.இதனையடுத்து மார்டன் தியேட்டர்ஸ் தற்போது வீட்டு மனைகளாக உருவெடுத்தது. பிரசித்தி பெற்ற மாடன் தியேட்டர்ஸ் வளாகம் வீட்டு மனைகளாக ஆனாலும் அதன் முகப்பு பகுதி தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரவிவர்மா மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது,  இதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞரும் நேரில் பார்வையிட்டு பாராட்டினார். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்தபோது மார்டன் தியேட்டரை பார்வையிட்டு அதன் முகப்புப் பகுதியில் நின்று செல்பி எடுத்தார்.இந்த புகைப்படம் பெரும் வைரலானது. முதலமைச்சர் புகைப்படம் எடுத்த தருணம் மாடன் தியேட்டர்ஸ் நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியது. அன்று இரவே மாவட்ட ஆட்சியர் ரவி        வர்மா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குனரானவரை நேரில் அழைத்து தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். இதன்படி ரவி வர்மா கன்ஸ்ட்ரக்சன் மேலாண்மை இயக்குனர் விஜயவர்மா மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோர் மூவரும் சந்தித்து பேசி உள்ளனர்.அப்போது தமிழக முதலமைச்சர், சம்பந்தப்பட்ட மாடன் தியேட்டர்ஸ் இடத்தை பராமரித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்ததாகவும், மேலும் அங்கு உள்ள 1345 சதுர அடி நிலம் வேண்டும் என்றும் விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள் என முதலமைச்சர் கூறியதாக தெரிவித்தார்.இதற்கு அவர் குடும்பத்தோடு கலந்து உரையாடிவிட்டு சொல்வதாக தெரிவித்து விட்டு வந்து விட்டதாகவும், பிறகு மாவட்ட ஆட்சியர் நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சிலை வைக்க தமிழ்நாடு முதலமைச்சர் விரும்பியதாகவும், அதனால் அந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் எனவும்  தெரிவித்ததாகவும் பலமுறை தனியாகவும்  நேரிலும அழைத்து விபரம் தெரிவித்தார். 




இந்த நிலையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சந்தித்து தன்னை இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசியதாகவும் தெரிவித்தார். பிரசித்தி பெற்ற மாடன் தியேட்டர்ஸ் முகப்பு பகுதி நினைவுச்சின்னமாகவும் மூன்று முதலமைச்சர்களையும் பல்வேறு ஜாம்பவான்களையும் உருவாக்கிய இடம் என்பதால் அதை சிறிய அருங்காட்சியமாக அமைக்க சொந்த செலவில் ஏற்பாடு செய்ய திட்டமிட இருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் கேட்டது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் யோசித்து முடிவு செய்து சொல்வதாக தெரிவித்தேன் என்றார்.இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் திடீரென மாநகராட்சி பொதுப்பணித்துறை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அனுப்பி சம்மந்தப்பட்ட மாடன் தியேட்டர்ஸ் உள்ள முகப்பு பகுதியை திடீரென அத்துமீறி அளவீடு செய்து தன்னை அச்சுறுத்தியதகாவும் தன்னுடைய பேரில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு பகுதி மற்றும் 1345 சதுரடி நிலம் உள்ளதற்கான அனைத்து ஆதாரங்களும் வருவாய் துறையின் சார்பில் வழங்கப்பட்ட ஆவணங்களை காட்டியும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் தன்னை ஒருமையில் பேசி அவமரியாதை செய்ததோடு தன்னை அச்சுறுத்ததாகவும் தெரிவித்தார்,

சேலம் வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் மேலாண்மை இயக்குனர் விஜய வர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "சேலம் ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் உள்ளது மார்டன் தியேட்டர். முன்னாள் முதலமைச்சர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் பல்வேறு முன்னணி நடிகர்களை உருவாக்கிய மார்டன் தியேட்டர்ஸ் 2004 ஆம் ஆண்டு ரவிவர்மா என்பவருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் நிர்வாகம் விற்பனை செய்தது.

இதனையடுத்து மார்டன் தியேட்டர்ஸ் தற்போது வீட்டு மனைகளாக உருவெடுத்தது. பிரசித்தி பெற்ற மாடன் தியேட்டர்ஸ் வளாகம் வீட்டு மனைகளாக ஆனாலும் அதன் முகப்பு பகுதி தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரவிவர்மா மூலம் பராமரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதனை முன்னாள் முதலமைச்சர் கலைஞரும் நேரில் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த 2023 ஜனவரி மாதம் தமிழக முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்தபோது மார்டன் தியேட்டரை பார்வையிட்டு அதன் முகப்பு பகுதியில் நின்று செல்பி எடுத்த

இந்த புகைப்படம் பெரும் வைரலானது. முதலமைச்சர் புகைப்படம் எடுத்த தருணம் மாடன் தியேட்டர்ஸ் நிர்வாகத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியது. அன்று இரவே மாவட்ட ஆட்சியர் ரவிவர்மா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குனரை நேரில் அழைத்து தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி ரவி வர்மா கன்ஸ்ட்ரக்சன் மேலாண்மை இயக்குனர் விஜயவர்மா மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் மூவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது தமிழக முதலமைச்சர், சம்பந்தப்பட்ட மாடன் தியேட்டர்ஸ் இடத்தை பராமரித்து வருவதற்கு பாராட்டு தெரிவித்ததாகவும், மேலும் அங்கு உள்ள 1345 சதுர அடி நிலம் வேண்டும் என்றும் விருப்பம் இருந்தால் தெரிவியுங்கள் என முதலமைச்சர் கூறியதாகத் தெரிவித்தார்.

இதற்கு அவர் குடும்பத்தோடு கலந்து உரையாடிவிட்டு சொல்வதாக தெரிவித்து விட்டு வந்து விட்டதாகவும், பிறகு சேலம் மாவட்ட ஆட்சித்  தலைவர் நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சிலை வைக்க தமிழக முதலமைச்சர் விரும்பியதாகவும், அதனால் அந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என தெரிவித்ததாகவும் பலமுறை தனி நேரில் அழைத்து தெரிவித்தார். இதற்கு தான் மறுப்பு தெரிவித்ததோடு யோசித்து சொல்வதாக தெரிவித்ததாகவும் கூறினார்.

இந்த நிலையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் சந்தித்து தன்னை இந்த கோரிக்கையை வலியுறுத்தி பேசியதாகவும் தெரிவித்தார். பிரசித்தி பெற்ற மாடன் தியேட்டர்ஸ் முகப்பு பகுதி நினைவுச்சின்னமாகவும் மூன்று முதலமைச்சர்களையும் பல்வேறு ஜாம்பவான்களையும் உருவாக்கிய இடம் என்பதால் அதை சிறிய அருங்காட்சியமாக அமைக்க சொந்த செலவில் ஏற்பாடு செய்ய திட்டமிட இருந்த நிலையில் தமிழக முதலமைச்சர் கேட்டது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் யோசித்து முடிவு செய்து சொல்வதாக தெரிவித்தேன் என்றார்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் திடீரென மாநகராட்சி பொதுப்பணித்துறை வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை அனுப்பி சம்மந்தப்பட்ட மாடன் தியேட்டர்ஸ் உள்ள முகப்பு பகுதியை திடீரென அத்துமீறி அளவீடு செய்து தன்னை அச்சுறுத்தியதகாவும் தன்னுடைய பேரில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் முகப்பு பகுதி மற்றும் 1345 சதுரடி நிலம் உள்ளதற்கான அனைத்து ஆதாரங்களும் வருவாய் துறையின் சார்பில் வழங்கப்பட்ட ஆவணங்களை காட்டியும் அதிகாரிகள் அதனை பொருட்படுத்தாமல் தன்னை ஒருமையில் பேசி அவமரியாதை செய்ததோடு தன்னை அச்சுறுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் எனக்கு சொந்தமான மூன்றரை ஏக்கர் கோரிமேடு தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ளது இந்த நிலம் தொடர்பாக தமிழ்நாடு ஹவுசிங் போர்டுக்கும் எனக்கும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரிகள் அத்துமீறி அங்கு சென்று அங்கு போடப்பட்டிருந்த பெயர் பலகை மற்றும் அலுவலகத்தை அத்துமீறி நுழைந்து ஜேசிபி வாகன மூலம் இடித்தாகவும் தெரிவித்தார்.

இது குறித்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் நீதிமன்றமும் அவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கலைஞர் நல்ல கதாசிரியராக, வசனகர்த்தாவாக, இலக்கிய வாதியாக இயல் இசை நாடகம் என  சங்கரதாஸ் சுவாமி போல இல்லாவிட்டாலும் அடுத்த நிலையில்  முத்தமிழ் வளர்த்த வித்தகராவார்,  

கடலில் பேனா, சேலத்தில் சிலை என "எங்கள் குடும்பம் தான் தமிழ்நாடு" என தமிழகத்தின் வரலாற்றை சொல்ல வைக்கிறீர்கள். 

இது எதிர்வினையை அதிகமாக்கும்.  என அப்பகுதி மக்கள் மத்தியில் அதிகம் பேச்சும் விவாதமும் நடக்கக் காரணமாகிறது,

அந்த எதிர்வினையை இதுவரை எம்ஜியாரும் ஜெயலலிதாவும் பலமாய் இருந்து பக்காவாக அஇஅதிமுக  அறுவடை செய்ய வைத்தார்கள். 

இப்போது வெளியில் இருவரும் திருடன் காவலன் விளையாட்டு ஆடினாலும் 

அஇஅதிமுகவை மற்றொரு அரசியல் குத்தகையாக எடுத்துக்கொண்டுவிட்டது

என்பதே பேருண்மை. 

திமுகவும்   குடும்பம் ஒரு குடும்பக் கட்டுப்பாட்டில் தான் தமிழ்நாட்டின் அடையாளமாக மாறியுள்ளதை பலரும் காணும் நிலை

எதிர்வினையை இனி அறுவடை செய்வது மத்திய அரசியலா அல்லது மாநில அரசியலா என்பதை கவணிக்க வேண்டியது சக பத்திரிக்கைகளின் கடமை.

ஏராளமான திரைக்கலைஞர்களுக்கும் தாய் வீடான 'மாடர்ன் தியேட்டர்ஸ்' தற்பொழுது வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் ரியல் எஸ்டேட் நிறுவனம் விலைக்கு வாங்கி அதில் நவீன குடியிருப்பு வளாகமாக கட்டி விற்று  அது மாறிவிட்டது. மாடர்ன் தியேட்டரை ஞாபகப்படுத்தும் ஒரே அடையாளமாக 'மாடர்ன் தியேட்டார்ஸ்'  என்ற அலங்கார வளைவு மட்டும் இன்றும் மௌன சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது. அதற்கும் வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை  அவர்கள் மூன்றாம் தரப்பினர் இந்த நிறுவனத்தினர் சுந்தரத்தின் வாரிசுகளுமில்லை அவருக்கு ஏற்காட்டில் வாழ்ந்த ஆங்கிலேய.  மனைவி  இரண்டு மகன்கள் உண்டு, அவர்கள் பேச வேண்டியதை எல்லாம் இந்த வர்மா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் விஜயவர்மா மற்றும் ரவிவர்மா இவர்கள்  பேசுவது வேடிக்கை  என்பதே இங்கு பொதுநீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்