முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருநெல்வேலி வெள்ளக்காட்சிகள். கதிகலங்கும் தென் மாவட்டங்கள்.

சென்னை புயல் வெள்ளம் முடிந்த நிலையில் தென் தமிழ்நாட்டில் நேற்றும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும், பின்னர் படிப்படியாக மழை குறையுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  தென்குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய சில பகுதிகளில் வளிமண்டலச் சுழற்சி நீடிக்கிறது. இந்த வளிமண்டலச் சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் அதிகக்கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து திருச்செந்தூரில் 68 செ.மீ மழையும்,


ஸ்ரீவைகுண்டத்தில் 62 செ.மீ மழையும், கோவில்பட்டியில் 50 செ.மீ., மழையும் தூத்துக்குடியில் 36 செ.மீ.மழையும், கடம்பூரில் 35 செ.மீ. மழையும், ஒட்டப்பிடாரத்தில் 36 செ.மீ., கயத்தாறு, வேதநத்ததில் தலா 27 செ.மீ மழையும் பதிவாகியது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 668 செ.மீ மழை  சராசரியாக 36 செ.மீ மழை பதிவானது. விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் 15 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பொழிந்து வருகிறது. சாத்தூரில் 20 செ.மீ. மழை பெய்ததால் ஏரி,கண்மாய், குளங்கள் நிரம்பின. வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சாத்தூர் அருகே யுள்ள 3 அணைகளுலும் நீர் திறக்கப்பட்டுள்ளது.அணைகள் மற்றும்  நீர்நிலைகளுக்குச் செல்லாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலியில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் அதிகமான மழையால் மாவட்டத்தின் முக்கியப்பகுதியான இரயில்வே ஜங்ஷனே மூழ்கிப் போய்விட்டது. கொக்கரக்குளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் இருக்கிறதா இல்லையா எனத் தெரியாத அளவுக்கு வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறநிலையில், ஜங்ஷனில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் லெட்சுமி விலாஸ் எனும் அல்வாவுக்குப் பிரபலமான இருட்டுக்கடை முதற்கொண்டு இரயில் நிலையச் சாலையிலுள்ள அனைத்து கடைகளும் வெள்ளத்தில் மூழ்கிகஹ கிடப்பதை பார்க்க முடிகிறது. இதனை பார்த்து திருநெல்வேலி மக்கள் கண் கலங்கினர்.திருநெல்வேலி  உடையார்பட்டியில் வெள்ளத்தில மூழ்கிய வீட்டில் மீட்கப்பட்ட  சிவா (வயது45 ) என்பவரின் தந்தை மருத்துவமனைக்குப் போகும்போது வழியிலேயே  இறந்துவிட்டார்.

தாயார் திருச்சிராப்பள்ளியில் வங்கிப் பணியில் உள்ளார். உறவினர்கள் வீடுகளிலும் வெள்ளம்,  பள்ளியில் படிக்கும் மகளும், கல்லூரி படிக்கும் மகனும் தந்தை உடலைக் கொண்டு செல்ல வழி இன்றி தவித்து நிற்கின்றனர்,இது திருநெல்வேலி  பகுதி கிராமங்களில் ஒரு சொலவடைஉண்டு 

"ஏய்யா குளம் ஒடைஞ்சு போகயைலே கும்மிட்டிக் காயா குறுக்க நிற்கப் போகுது.

நீ போயா... போயி சோலிகளைப் பாருன்னு..." ஆனால் இது அபரிமிதமான வெள்ளம் பாதிப்புகள் அதிகம் 


தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம் உடைந்து தூத்துக்குடி மாநகரை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சில நாட்களுக்கு யாரும் வெளியூர்களில் இருந்து வர வேண்டாம். திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் பாதையின் அடிப்பகுதி நீரில் அடித்துச் சென்றுவிட்டதால் இன்னும் சில நாட்களுக்கு திருச்செந்தூருக்கு ரயில் போக்குவரத்து இருக்காது.கண்ணீரை வரவழைக்கும்  திருநெல்வேலி வெள்ளக்காட்சிகள். கதிகலங்கும் தென் மாவட்டங்கள்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள திருப்புடைமருதூர் கிராமம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ளது.

இந்த கிராமத்தில் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள கல் மண்டபத்தின் உச்சியில் குரங்கு தலைகீழாக குனிந்து தண்ணீர் குடிப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது இந்த மண்டபம் மூழ்குவது வழக்கம். 

அப்படி, இந்த மண்டபம் மூழ்கும் போது தாமிரபரணி ஆற்றில் எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பதை கணக்கிட வித்தியாசமான யுக்தியை பண்டைய தமிழர்கள் கையாண்டதாக கூறப்படுகிறது.

குரங்கின் தலை நீரில் மூழ்கினால் வினாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் செல்வதாக கணக்கிட்டனர்  .   உங்களுக்கு தாம்யா இது இயற்கைப் பேரிடர்.


எங்களுக்கு மாமழை போற்றுதும்...என விவசாயிகள் மகிழ்ச்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...