முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருநெல்வேலி வெள்ளக்காட்சிகள். கதிகலங்கும் தென் மாவட்டங்கள்.

சென்னை புயல் வெள்ளம் முடிந்த நிலையில் தென் தமிழ்நாட்டில் நேற்றும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.


இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும், பின்னர் படிப்படியாக மழை குறையுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.  தென்குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய சில பகுதிகளில் வளிமண்டலச் சுழற்சி நீடிக்கிறது. இந்த வளிமண்டலச் சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் அதிகக்கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து திருச்செந்தூரில் 68 செ.மீ மழையும்,


ஸ்ரீவைகுண்டத்தில் 62 செ.மீ மழையும், கோவில்பட்டியில் 50 செ.மீ., மழையும் தூத்துக்குடியில் 36 செ.மீ.மழையும், கடம்பூரில் 35 செ.மீ. மழையும், ஒட்டப்பிடாரத்தில் 36 செ.மீ., கயத்தாறு, வேதநத்ததில் தலா 27 செ.மீ மழையும் பதிவாகியது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 668 செ.மீ மழை  சராசரியாக 36 செ.மீ மழை பதிவானது. விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் 15 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பொழிந்து வருகிறது. சாத்தூரில் 20 செ.மீ. மழை பெய்ததால் ஏரி,கண்மாய், குளங்கள் நிரம்பின. வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சாத்தூர் அருகே யுள்ள 3 அணைகளுலும் நீர் திறக்கப்பட்டுள்ளது.அணைகள் மற்றும்  நீர்நிலைகளுக்குச் செல்லாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருநெல்வேலியில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் அதிகமான மழையால் மாவட்டத்தின் முக்கியப்பகுதியான இரயில்வே ஜங்ஷனே மூழ்கிப் போய்விட்டது. கொக்கரக்குளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் இருக்கிறதா இல்லையா எனத் தெரியாத அளவுக்கு வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறநிலையில், ஜங்ஷனில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் லெட்சுமி விலாஸ் எனும் அல்வாவுக்குப் பிரபலமான இருட்டுக்கடை முதற்கொண்டு இரயில் நிலையச் சாலையிலுள்ள அனைத்து கடைகளும் வெள்ளத்தில் மூழ்கிகஹ கிடப்பதை பார்க்க முடிகிறது. இதனை பார்த்து திருநெல்வேலி மக்கள் கண் கலங்கினர்.திருநெல்வேலி  உடையார்பட்டியில் வெள்ளத்தில மூழ்கிய வீட்டில் மீட்கப்பட்ட  சிவா (வயது45 ) என்பவரின் தந்தை மருத்துவமனைக்குப் போகும்போது வழியிலேயே  இறந்துவிட்டார்.

தாயார் திருச்சிராப்பள்ளியில் வங்கிப் பணியில் உள்ளார். உறவினர்கள் வீடுகளிலும் வெள்ளம்,  பள்ளியில் படிக்கும் மகளும், கல்லூரி படிக்கும் மகனும் தந்தை உடலைக் கொண்டு செல்ல வழி இன்றி தவித்து நிற்கின்றனர்,இது திருநெல்வேலி  பகுதி கிராமங்களில் ஒரு சொலவடைஉண்டு 

"ஏய்யா குளம் ஒடைஞ்சு போகயைலே கும்மிட்டிக் காயா குறுக்க நிற்கப் போகுது.

நீ போயா... போயி சோலிகளைப் பாருன்னு..." ஆனால் இது அபரிமிதமான வெள்ளம் பாதிப்புகள் அதிகம் 


தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம் உடைந்து தூத்துக்குடி மாநகரை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சில நாட்களுக்கு யாரும் வெளியூர்களில் இருந்து வர வேண்டாம். திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் பாதையின் அடிப்பகுதி நீரில் அடித்துச் சென்றுவிட்டதால் இன்னும் சில நாட்களுக்கு திருச்செந்தூருக்கு ரயில் போக்குவரத்து இருக்காது.கண்ணீரை வரவழைக்கும்  திருநெல்வேலி வெள்ளக்காட்சிகள். கதிகலங்கும் தென் மாவட்டங்கள்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள திருப்புடைமருதூர் கிராமம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ளது.

இந்த கிராமத்தில் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள கல் மண்டபத்தின் உச்சியில் குரங்கு தலைகீழாக குனிந்து தண்ணீர் குடிப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது இந்த மண்டபம் மூழ்குவது வழக்கம். 

அப்படி, இந்த மண்டபம் மூழ்கும் போது தாமிரபரணி ஆற்றில் எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பதை கணக்கிட வித்தியாசமான யுக்தியை பண்டைய தமிழர்கள் கையாண்டதாக கூறப்படுகிறது.

குரங்கின் தலை நீரில் மூழ்கினால் வினாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் செல்வதாக கணக்கிட்டனர்  .   உங்களுக்கு தாம்யா இது இயற்கைப் பேரிடர்.


எங்களுக்கு மாமழை போற்றுதும்...என விவசாயிகள் மகிழ்ச்சி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்