சென்னை புயல் வெள்ளம் முடிந்த நிலையில் தென் தமிழ்நாட்டில் நேற்றும் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும், பின்னர் படிப்படியாக மழை குறையுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தென்குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய சில பகுதிகளில் வளிமண்டலச் சுழற்சி நீடிக்கிறது. இந்த வளிமண்டலச் சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் அதிகக்கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93 செ.மீ மழையளவு பதிவாகியுள்ளது. தொடர்ந்து திருச்செந்தூரில் 68 செ.மீ மழையும்,
ஸ்ரீவைகுண்டத்தில் 62 செ.மீ மழையும், கோவில்பட்டியில் 50 செ.மீ., மழையும் தூத்துக்குடியில் 36 செ.மீ.மழையும், கடம்பூரில் 35 செ.மீ. மழையும், ஒட்டப்பிடாரத்தில் 36 செ.மீ., கயத்தாறு, வேதநத்ததில் தலா 27 செ.மீ மழையும் பதிவாகியது. காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டியது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 668 செ.மீ மழை சராசரியாக 36 செ.மீ மழை பதிவானது. விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் 15 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பொழிந்து வருகிறது. சாத்தூரில் 20 செ.மீ. மழை பெய்ததால் ஏரி,கண்மாய், குளங்கள் நிரம்பின. வெம்பக்கோட்டை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சாத்தூர் அருகே யுள்ள 3 அணைகளுலும் நீர் திறக்கப்பட்டுள்ளது.அணைகள் மற்றும் நீர்நிலைகளுக்குச் செல்லாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருநெல்வேலியில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்துவரும் அதிகமான மழையால் மாவட்டத்தின் முக்கியப்பகுதியான இரயில்வே ஜங்ஷனே மூழ்கிப் போய்விட்டது. கொக்கரக்குளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் இருக்கிறதா இல்லையா எனத் தெரியாத அளவுக்கு வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறநிலையில், ஜங்ஷனில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் லெட்சுமி விலாஸ் எனும் அல்வாவுக்குப் பிரபலமான இருட்டுக்கடை முதற்கொண்டு இரயில் நிலையச் சாலையிலுள்ள அனைத்து கடைகளும் வெள்ளத்தில் மூழ்கிகஹ கிடப்பதை பார்க்க முடிகிறது. இதனை பார்த்து திருநெல்வேலி மக்கள் கண் கலங்கினர்.திருநெல்வேலி உடையார்பட்டியில் வெள்ளத்தில மூழ்கிய வீட்டில் மீட்கப்பட்ட சிவா (வயது45 ) என்பவரின் தந்தை மருத்துவமனைக்குப் போகும்போது வழியிலேயே இறந்துவிட்டார்.
தாயார் திருச்சிராப்பள்ளியில் வங்கிப் பணியில் உள்ளார். உறவினர்கள் வீடுகளிலும் வெள்ளம், பள்ளியில் படிக்கும் மகளும், கல்லூரி படிக்கும் மகனும் தந்தை உடலைக் கொண்டு செல்ல வழி இன்றி தவித்து நிற்கின்றனர்,இது திருநெல்வேலி பகுதி கிராமங்களில் ஒரு சொலவடைஉண்டு
"ஏய்யா குளம் ஒடைஞ்சு போகயைலே கும்மிட்டிக் காயா குறுக்க நிற்கப் போகுது.
நீ போயா... போயி சோலிகளைப் பாருன்னு..." ஆனால் இது அபரிமிதமான வெள்ளம் பாதிப்புகள் அதிகம்
தூத்துக்குடி: கோரம்பள்ளம் குளம் உடைந்து தூத்துக்குடி மாநகரை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சில நாட்களுக்கு யாரும் வெளியூர்களில் இருந்து வர வேண்டாம். திருநெல்வேலி - திருச்செந்தூர் வழித்தடத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே ரயில் பாதையின் அடிப்பகுதி நீரில் அடித்துச் சென்றுவிட்டதால் இன்னும் சில நாட்களுக்கு திருச்செந்தூருக்கு ரயில் போக்குவரத்து இருக்காது.கண்ணீரை வரவழைக்கும் திருநெல்வேலி வெள்ளக்காட்சிகள். கதிகலங்கும் தென் மாவட்டங்கள்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள திருப்புடைமருதூர் கிராமம் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ளது.
இந்த கிராமத்தில் ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள கல் மண்டபத்தின் உச்சியில் குரங்கு தலைகீழாக குனிந்து தண்ணீர் குடிப்பது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது இந்த மண்டபம் மூழ்குவது வழக்கம்.
அப்படி, இந்த மண்டபம் மூழ்கும் போது தாமிரபரணி ஆற்றில் எவ்வளவு தண்ணீர் செல்கிறது என்பதை கணக்கிட வித்தியாசமான யுக்தியை பண்டைய தமிழர்கள் கையாண்டதாக கூறப்படுகிறது.
குரங்கின் தலை நீரில் மூழ்கினால் வினாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் செல்வதாக கணக்கிட்டனர் . உங்களுக்கு தாம்யா இது இயற்கைப் பேரிடர்.
எங்களுக்கு மாமழை போற்றுதும்...என விவசாயிகள் மகிழ்ச்சி
கருத்துகள்