முன்னாள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், ஐந்து முறை வெள்ளக்கோயில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த துரை. ராமசாமி முதுமை காரணமாக இன்று காலமானார்.
துரை ராமசாமி பத்தாண்டு காலம் வெள்ளக்கோயில் ஊராட்சிமன்றத் தலைவராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது காமராஜரின் என்சிஓ-வில் சேர்ந்து காமராஜரின் மறைவுக்குப் பின், ஜி.கருப்பையா மூப்பனாருடன் சேர்ந்து காங்கிரசுடன் இணைத்தார்.
1980-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுகப்பட்டதால் காங்கிரஸில் விலகி அதிமுகவில் இணைந்தார் அதன் பிறகு 1984, 1989, 1991 தேர்தலில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காலம்சென்ற முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது ஓபன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக நின்றார் வயது மூப்பால் அரசியலிலிருந்து ஒதுங்கியே இருந்தார். அவரது குலதெய்வமான வள்ளியரச்சல் ஸ்ரீ பொன் அழகு நாச்சியம்மன் திருக்கோவில் மன்றத் தலைவராகவும் இருந்த .துரை ராமசாமி வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
இன்று காலை துரை.ராமசாமி காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறுமென அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கருத்துகள்