12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழ்நாடு அரசு உத்தரவு.
திருப்பத்தூர், திருவண்ணாமலை,சேலம், தென்காசி, செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு .திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பாஸ்கர பாண்டியனும், சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர். பிருந்தா தேவியும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜும், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜும், தென்காசி மாவட்ட ஆட்சியராகக் கமல் கிஷோரும், வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை ஆட்சியராக இதுவரை இருந்துவந்த முருகேஷ் வேளாண்மைத் துறை இயக்குநராகவும்,வேலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த குமரவேல் பாண்டியன் தோட்டக்கலைத் துறை இயக்குநராகவும்,
தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்ந்திரன் உயர் கல்வித் துறை துணை செயலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லட்சுமி ஐஏஎஸ் மாற்றுத் திறனாளிகள் துறை இயக்குனராகவும், பிரகாஷ் ஐஏஎஸ், நடராஜன் ஐஏஎஸ் ஆகியோர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே பணியில் உள்ளவர்களை பணியிடமாற்றம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியதன்படி இந்த உத்தரவு வந்துள்ளதாகக் தெரிகிறது.
கருத்துகள்