முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாடிய இசைத்தட்டு பாதியில் நின்றது பவதாரிணி இலங்கையில் கொழும்பு நகரில் காலமானார்

இசையமைப்பாளர் இளையராஜவின் மகள் பவதாரிணி


இலங்கையில் கொழும்பு நகரில் காலமானார் - 

இசைஞானி இளையராஜாவின் மகள்  பவதாரணி 

வசீகரிக்கும் காந்த குரலுக்கு சொந்தமானவர் பாடிய பாஐல்கள்  அனைத்துமே வெற்றி பெற்ற பாடல்கள் தான்.


தற்போது ராமர் கோவில்  விழா முடித்து  இலங்கையில் நடக்கவிருந்த இசைநிகழ்வுக்காக இளையராஜா வந்திருந்தார் இந்த துயரமான சம்பவம் நிகழ்ந்ததால் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது 

 யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோரின் சகோதரியும், கங்கை அமரனது பெறாத வளர்ப்பு மகளும் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் ஆகியோரது உறவினருமாவார்.பாடிய இசைத்தட்டு பாதியில் நின்றது போல்

ஒரு பேரமைதி. பெருந்துயர் இசைஞானி குடும்பத்தில் காரணம் மருத்துவச் சிகிச்சை முறை மாறிய ஆபத்து அது ..


இது சங்கீதத் திருநாளோ என்று பாடியவர் இந்த நாளை வெறும் நாளாக்கிவிட்டுப் போய்விட்டார். அய்யோ அய்யய்யோ ..பச்சை இலையும்  பழுத்த இலையும் கிளை மறைய நிலை அழிய காற்றில் ஒரு களிநடனம்...பிரபஞ்ச இரகசியங்களை வெளிப்படுத்தும் அந்த நயநெளிவுகளில் நான் ஒரு மரப்பாச்சியானேன் பச்சையும் இல்லை பழுப்பும் இல்லை

நல்ல கவிஞரின் கவித்துவமான வரிகள் இங்கு அஞ்சலியாகிறது

கருத்துகள்