முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூபாய் .207 கோடி அசையாச் சொத்துகளைப் பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை தகவல்

 நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவான தேனி மாவட்ட மண்டலத் தலைவர் அப்பர் ராஜா கைது .


மதுரை, எஸ்.எஸ்.காலனியில்  தலைமையிடமான நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டதன் இயக்குநர்களாக கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி வீரசக்தி ஆகியோர் மீது பொதுமக்களின் முதலீட்டிற்கு அதிக லாபம் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் , இயக்குநர்கள் வீரசக்தி, கமலக்கண்ணன் ஆகியோர் அடங்கிய  27 பேரைக் கைது செய்தனர்.

17 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ரூபாய்.17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி கணக்குப் பரிவர்த்தனைகளையும்  முடக்கினர்,  அதன் துணை நிறுவனமான டிரான்ஸ்கோ பிராபர்டிஸ் பி.லிட். மற்றும் டிரைடாஸ் பிராப்பர்டிஸ் பி.லிட்., போன்ற கிளை நிறுவனங்களின் இயக்குநர்களையும் தேடி வந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் மேத்தா (வயது 42), டிரைடாஸ் பிராப்பர்ட்டிஸ் பி.லிட்., நிறுவன இயக்குநர் மதிவாணன் (வயது 40) ஆகியோரை பொருளாதாரகஹ குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தவர்களில் அசோக் மேத்தா, 400 பேரிடம் ரூ.60 கோடியும், மதிவாணன் 200 பேரிடம் ரூ.45 கோடியும் மோசடி செய்துள்ளதாக காவல்துறையினர் தரப்பில்  தெரிவித்த நிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த தேனி மாவட்ட மண்டல தலைவர் அப்பர் ராஜா கைது செய்யப்பட்டார். பலகோடி ரூபாய் மோசடி செய்து சொத்து சொத்துக் குவித்திருந்த அப்பர் ராஜாவை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த குழு ஒன்று நடத்தியதாகக் கூறப்படும் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக தமிழகத்தில் அமைந்துள்ள ரூபாய் .207 கோடி மதிப்பிலான அசையாச் சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையிலிருந்து ED விசாரணை உருவாகிறது.


நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் மீது முதலீட்டாளர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. லிமிடெட் மற்றும் அதன் குழும நிறுவனங்கள், "பல முதலீட்டாளர்களைப் பல்வேறு திட்டங்களில் (பிளாட் டெவலப்மெண்ட்) அதிக வருமானம் 12-30 சதவீத வட்டியுடன், தருவதாகக் கூறி, பல முதலீட்டாளர்களை ஏமாற்றி, அதில் அவர்கள் தராமல்  "தோல்வியடைந்ததாக" ED ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்ற இயழவில்லை எனக் கூறியது 

நியோமேக்ஸ் குழும நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலித்து, இந்த நிதியை ஷெல் நிறுவனங்கள், குழு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு (குழுவிற்கு வெளியே) "திறந்து" ஏமாற்றியதாக ED தெரிவித்துள்ளது.

குற்றத்தின் வருமானத்தை மறைக்க குழு அதன் கணக்குப் புத்தகங்களை "கையாண்டது" மற்றும் குழுவின் தணிக்கையாளர் தனது அறிக்கையில் இதை ஒப்புக்கொண்டார்.நியோமேக்ஸ் முறைகேடு ரூபாய்.78 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை முடக்கி அரசிதழில் வெளியிட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு .   நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில் ஆகியோர் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில், நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் கண்டறியப்பட்ட சொத்துகளை முடக்கி அரசிதழில் வெளியிடப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டது. இதற்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் , சிவகங்கை  என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் உள்ளனர். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12 சதவீதம்  முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும், இரண்டரை முதல் மூன்றாண்டுகளில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகத் தரப்படும் எனக் ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை ஈர்த்ததை நம்பி பலர் பல கோடிக்கு முதலீடுகளைச் செய்தனர். ஆனால் கூறியபடி யாருக்கும் வட்டியோ அசலோ தராமல் ஏமாற்றினர். அதனால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர்  காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ள கமலக்கண்ணன், வீரசக்தி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமினில் உள்ளனர். நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், கபில் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி, ரவிசங்கர், ராஜ்குமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் நம்பி செல்வன், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் சுமார் 51 லட்சம்  சதுர அடி நிலம் மற்றும் 78 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையால் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நடைபெறுகிறது என்றும் இந்தச் சொத்துக்களை முடக்கி, அரசிதழில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கி அரசிதழில் வெளியிடப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்