முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓயாத அலைகளாய் மீண்டும் மீண்டும் சீக்கிய உழவர்கள் தலைநகரில்

எந்தவிதமான சோர்வுகளும், தொய்வுமில்லாமல் 


ஓயாத அலைகளாய் மீண்டும் மீண்டும் சீக்கிய உழவர்கள் இந்திய அரசாங்கத்தின் தலைநகரான புதுடெல்லியில் தாக்குவதற்கு ஒரு மிக முக்கியமான காரணமுண்டு.

பொதுவாக பஞ்சாபின் அத்துணை சமூக அரசியல் பண்பாட்டு குமுகாய நகர்வுகளும் 'சீக்கிய மதம் சார்ந்த  ஸ்பிரிட்' என்கிற சீக்கிய தேசிய பிரக்ஞயோடு தான நிகழ்கிறது. 

இங்கே வெறும் 'பிரக்ஞய்' என்பது சரியான பொருத்தப்பாடு கொண்டிருக்கவில்லை. 

ஸ்பிரிட் அல்லது அதற்கு மேலான ஒரு வார்த்தை தான் அதை சரியாக விளக்க இயலும். ஏனெனில் இது பிரக்ஞய் தாண்டிய ஒரு புனிதம் கலந்த உணர்வு.

அந்த உணர்வு தான் முன்னொரு காலத்தில் ஆதிமனிதனிடம் 'கடவுளைப் படைத்தது' என்று மானுட இனவியல் பரிணாமக் கோட்பாட்டில் வாசிப்போம்.

இந்திய அரசாங்கத்தின் தெற்குப் பகுதியில் அது பொதுவாக வீழ்த்தப்பட்டிருக்கிறது அதற்குப் பல காரணிகள்  அது  மிகக் குறிப்பாக தமிழ் நாட்டில் வீழ்ந்ததற்கு திராவிடம் என்கிற போலியான இனமும், ஆரிய-திராவிட இழையில் நெய்யப்பட்டிற்கும் செஞ்சட்டைக்  கயவர்களாலும் அது நிகழ்ந்திருக்கிறது.

உழவர் அமைப்புக்களை திராவிட பாணி சிந்தனையும், ஊழல் வடியும் சிகப்புச் சொக்காயும் துண்டும்  'தமிழர் எனும்  ஸ்பிரிட்டை' கிட்டத்தட்ட அழித்தே விட்டன என்பது தான்  



70 லிருந்து 80 வரை உள்ள தமிழகத்து  உழவர் அமைப்புக்களை இனவாத ஊழல் குருதியில் சிவந்த சிவப்புப் துண்டுகள் தான் ஆக்கிரமித்து இருக்கின்றன அதில் அய்யாத்துரை மற்றும் பாண்டியன்களும் தான், அதற்கு ஒரு நாராயணசாமி நாயுடு போலவோ, பின்நாளில் வந்து மறைந்த சடகோபன் அய்யா போல யாரும் வரவில்லை 

சீக்கியர்களைப் போல நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும்போது நாம் தமிழ் நாடு  ஸ்பிரிட்டைத் தேடுவதில்லை; நாம் ஈவெராவியம் , செங்காவியம் போன்ற ஒரு மலட்டிசங்களிடம் தேடுகிறோம். 


புரட்சி என்பதே அரசியலில் உதிர்ந்த உரோமமாகி விடுகிறது. அதனால் தான் முன்னேறும் உழவர்கள் காக்கிகளையும், இராணுவ சீருடைகளையும் கண்டதும் இயல்பாக 'கால்சா' முழக்கங்களை விண்ணதிர முழங்குகிறார்கள்.

அந்த உணர்வு களங்கப்பட வாய்ப்பேயில்லை, அது தாயோடு இருக்கும் உறவை, பிணைப்பை போன்றது , இந்த உணர்வு தான் தேசியங்களை வாழவைக்கிறது.

வேளாண்மை என்பது  வெறும் தொழிலல்ல. அது பழங்குடி சமூகங்களின் அடிப்படை அடையாளத்தோடு நேரடித் தொடர்புள்ளது. 

வரலாற்றில்  நாடோடிகளாக அழிந்தொழிந்த காலத்தில் அவன் வெற்றிகரமான மானுட இனமாக பரிணமிக்க அஸ்திவாரமிட்ட சாமி அது தான்.

அது அச்சுறுத்தப்படும்போது தலைநகரங்கள் அதிருமென்பதே எதார்த்தம். ஆனால் அந்தப் புனித உணர்வை தமிழர் மண்ணிலிருந்து அழித்தொழித்தே கம்யூனிஸம் பெயரிலும் பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெயரிலும் சிலர் அழித்தே விட்டார்கள். மீட்டெடுக்க வேண்டும், தமிழின் பெயரால் அது மீள வேண்டும், என்பதே எதார்த்த நிலை அது மீளும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கும் உண்டு 

மக்களாட்சியின் அத்துணை எந்திரங்களும் ஆரிய இனவாத எந்திரத்தின் முற்ச்சக்கரங்கள் ஆகியிருக்கும் இந்த வேளையில்...

 தெற்கே இருந்து தலைநகர் நோக்கி ஒரு படையணி கிளம்ப வில்லை தானே? அறிவுரை கூறுவதற்குக் கூட ஒரு அருகதை வேணும் விவசாயிகளுக்கு புத்திமதி சொல்ல சிலர் வந்துட்டீங்க. ந....பிழைப்பு நடத்துகிற நாதாறி யெல்லாம் நாட்டுக்கு யோசனை  கூறுவதோ?

சோறு போடும் கரங்கள் தானே இந்தத் தேசத்தை அதிகாரம் செய்யனும்...உன்னை போன்ற சோம்பேறிகள் எல்லாம் இங்கே அதிகாரம் செய்வது தேசத்தின் போறாத காலம் தான்.என ஒரு துறவு பூண்ட நபருக்கு கேள்விகளும் எழாமல் இல்லை,  பட்டங்களைப் பறக்கவிட்டு காவல்துறையின்  "ட்ரோன்"களை காலி செய்த வீரியமிக்க விவசாயிகளைப் பார்க்கிறேன்..                      தலைநகரில் அது குறித்து திரைப்படத்தில் வந்த பாடல் தான் நம் நினைவுக்கு வருகிறது "வல்லவனுக்கு வல்லவன் வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை

இல்லாமல் மாறும் ஒரு தேதி - அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ இந்நாட்டில் மலரும் சமநீதி! 

நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம். இருந்திடும் என்னும் கதை மாறும்!  "இதுவே இங்கு பொதுநீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...