முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வள்ளலார் சத்திய ஞான சபை வளாகத்தில் பன்னாட்டு ஆராய்ச்சி மையம் அமைக்க பலரது எதிர்ப்பு பாமக போராட்டம்

நாம் கடலூர், பாண்டிச்சேரி எனப் புறப்படும் போது நம் நினைவில் வருவது


அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை மருதூர் அய்யா வடலூர்.இராமலிங்க அடிகள்  வள்ளலார் தான்,  கடந்த வாரம் கூட நண்பர்களுடன் தரிசித்த அனுபவம் 

பறந்து விரிந்து ஆனால் அமைதியாகத் திகழும், வள்ளலார் சத்திய ஞான சபை வளாகத்தில் பன்னாட்டு ஆராய்ச்சி மையம் அமைப்பதில் நமக்கு உடன்பாடில்லை..




கூடாரத்தில் ஒட்டகத்தை நுழைய விட்ட கதையாகவே மாறிவிடும்.

சத்திய ஞான சபையின் நீண்ட கால முகம் கண்டிப்பாக சிதைக்கப்படும்.  அதன் செயலாளர் அண்ணன் திரு டாக்டர் செல்வராஜ் அவர்கள் கருத்தும் இதுவாகவே இருக்குமென நம்புகிறேன், பாமக நடத்திய போராட்டம் வரவேற்புக்கு உரியதே ஆகும்.  சத்திய ஞானசபைக்கு எதிரில் நிலக்கரிச் சுரங்கமிருந்து மூடப்பட்ட நிலம், கடலூர் சாலை. கும்பகோணம் சாலை, சேத்தியாத் தோப்பு சாலை, விருத்தாசலம் சாலை ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் சர்வதேச மையத்தை அமைக்கலாம் என்றும், அதுவரை அடிக்கல் நாட்டுவதை ஒத்தி வைக்க வேண்டுமெனவும் கூறி சத்திய ஞானசபை பெருவெளியில் மக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.


பெருவெளியைத் தவிர்த்து, சத்திய ஞானசபையிலிருந்து 3 கி.மீ சுற்றளவில் வள்ளலார் பிறந்த மருதூர், அவர் தங்கியிருந்து நிர்வாகம் செய்த கருங்குழி, அவர் சித்தியடைந்த மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கலாமென்றும் அப்பகுதி மக்கள் மாற்று யோசனையைக் கூறியுள்ளனர். அங்குள்ள ஒளிக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி ஏழு திரைகளை விலக்கிக் காட்டப்படும் போது, அதை பக்தர்கள் எந்தத் தடையுமின்றிப் பார்க்க வேண்டும் என்பது தான் 70 ஏக்கரில் பெருவெளி அமைக்கப்பட்டதன் நோக்கம். 


ஆனால், வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது, முதலமைச்சர் கானொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்,      இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும், அப்பகுதி மக்களும் ஒளிக்கோவிலின் தீப ஒளியை பக்தர்கள் வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கத் துடிப்பது வள்ளலாரின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் எதிரானது என்பதால் அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


அப்போதய தென்னார்காடு மாவட்டம் தற்போது  கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த பார்வதிபுரத்தில் 1887 ஆம் ஆண்டில் சத்திய ஞான சபையை அமைத்தார் வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார். அதற்காக பார்வதிபுரம் மக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலங்களை கொடையாகப் பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட நிலத்தில் தென்கோடியில் சத்திய ஞானசபை, தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்த வள்ளலார், மீதமுள்ள இடத்தை அவரைப் பின்பற்றும் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாகவே பயன்படுத்தினார்.

, இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்; அதற்கு வசதியாக பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர் கூறியதைப் போலவே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர். இப்படி இருக்கையில் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பது சரியல்ல" என பாட்டாளி மக்கள் கட்சியினரும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வடலூரில் ரூபாய்.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்காக, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில்  அடிக்கல் நாட்டப்பட்டது.  வள்ளலார் மையம் அடிக்கல் நாட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடலூர் நான்கு முனை சந்திப்பில் திரண்ட பாமகவினர், தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள் தர்மலிங்கம், தாமரைக்கண்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஜெகன், சன் முத்துகிருஷ்ணன் கார்த்திகேயன், செல்வமகேஷ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல, மாலையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் திருமுருகன்,  மாவட்டத் துணைத் தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, "வள்ளலாரின் சன்மார்க்கத்தில் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். வள்ளலார் வழி அன்பர்கள் தைப்பூசத்துக்குத் திரளும் இப்பெருவெளியை, இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தினால், அவர்கள் வந்து செல்லும் போது கடும் பாதிப்பு ஏற்படும். அதனாலேயே எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்