முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வள்ளலார் சத்திய ஞான சபை வளாகத்தில் பன்னாட்டு ஆராய்ச்சி மையம் அமைக்க பலரது எதிர்ப்பு பாமக போராட்டம்

நாம் கடலூர், பாண்டிச்சேரி எனப் புறப்படும் போது நம் நினைவில் வருவது


அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை மருதூர் அய்யா வடலூர்.இராமலிங்க அடிகள்  வள்ளலார் தான்,  கடந்த வாரம் கூட நண்பர்களுடன் தரிசித்த அனுபவம் 

பறந்து விரிந்து ஆனால் அமைதியாகத் திகழும், வள்ளலார் சத்திய ஞான சபை வளாகத்தில் பன்னாட்டு ஆராய்ச்சி மையம் அமைப்பதில் நமக்கு உடன்பாடில்லை..




கூடாரத்தில் ஒட்டகத்தை நுழைய விட்ட கதையாகவே மாறிவிடும்.

சத்திய ஞான சபையின் நீண்ட கால முகம் கண்டிப்பாக சிதைக்கப்படும்.  அதன் செயலாளர் அண்ணன் திரு டாக்டர் செல்வராஜ் அவர்கள் கருத்தும் இதுவாகவே இருக்குமென நம்புகிறேன், பாமக நடத்திய போராட்டம் வரவேற்புக்கு உரியதே ஆகும்.  சத்திய ஞானசபைக்கு எதிரில் நிலக்கரிச் சுரங்கமிருந்து மூடப்பட்ட நிலம், கடலூர் சாலை. கும்பகோணம் சாலை, சேத்தியாத் தோப்பு சாலை, விருத்தாசலம் சாலை ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் சர்வதேச மையத்தை அமைக்கலாம் என்றும், அதுவரை அடிக்கல் நாட்டுவதை ஒத்தி வைக்க வேண்டுமெனவும் கூறி சத்திய ஞானசபை பெருவெளியில் மக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது காவல்துறையினரும் குவிக்கப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.


பெருவெளியைத் தவிர்த்து, சத்திய ஞானசபையிலிருந்து 3 கி.மீ சுற்றளவில் வள்ளலார் பிறந்த மருதூர், அவர் தங்கியிருந்து நிர்வாகம் செய்த கருங்குழி, அவர் சித்தியடைந்த மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கலாமென்றும் அப்பகுதி மக்கள் மாற்று யோசனையைக் கூறியுள்ளனர். அங்குள்ள ஒளிக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி ஏழு திரைகளை விலக்கிக் காட்டப்படும் போது, அதை பக்தர்கள் எந்தத் தடையுமின்றிப் பார்க்க வேண்டும் என்பது தான் 70 ஏக்கரில் பெருவெளி அமைக்கப்பட்டதன் நோக்கம். 


ஆனால், வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்க முடிவு செய்த தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது, முதலமைச்சர் கானொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்,      இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும், அப்பகுதி மக்களும் ஒளிக்கோவிலின் தீப ஒளியை பக்தர்கள் வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைக்கத் துடிப்பது வள்ளலாரின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் எதிரானது என்பதால் அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


அப்போதய தென்னார்காடு மாவட்டம் தற்போது  கடலூர் மாவட்டம் வடலூரை அடுத்த பார்வதிபுரத்தில் 1887 ஆம் ஆண்டில் சத்திய ஞான சபையை அமைத்தார் வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார். அதற்காக பார்வதிபுரம் மக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலங்களை கொடையாகப் பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட நிலத்தில் தென்கோடியில் சத்திய ஞானசபை, தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்த வள்ளலார், மீதமுள்ள இடத்தை அவரைப் பின்பற்றும் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாகவே பயன்படுத்தினார்.

, இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்; அதற்கு வசதியாக பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர் கூறியதைப் போலவே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர். இப்படி இருக்கையில் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பது சரியல்ல" என பாட்டாளி மக்கள் கட்சியினரும், அப்பகுதி மக்களும் கூறுகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வடலூரில் ரூபாய்.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் கட்டுவதற்காக, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில்  அடிக்கல் நாட்டப்பட்டது.  வள்ளலார் மையம் அடிக்கல் நாட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடலூர் நான்கு முனை சந்திப்பில் திரண்ட பாமகவினர், தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்கள் தர்மலிங்கம், தாமரைக்கண்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஜெகன், சன் முத்துகிருஷ்ணன் கார்த்திகேயன், செல்வமகேஷ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல, மாலையில் பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் திருமுருகன்,  மாவட்டத் துணைத் தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, "வள்ளலாரின் சன்மார்க்கத்தில் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். வள்ளலார் வழி அன்பர்கள் தைப்பூசத்துக்குத் திரளும் இப்பெருவெளியை, இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தினால், அவர்கள் வந்து செல்லும் போது கடும் பாதிப்பு ஏற்படும். அதனாலேயே எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...