தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 9 நபர்கள் மீது வழக்குப் பதிவு நால்வர் கைது
ஆபாசக் காணொளி வெளியிடுவோம் என தருமபுரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக
பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 9 நபர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து பள்ளித் தாளாளர் உட்பட நான்கு நபர்களைக் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீன மடத்தை தருமை ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நிர்வாகம் செய்கிற நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பாஜக தலைவரான அகோரம் ஆதீனத்தை பணம் கேட்டு மிரட்டியதாக ஆதீனத்தின் சகோதரரும், உதவியாளருமான விருதகிரி அளித்த புகாரின் பேரில் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதில், தருமபுரம் ஆதீனம் தலைமை பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி சுவாமிகளின் சகோதரரும் உதவியாளரும் ஆவேன் கடந்த சில நாட்களாக
ஆடுதுறையைச் சேர்ந்த வினோத் என்பவர் எங்கள் மடத்தில் சேவை செய்யும் செந்தில் என்பவரும் கூட்டாகத் தொடர்பு கொண்டும் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு தன்னிடமும், தலைமை மடாதிபதி சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் ஆபாச வீடியோ தன்னிடம் உள்ளதாகவும் தான் கேட்கும் பணத்தைக் கொடுக்காவிட்டால் சமூக வனதைளங்களிலும் டிவி சேனல்களிலும் மேற்படி ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆதீனத்தையும் மடாபதிடையும் அவமானபடுத்தி விடுவதாகவும் தனது சார்பில் திருவெங்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த ரவுடி விக்னேஷ் உங்களிடம் பேசுவாரெனவும் பணம் கொடுக்காமல் காவல்துறையினரிடம் சென்றால் மேற்படி விக்னேஷ் மூலம் ரவுகளைக் கொண்டு மடத்தை சார்ந்தவர்களைக் கொலை செய்யவும் தயங்கமாட்போம் என ஆபாச வார்த்தைகளால் மிரட்டி பலமுறை என் கழுத்தை நெறித்துகஹ கொலை செய்ய முயற்சித்தனர்.
நான் உயிருக்குப் பயந்து மடத்திலுள்ளவர்களிடம் பேசி பணம் பெற்று நடுவதாக தெரிவித்தேன். பின்னார் அது தொடர்பாக கலைமகள் பள்ளி நிறுவனர் கொடியரசு, செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், திருக்கடையூர் விஜயக்குமார், மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் ஆகியோர்களின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ். ஆரியோர தன்னைத் தொடர்பு கொண்டு மடத்தினர் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதனை வெளியிடாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் கேட்டும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டுமென்றும் கூறினார்கள் மேலும் அவ்வாறு அவர்கள் கேட்டும் தொகையை கொடுத்து பிரச்னை இல்லாமல் விஷயத்தை முடிக்குமாறும் விணாக ரவுடிகளிடம் பிரச்சினை வைத்துக்கொள்ளாதீர்கள் என்றும் அவர்கள் சொல்வதைச் செய்ய கூடியவர்கள் எனவும் எங்களை அச்சுறுத்தும் வகையில் மடாதிபதியின் நேர்முக உதவிடாளர் செந்தில் அவர்களின் கூட்டோடு மனஉளைச்சல் ஏற்படுத்துகின்றார்கள். இவர்களின் இந்த அச்சுறுத்தலால் மடாதிபதியும் மடத்தில் உள்ளவர்களும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளோம் எனவே காவல்துறைத் தலைவர் அவர்கள் மடத்தினர் சம்பந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் கேட்டும் பணத்தை கொடுக்காத பட்சத்தில் அதை வெளியிட்டு மடத்திற்கும் மடத்தில் உள்ளவர்களுக்கும் கெட்டபெயர் உண்டு பண்ணவும், பணம் கொடுக்காத மடத்தில் உள்ளவர்களை கொலை செய்து விடுவதாகவும் ஆபாச வார்த்தைகளால் மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடத்தின் பணியாளர் செந்தில் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் பாஜக பிரமூகர் ஒருவர் உட்பட 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த படி வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது மயிலாடுதுறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(28), பிரபாகர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குடியரசு(40), ஸ்ரீநிவாஸ்(28), வினோத்(32), விக்னேஷ்(33) ஆகியோரை தனிப்படைபோலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனர்.இதனிடடையே தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி நேற்று எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள மற்றொரு மனுவில், ‘‘நான் ஏற்ெகனவே கொடுத்த புகார்மனுவில் குறிப்பிட்டுள்ள திருக்கடையூர் விஜயகுமார், இந்த விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். எங்களை மிரட்டிய நபர்களிடம் பேசி, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முயற்சிஎடுத்தார். அதுபலன் அளிக்கவில்லை. இதனால், அவரது யோசனைப்படி தங்களிடம் புகார் அளித்தேன். அவருக்கு இந்த வழக்கில் வேறு எந்த தொடர்பும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.தருமபுரம் ஆதீனகர்த்தர் நேற்றுமாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளுடன் சேர்ந்து சிலர் மிரட்டிய விவகாரத்தில், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து, எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காப்பாற்றியுள்ளனர்.தருமபுரத்தில் அமைந்துள்ள ஆதீன சைவ மடத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகிக்கிறார் மயிலாடுதுறை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நேற்றுக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள் மீது மிகத் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் தருமபுரம் ஆதீனம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.
அது குறித்து தருமபுரம் ஆதீனம் மடம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகத் துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும் எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தருமபுர மடத்தையும் எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைவ சித்தாந்தத்தைப் பரப்புவதற்காக 16 ஆம் நூற்றாண்டில் ஆதீனம் நிறுவப்பட்டது தர்மபுரம் ஆதீனத்தின் கீழ் உள்ள கோவில்கள் பல அதில்
வைத்தீஸ்வரன் கோவில்
திருப்பனந்தாள் அருணாஜடேஸ்வரர் கோவில்
அமிர்தகடேஸ்வரர்-அபிராமி கோவில், திருக்கடையூர்
வீரதீஸ்வரர் கோவில், திருப்பரியலூர்
உத்தவேதீஸ்வரர் கோவில், குத்தாலம்
திருநன்றியூர யாழ்மூரிநாதர் கோவில், திரு தர்மபுரம், காரைக்கால்
ஐயாறப்பர் கோவில், திருவையாறு
மணக்குடி கருங்குயில்நாதன்பேட்டை
உச்சிரவனேஸ்வரர் கோவில், திருவிளாநகர்
தர்பாரண்யேஸ்வரர் கோவில், திருநள்ளாறு
சுயம்புநாதசுவாமி கோவில், பேரளம்
கம்பஹேஸ்வரர் கோவில், திருபுவனம்
சிவலோகத்தியாகர் கோவில், ஆச்சாள்புரம்
வீரதீஸ்வரர் கோவில், திருக்குறுக்கி
மயிலாடுதுறை (ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில்)
வள்ளலார் கோவில், மயிலாடுதுறை
மயிலாடுதுறை (குமார கட்டளை)
முல்லைவனநாதர் கோவில் , திருமூலைவாயல்
மகாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர்
சட்டைநாதர் கோவில், சீர்காழி
உய்யகொண்டான் திருமலை கோவில்
தலஞாயர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருக்குவளை
தியாகராஜர் கோவில், திருவாரூர் - ராஜாங்க கட்டளை,
தர்மபுரம் (ஞானபுரீஸ்வரர் கோவில்) ஆகும்
கருத்துகள்