பெங்களூரு இராமேஸ்வரம் கஃபே ஹோட்டலில் வெடித்தது சிலிண்டரல்ல,
ஐஈடி வெடிகுண்டென முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தினார், பெங்களூரு புரூக்ஃபீல்ட் பகுதியிலுள்ள பிரபலமான ஹோட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 10 நபர்கள் படுகாயமடைந்தனர்.
வெடிகுண்டு வெடிப்பு IED யால் ஏற்பட்டதென காவல்துறை முதலமைச்சரிடம் விளக்கியது, IED வைத்திருந்த ஒரு பை ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்ததாக சித்தராமையாவிடம் காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.
இராமேஸ்வரம் கஃபே பிளாஸ்ட் நேற்று மதியம் 1:30 மணியளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.
எச்ஏஎல், ஒயிட்ஃபீல்ட் மற்றும் இந்திராநகர் காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறை அலுவலர்கள், தடயவியல் குழுவுடன் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பயங்கர வெடிச் சத்தம் கேட்டதும். சுற்றியிருந்தவர்கள் சென்று பார்த்த போது உணவகத்தின் முகப்புப் பக்கம் சேதமடைந்ததோடு உள்ளே தீ பற்றி எரிந்தது. உணவகத்திலிருந்தவர்கள் சிலர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு ஒயிட்ஃபீல்டு காவல் துறையினர் அங்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வரவழைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டநிலையில், உணவகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் எனச் சிலர் காயமடைந்துள்ளனர். 10 நபர்கள் வரை காயமடைந்திருக்கலாமென உள்ளூர் தகவல் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடித்ததற்கு என்ன, காரணம் என எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் சில ஊடகங்களில் சிலிண்டர் வெடித்துத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டாலு. உணவகத்தில் திடீரென ஏற்படும் வெடிப்பு அடங்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு தெற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “இப்போதுதான் நான் ராமேஸ்வரம் கஃபே உரிமையாளரிடம் தொலைபேசியில் பேசினேன். வாடிக்கையாளர் ஒருவர் விட்டுச் சென்ற கைப்பையில் இருந்து தான் ஏதோ வெடித்துள்ளது. சிலிண்டர் ஏதும் வெடிக்கவில்லை என்றார். இது ஏதோ குண்டு வெடிப்பு போல் தான் உள்ளது. பெங்களூரு மக்களுக்கு முதல்வர் சித்தராமையா தெளிவான பதிலைத் தர வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்தனர். அதேபோல் வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களும் அங்கே வந்து ஆய்வில் ஈடுபட்டனர்.குண்டுவெடிப்பில் தொடர்புடைய சந்தேகமான நபர், தீவிர வெடிகுண்டு சாதனத்தை எடுத்துக்கொண்டு ஒரு பையுடன் உணவகத்தை நோக்கி நடந்து செல்வதைக் காட்டும் புதிய சிசிடிவி காட்சிகளும் வெளிவந்துள்ளன.
நேற்று நடந்த இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு தப்பி ஓடிய குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீசார் 8 குழுக்களை அமைத்துள்ளனர்.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நேற்று ஒரு குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்து, 10 பேர் காயமடைந்தனர்.
ஐஇடி வெடிகுண்டையும் டைமரையும் பயன்படுத்தி அந்தக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளது,
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடந்து வரும் நிலையில், காவல் துறை தரப்பில் தகவல்களை தெரிவிக்கின்றன.
கருத்துகள்