முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படித்த பெண்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்: புதுச்சேரி முதலமைச்சர் வேண்டுகோள்

படித்த பெண்கள் தொழில்முனைவோர்களாக உருவாக வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்

பெண் கல்விக்கு புதுச்சேரி அரசு முக்கியத்துவம் அளித்து வருகின்றது. பெண்களுக்காகவே பள்ளிகள், கல்லூரிகளை தொடங்கி நடத்திக் கொண்டு வருகின்றோம். பெண்கள் உயர்கல்வி கற்க முன்வரவேண்டும். படித்த பெண்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாகி பலருக்கும் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். அதற்காக படித்த பெண்கள் தொழில் தொடங்குவதற்கு தேவைப்படும் கடனில் மானியம் வழங்கப்படுகின்றது என்று முதலமைச்சர் திரு ந. ரங்கசாமி மேலும் தெரிவித்தார்.


சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் புதுச்சேரி பாரதி வீதி திருவள்ளுவர் நகர் ஸ்ரீசாய்பாபா திருமண மண்டபத்தில் நடைபெறும் 6 நாள் மகளிர் சக்தி என்ற மையக்கருத்திலான ஒருங்கிணைந்த விழிப்புணர்வு முகாமைத் தொடங்கி வைத்துப் பேசியபோது முதலமைச்சர் ரங்கசாமி இவ்வாறு தெரிவித்தார்.


பெண்கள் சக்தி மிகவும் முக்கியமானது. இன்று பெண்கள் சாதனைப் பெண்களாக திகழ்கின்றார்கள். அண்மையில் நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டுக்காக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது  அரசியல் பங்கேற்பில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்கள் சிரமம் இல்லாமல் வாழ்வதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித்  தருகின்றது. குடிநீர் குழாய் இணைப்பு வழங்குதல், இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. புதுவை அரசு முன்னரே  பெண்களுக்கு பத்திரப்பதிவு கட்டணத்தில் 50 சதவீதத்தை தள்ளுபடி செய்துள்ளது.  இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக திகழ்கின்றனர். பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை என்று முதலமைச்சர் திரு ரங்கசாமி மேலும் தெரிவித்தார்.

 நிகழ்ச்சியில் முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு ஜே. பிரகாஷ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் திரு மா. அண்ணாதுரை தலைமை வகித்தார். மத்திய மக்கள் தொடர்பகத்தின் மண்டல இயக்குனர் திருமதி மா லீலா மீனாட்சி நோக்க உரையாற்றினார்.

 இந்த நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் இயக்குனர் செல்வி பி முத்துமீனா, அகில இந்திய வானொலி நிலைய துணை இயக்குனர் திருமதி மா.லட்சுமி, மாநில நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் தா.சதீஷ்குமார் ஆகியோர் உரையாற்றினார்.

 முன்னதாக புதுச்சேரி மத்திய மக்கள் தொடர்பக துணை இயக்குனர் முனைவர் தி. சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் கள விளம்பர உதவி அலுவலர் திரு சு. வீரமணி நன்றி கூறினார்.

நேற்று கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார். பெண்களுக்கான சட்டங்கள் குறித்த துண்டு பிரசுரத்தையும் அவர் வெளியிட்டார். மகளிர் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு நெகிழிப் பைகள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் துணிப் பைகளை வழங்கினார்.

இந்த முகாமில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, சமூக நலத்துறை, புதுச்சேரி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழகம், சட்ட சேவைகள் ஆணையம், நோயீனி கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம், நலவழித்துறை, இம்காப்ஸ் மருந்தகம் ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகின்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...