முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமண முன்விழாவில் காதலியுடன் பில்கேட்ஸ்

 பில் கேட்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்


ஆகியோரின் திருமணத்துக்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டங்களுக்காக அவர் குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்தார்.            முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முன் நடந்த  பிரமாண்டமான  விழாவில் மைக்ரோசாப்ட்  இணை நிறுவனர் பில் கேட்ஸ்  காதலி பவுலா ஹர்டுடன் கலந்து கொண்டார்.  ஜாம்நகரில் நடைபெரும்  மூன்று நாள் விழாவில், முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோருடன் பில் கேட்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்,  முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முன் ஜாம்நகரிலுள்ள அவரது 200 ஏக்கரி பரப்பளவில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ்-ல் மூன்று நாள் நடத்திய விழாவில் உலகப் பிரபலமான தொழிலதிபர்கள், திரைப்படங்கள் சார்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.         

மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை திருமணத்திற்கு முன் விழாக்கள் நடைபெற்றன. மார்ச் மாதம் 1 ஆம் தேதி இரவு  விழாவின் பெயர் An Evening in Everland. இதில் பாடகி ரியானா, ட்ரோன் ஷோ, கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

 68 வயதான பில் கேட்ஸ் தனது காதலியான பவுலா ஹர்டுடனான உறவை பகிரங்கமாக அறிவிக்கா விட்டாலும், இருவரின் இந்தியப் பயணம், அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதென அனைத்தையும் பார்க்கும் போது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்களா என எதிர்பார்ப்பை ஊடகங்கள் வழித் தகவல் அதிகரித்துள்ளது.பில் கேட்ஸ் - பவுலா ஹர்ட் ஜோடி இரண்டு வருடங்களுக்கும் மேலாக டேட்டிங் உள்ளதாகக் கூறப்படுகிறது. அம்பானி வீட்டு விருந்துக்கு, எலிகன்ட் காக்டெய்ல் ஆடையை பவுலா ஹர்ட் அணிந்து வந்தார்.


பவுலா ஹர்ட் முன்னாள் ஆரக்கிள் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்டின் மனைவியாவார், கணவரின் இறப்பிற்குப் பின் பில் கேட்ஸுடன் காதல்வயப்பட்டார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் போது இருவரும் ஒன்றாகவே காணப்பட்டனர்.


ஆனால் இப்போது தான் முதல் முறையாக பில் கேட்ஸுடனான அவரது உறவு குறித்த பேச்சுகள் வெளியானது. இருவரும் தீவிர டென்னிஸ் ரசிகர்கள், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் WTA அரையிறுதிப் போட்டியில் ஒன்றாக அமர்ந்திருந்த படமும் டிரெண்டானது. ஜூலை மாதம் 2023 ஆம் ஆண்டில், பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் வைர மோதிரத்தை அணிந்திருப்பதைக் கண்ட பிறகு, அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வதந்திகள் பரவிய நிலையில்.  பில் கேட்ஸ் செய்தித் தொடர்பாளர் அதை நிராகரித்தார்.


பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா பிரிஞ்ச் கேட்ஸிடமிருந்து விவாகரத்து ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டில் இறுதி செய்யப்பட்ட பின் பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் அவ்வப்போது நெருங்கிய  புகைப்படம் டிரெண்டானது.  தனது பயணத்தின் போது, இந்தியாவின் ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவை சந்தித்து, இந்தியாவின் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பயன்பாடு, சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து விவாதித்தார்.



வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டினார். இது மற்ற வளரும் நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறினார்.



பில் கேட்ஸ் மற்றும் பிரதமர் மோடி சமூகத்தின் நலனுக்காக ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...