முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமலான நடத்தை விதிமுறைகள்

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தான் பொதுமக்கள் எவ்வளவு பணத்தை ஆவணங்களின்றி கையில் எடுத்த செல்லலாம். அல்லது ஒருவேளை அதிகமான பணத்தை எடுத்து சென்று பறக்கும் படையிடம் எனும் சோதனை அலுவலர்களிடம் சிக்கினால் அடுத்ததாக என்ன நடக்கும்? என்பது பற்றி தகவல்கள் வெளியாகின.




இந்தியாவில் கடந்த 2019ல் நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது போல வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் எப்போதும் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்பதை நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்ததன்படி நாடாளுமன்ற. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி, ஏப்ரல் மாதம்  26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதிகள் என ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள் வரும் ஜுன் மாதம் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் தான் எந்தக் கட்சி எத்தனை  தொகுதிகளில் வெல்கிறது என்பது தெரியயம்.





இந்த நிலையில் நேற்றைய தினம் மதியம் 3 மணிக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார். பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் பல நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் முடிவுகள்  வெளியாகும் வரை அமலிலிருக்கும்.




முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவத்காக  இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்தியாவில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டிலுள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபடுகின்றனர்.அப்போது ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் தான் மக்கள் பலருக்கும் சந்தேகம் எழுகிறது. அதாவது நடத்தை விதிகள் அமலிலுள்ளதால் எவ்வளவு பணம் கையில் எடுத்து செல்லலாம் என பலரும் குழம்பியுள்ளனர். இனி குழப்பம் வேண்டாம். அதாவது நடத்தை விதி அமலில் இருந்தாலும் கூட பொதுமக்கள் ரூபாய்.50 ஆயிரத்துக்குள்ளான ரொக்கப்பணத்தை தாராளமாக எடுத்துச் செல்லாம். பறக்கும்படையினர் மறித்தால் பணத்துக்கான உரிய காரணத்தைக் கூறிவிட்டு கொண்டு செல்லலாம்.

மாறாக ரூபாய் .50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை கையிலோ, மற்ற இருசக்கர நான்கு சக்கர வாகனங்களிலோ எடுத்தச் செல்லும்போது பறக்கும்படையினருடன் உள்ள காவல்துறையினர்  தடுத்து நிறுத்தினால் அதற்கான ஆவணங்களை கட்டாயம் வழங்க வேண்டும்.




இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் ரூபாய்.10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் இதில் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் பணங்கள் பிடிபடுகிறதோ இல்லையோ சிறு வியாபாரிகள் கொண்டு செல்லும் பணங்கள் தான் அதிகம் பிடிபடுகிறது  16 மார்ச் 2024, ஆம் தேதி மாலை இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அட்டவணை வெளியிட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகிறது.‌




தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Election Code of Conduct) அமலுக்கு வந்தவுடன் நாட்டின் பிரதமர் உட்பட அனைத்து மத்திய அமைச்சர்கள்,மாநில முதல்வர்கள், மாநில அரசின் அமைச்சர்கள் அனைவரும்  தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசு வாகனங்கள் உள்ளிட்ட எந்த வித அரசு இயந்திரங்களையும் பயன்படுத்தக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. 



ரூபாய் 8458 கோடி செலவில் பிரதமருக்காக பிரத்யேகமாக வாங்கிய அரசு விமானங்களும் வாகனங்களும் இதில் அடங்குமா? தேர்தல் ஆணையம் பிரதமருக்கு மட்டும் இதில் சலுகை வழங்குவது நியாயமா? எனவும் எதிர் கட்சிகள் வினா எழுப்புகிறது பிரதமரும் ஒரு தொகுதி வேட்பாளர் தானே? 

தேர்தலின் போது பிரதமருக்கு மட்டும் தனிச்சலுகை வழங்குவது அவர் சார்ந்த கட்சிக்கு வழங்கும் சலுகையாகாதா? அவர் சார்ந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு சலுகை வழங்கியது போல் ஆகாதா? அவர் சார்ந்த கட்சியின் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தரப்படும் சலுகையாகாதா?

தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்பட வேண்டும். என்பது அவர்கள் கோரிக்கைமக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வது தொடர்பான புகார்களை பொதுமக்கள் வருமான வரித்துறையிடம்  தெரிவிக்கலாம்.

1800 425 6669 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், 94453 94453 என்ற Whatsapp எண் மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...