முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரூர் தொகுதி பாஜக காங்கிரஸ் இடையில் கடும் பலப்பரிட்சை வெற்றி மதில் மேல் பூனை கதை

கரூர் மாவட்டத்தின் மூன்று தொகுதிகள்,


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை உள்ளிட்ட சட்ட மன்றப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது  கரூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியாகும், நான்கு மாவட்டங்களில் மிகப் பெரிய தொகுதியாகும். காவிரியாற்றின் கரையோரப் பகுதிகளைக் கொண்டதால் முதன்மையான தொழில் விவசாயம். அடுத்தது நெசவுத் தொழில்



கரூர் பகுதியில் உள்ள ஜவுளி ஆலைகளும் முக்கிய தொழிலாகும். மக்களவைத் துணைச் சபாநாயகராக இருந்து தம்பிதுரை அதிமுக சார்பில் பலமுறை போட்டியிட்ட தொகுதி. திமுகவிலும், சின்னசாமி, கே.சி பழனிசாமி எனப் பிரபல வேட்பாளர்களே ஒவ்வொரு முறையும் களம் காண்டு வந்தனர். மாநில திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களையே இந்த பகுதியில் இதுவரை மக்கள் தேர்வு செய்து வந்துள்ளனர். அதிமுக, திமுக என இருகட்சிகளுக்குமே செல்வாக்கு மிக்க தொகுதியாகப் பார்க்கப் பட்டாலும்,  இரு கட்சியிலும் ஆளுமை மிக்க தலைவர்கள் காலமானதால் இப்போது பாரதிய ஜனதா கட்சி இப்போது முதல் முறையாக இங்கு களம் காணும் நிலையில் அக்கட்சியின் சார்பில் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில் நாதன் வேட்பாளராகக் களம் காணும் நிலையில்



இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் மீண்டும் ஜோதிமணி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் காண்கிறார்,  அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியில் உள்ளார் இருந்தாலும் பாஜக காங்கிரஸ் இடையில் தான் போட்டி நிலவுகிறது,                       



  கரூர் நாடாளுமன்றத்தில் கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி, வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை, ஆகிய தொகுதிகளில் அரசியல் தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் வேட்பாளர் சரியில்லை என்பதே பேச்சாகிறது, ஏனெனில் கரூர் மாவட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த மாவட்டம். அதே போல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதி .திமுக தான் இந்த முறை போட்டியிடும் எனக்கூறப்பட்ட நிலையில் கரூர் தொகுதி மீண்டும் காங்கிரஸ் சிட்டிங் சீட் எனற அடிப்படையில் அக் கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது.   அக்காலத்தில் சேரநாட்டுத் தலைநகர் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜோதிமணி மறுபடியும் போட்டியிடுகிறார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஜோதிமணி வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டவருடன் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கரூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க தேர்தல் பார்வையாளர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டி உள்ளிட்ட தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி,




''தமிழகம் முழுவதும் அ.தி.மு.க, என்பது பா.ஜ.க-வின் பி டீமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற நான், தொகுதி மக்களுக்காக ரூபாய்.500 கோடியில் திட்டப் பணிகளைச் செய்துள்ளேன். மக்களவையில் கடந்த 70 ஆண்டுகளாக ஒலிக்காத குரலாக தமிழக மக்கள் பிரச்னைகள் குறித்து குரல் எழுப்பியுள்ளேன். தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை மக்களுக்காகச் செய்துள்ளார். குறிப்பாக, கல்விக்கும், மருத்துவத்திற்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் மகத்தான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இதனால், தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல எழுச்சியும் வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.  கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அமைச்சர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஐ.பெரியசாமி ஆகியோர் கரூர் மக்களவைத் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளனர். இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு கேட்போம். ஆனால், 10 ஆண்டுகள் அ.தி.மு.க தம்பிதுரை எம்.பி-யாக இருந்தும் தொகுதி எம்.பி-க்கு ஓர் அலுவலகம் கிடையாது. அவரை நேரில் சந்திக்க முடியாது. இவர்கள் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் தமிழக மக்களையும், கரூர் தொகுதி மக்களையும் சீரழிவு பாதைக்குக் கொண்டு சென்று விட்டனர். நடைபெறவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என்றார்.  ஆனால்                                  கரூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் கரூர் வேட்பாளர்களாக  செந்தில்நாதன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தங்கவேல்









அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 

ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 

கருப்பையா நாம் தமிழர் கட்சி.   சார்பில் போட்டியிடும் நிலையில் நாம் கரூரில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை கவணிக்க வேண்டும்                                                2019 ஆம் ஆண்டு ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரஸ். 695697 வாக்குகள் வாங்கி 420546 வாக்குகள் வித்தியாசத்தில் 63.சதவீதம் பெற்று வெற்றி தம்பிதுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 275151 வாக்குகள் பெற்று 25.சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது 2014 ஆம் ஆண்டு தம்பிதுரை, எம்.



அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 540722 வாக்குகள் பெற்று 195247 வாக்குகள் வித்தியாசத்தில் 52.சதவீதம் வாக்குகளில் வென்றவர் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  சின்னசாமி, எம்.  திமுக 345475 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்த நிலையில் 



33.சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.பொது மக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்த கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன்!  நாடாளுமன்ற தேர்தலில் வெற்ற பெற தன்னை ஆசிர்வாதம் செய்ய பொதுமக்களின் காலில் விழுந்து  பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குச் சேகரித்தார். நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர் தொழில்பேட்டை, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் தன்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கூறி வாக்காளர்களின் காலில் விழுந்தார். தொடர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர், "5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் நினைக்கிறார்கள்.தொகுதியில் உள்ள மக்கள் கஷ்டங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அவர்களது குடும்பம் நன்றாக இருந்தால் போதுமென நினைக்கிறார்கள்.


இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில், வளர்ச்சிக்காகப் பாடுபடக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினரை இம்முறை பொதுமக்களாகிய நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒருமுறை கூட குறைகளைக் கேட்டு அறியாத நாடாளுமன்ற உறுப்பினர் எதற்கென்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்கிறோம். 100 சதவீதம் பாஜக மீது நம்பிக்கை வையுங்கள். மீண்டும் நரேந்திர மோடியைப் பிரதமர் பதவியில் அமர வைப்பதற்குத் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொள்ள எனது தொலைப்பேசி எண்ணை உங்களுக்குத் தருகிறேன்.


எத்தனை முறை அழைத்தாலும் மக்கள் பிரச்சனைக்காகச் சேவை செய்ய வருவேன்" எனக் கூறி தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார், அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் பாஜக வேட்பாளர் வாக்குகள் சேகரித்த போது திரளாகக் கூடி நின்று ஆரத்தி எடுத்து வரவேற்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணியில் முழு வீச்சில் உள்ளதை அறியலாம்,   அன்னவாசல் தெற்கு ஒன்றியத் தலைவர் S.V. ரவிச்சந்திரன் தலைமையில் இலுப்பூர் நகரப் பொறுப்பாளர் கோட்டை, சசிக்குமார், சக்தி கேந்திர பொறுப்பாளர் யுவராஜ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சபரிநாதன். மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு ஒன்றியத் தலைவர் முத்துக்குமார் அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் 300 கற்கும் மேற்பட்ட நபர்களும் 600 க்கும் மேற்பட்டடோர்  மேலப்பட்டியிலும் கலந்து கொண்டனர் அன்னவாசல் தெற்கு ஒன்றியம் பெருமாநாடு பகுதியில் 400 கற்கும் மேற்பட்ட நபர்கள் அன்னவாசல் வடக்கு ஒன்றியத் தலைவர் பொன் முருகையா தலைமையில் விராலிமலை சட்ட மன்றத் தொகுதியின் வேட்பாளராகப் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற எம்.பழனியப்பனின் சொந்த ஊரான தென்னலூரில் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் செந்தில்நாதனை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.பாஜக பலம் என்பது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்நிறுத்தி பிரச்சாரம் நடக்கும் போது எதிர் தரப்பினர் பிரதமர் யார் என்பதே தெரியாமல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இது இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் என்பதை இந்தியா கூட்டணி அமைத்த போதே பிரதமர் வேட்பாளராக ஒரு தலைவரைத் தேர்வு செய்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை ஆகவே இது பாஜகவின் பலம்,


மேலும் இராகுல்காந்தி பிரியாணி தயார் செய்ய ஜோதிமணி அழைப்பில் வந்து வைரலான செய்திகளைப் பார்க்கும் மக்கள் இவருக்கு நாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதால் தான் மல்லிகார்ஜுன கார்கே தலைவர் ஆகும் நிலை வந்தது



என காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சொற்பமான தொண்டர்கள் வருத்தம் பகிரங்கமாகவே பேசப்படுகிறது, தமிழ் நாட்டில், தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் மூன்றாகப் பிரிந்திருப்பது, தி.மு.க கூட்டணிக்கு பலம். தி.மு.க தலைமையிலான கூட்டணி வலுவாகவும் அமைப்பு ரீதியான பலமும் உள்ளது. தி.மு.க-வும் ஜாதி ரீதியாகத்தான் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. தி.மு.க-விடம் பண பலமும், அதிகார பலமும் உள்ளன. ஆகவே, தேர்தல் நெருங்கும்  நிலையிலும், தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலில் தான் களம் நகர்ந்து வந்தாலும் போட்டி பா ஜ க வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் தான் போட்டி வெற்றி என்பது மதில் மேல் பூனை கதை தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்