ஊழல் செய்து சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளருக்கும் அவர் மனைவிக்கும் தண்டனை மற்றும் சொத்துகள் பறிமுதல்
ஊழல் செய்து சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன் உனக்கும் அவரது மனைவிக்கும் ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு. ரூபாய் 100 கோடி சொத்தை பறிமுதல் செய்யவும் உத்தரவு.
திருச்சிராப்பள்ளியில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளருக்கும், அவர் மனைவிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், பில்லாதுறை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன், வயது 79. இவர், 1989 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை உள்ள பணி செய்த காலத்தில், துறையூர், உறையூர், முசிறி, அடுவம்பட்டடி, வில்பட்டி, கொடைக்கானல் பகுதிகளில் சார்பதிவாளராகப்பணி செய்துள்ள காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமாக அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி, வயது 65, என்பவர் பெயரிலும் 32 லட்சத்து, 25 ஆயிரத்து 532 ரூபாய் சொத்துக்கள் வாங்கியுள்ளார்.ஜானகிராமன் பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் வாங்கிய சொத்தின் தற்போதைய விற்பனை விலை மதிப்பு மட்டும் ரூபாய்.100 கோடிக்கும் மேலிருக்கும் எனக் கூறப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்.,17 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளர் அம்பிகாபதி, அவர் மீது வழக்கு பதிவு செய்து
வழக்கின் புலன் விசாரணை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணையில் இருந்து வந்த வழக்கின் தொடர் விசாரணையை தற்போது பணி துணை கண்காணிப்பாளர்மணிகண்டன், ஆய்வாளர் சேவியர்ராணி, துணை ஆய்வாளர் ., பாஸ்கர் ஆகியோர் சாட்சியமளித்தார்கள். சிறப்பு அரசு வழக்கறிஞர் சுரேஷ்குமார் அரசு தரப்பில் ஆஜரான நிலையில்.
திருச்சிராப்பள்ளி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்தார். விசாரணையின் முடிவில், முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி ஆகிய இருவருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும், வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட ரூபாய்.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்து, அரசுக்கு ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார்.
கருத்துகள்