பேராசிரியராகப் பணி செய்த நிர்மலா தேவி வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகார்களை ஏன் விசாகா கமிட்டிக்கு அனுப்பவில்லையென
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை வினா எழுப்பியது. மேலும் மாணவிகளின் புகார்கள் மீது ஆறாண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியது. விபரம் வருமாறு:- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் பேராசிரியையாக பணியிலிருந்தவர் நிர்மலா தேவி. கல்லூரியில் படித்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகக் குற்றச்சாட்டு பதிவாகியது தொடர்பாக நிர்மலா தேவிக்கு எதிரான ஆடியோ ஆதாரமும் வெளியானது.
2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது அருப்புக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு அப்போது பணியில் இருந்த கண்காணிப்பாளர் இராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். பின் இந்த வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. வழக்கு தொடர்பாக மாணவிகளிடம் இரகசிய விசாரணை நடந்த நிலையில் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி இறுதிக் கட்ட விவாதங்கள் நடைபெற்றன. இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என நீதிபதி பகவதி அம்மாள் தெரிவித்த நிலையில் இந்த வழக்கை பெண் டிஐஐி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென DYFI நிர்வாகி கணேசன் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாஹா குழு அமைக்கப்பட்டுள்ளதென தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாஹா குழு விசாரணை நடத்த முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருக்கிறார்களா என விளக்கமளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை 18-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. . மேலும் இந்த விவகாரத்தில் தனியார் கல்லூரி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை மீண்டும் ஜூன் மாதத்திற்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசரமாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்தக் குழு நிர்மலா தேவி உட்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் விசாரணை அதிகாரி சந்தானம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது
நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நிறைவடைந்துள்ளதென அவர் கூறினார். திட்டமிட்டப்படி மே மாதம் 15 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். தமிழில் உள்ள விசாரணை அறிக்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பணி தொடங்க இருப்பதாகவும் சந்தானம் கூறினார்.
ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி துவங்கி மூன்று கட்ட விசாரணைகளை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சந்தானம் நிறைவு செய்துள்ளார்.
கருத்துகள்