முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரத் தயாரென சேதுபதி இராணி தகவல்

கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரத் தயார் என இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இராணி தகவல்

மத்திய, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தால் கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தயாரென்று இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானத்தின் இராணி இராஜராஜேஸ்வரி நாச்சியார் தெரிவித்தார். கச்சத்தீவு

ராமேசுவரம் அருகே நடுக்கடலில் அமைந்துள்ள கச்சத்தீவானது, நாடு சுதந்திரத்துக்கு முன்பு ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. 

இந்த நிலையில், இந்திய அரசால் 50 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டது. இராமேசுவரம் மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதியாக கச்சத்தீவு இருந்தது. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டாலும் அங்கு இந்திய மீனவர்கள் சென்று மீன்பிடிக்கவும், வலைகளை உலர்த்திக் கொள்ளவும் அனுமதித்து விதிகள் வகுக்கப்பட்டு இருந்தன. ஆனால் காலப்போக்கில் இலங்கை அரசு அந்த அனுமதியை ரத்து செய்துவிட்டது. இதனால் தமிழக மீனவாகளின் மீன்பிடி உரிமை, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே கச்சத்தீவை மீட்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது கச்சத்தீவை மீட்கும் விவகாரம் விவாதப்பொருளாகி அரசியல் களத்தில் சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வாரிசுகள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கச்சத்தீவை திரும்ப பெற முயன்றால் அதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்புத் தருமென்று தெரிவித்தார். அதுகுறித்து இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் சேதுபதி இராணி இராஜராஜேஸ்வரி நாச்சியார் தெரிவித்ததாவது

கச்சத்தீவு சேதுபதி மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகத்தான் இருந்தது. நாடு சுதந்திரத்திற்கு பின்பு கச்சத்தீவு, இந்திய அரசு நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த தீவு தொடர்பான சட்ட ஆவணங்கள் எங்களது முன்னோர்களிடம் இருந்து வந்தன. கச்சத்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்தபோது எங்களிடமிருந்த ஆவணங்களை வாங்கி அதனையும் இணைந்து வழக்குத் தொடர்ந்தார். நீண்டகாலமாகி விட்டதால் தற்போது எங்களிடம் என்னென்ன ஆவணங்கள் உள்ளன என்பதை பார்த்தால் தான் தெரியும்.

சட்ட நிபுணர்களைக் கொண்டு அந்த ஆவணங்களைத் தொகுந்து சட்ட ரீதியாக உரிமை கோரும் அளவுக்கு தகுதியாக உள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் பட்சத்தில் கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம் சார்பில் தயாராக உள்ளோம்.

இது காலம் கடத்த பிரச்சினையாக உள்ளதாலும், இரு நாட்டு மீனவர்கள், இரு நாட்டில் வசிக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினையாக உள்ளதாலும் தீர ஆராய்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதுள்ள நிலை மேலும் சிக்கலாகி விடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...