முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாக்காளர் பெயர் நீக்கம் தலைமைத் தேர்தல் ஆணையம் தலையீடு வாக்களித்த முதியவர்

மதுரை மாநகரில் மேலப் பொன்னகரம் பகுதியில் வசிக்கும் மகபூப் ஜான்


ம.தி.மு.க-வில் உள்ளார் பல சமூக நல அமைப்புகளோடு சேர்ந்து பணியாற்றியதால் மதுரை நகரின் மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் அவரைத் தெரியும். ஒவ்வொரு தேர்தலிலும்  வாக்கைச் செலுத்தி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருந்தது. அவரிடம் அடையாள அட்டையும் இருந்தது ஆனால், இரண்டாவது வெளிவந்த வாக்காளர் பட்டியலில்  அவரது பெயர் நீக்கப்பட்டு, இறந்து போன அவரது மனைவி பெயர் மட்டுமே இருப்பதைத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிந்தவர் அதிர்ச்சியடைந்து.நூறு சதவிகித வாக்குப்பதிவுக்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதாவிடம், பெயர் நீக்கப்பட்டுள்ளது குறித்து முறையிட்டாராம். ஆனால், முறையாகப் பதில் அளிக்காமல், வாக்காளர் பட்டியலைச் சரியாகப் பாருங்கள் என்று அலட்சியமாகப் பேசினாராம்.

பொதுவாழ்க்கையில் இருப்பதைக் கூட வெளிப்படுத்தவில்லை. நூறு சதவிகித வாக்குப்பதிவுக்காக மலை மீதெல்லாம் ஏறி பேனர்கள் கட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய நீங்கள், என்னுடைய புகாரைத் தட்டிக் கழிக்கிறீர்கள்' என்றதற்குக் ஆட்சியர் கோபமானவர், பதில் சொல்லாமல், 'வாக்காளர் பட்டியலை நன்றாகப் பாருங்கள், எங்கள் தேர்தல் அலுவலர்களிடம் சொல்லுங்கள்' என்றே திரும்பத் திரும்பச் சொன்னாராம். மற்ற தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லாததைத் தொடர்ந்து தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்குப் புகார் அனுப்பியுள்ளார், அதற்கும் பதில் இல்லை. வாக்குரிமையை மீட்க முடியவில்லையே என்ற கவலையோடு இருந்தவர், தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவரது வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், சத்தியமூர்த்தியிடம் ஆலோசனை பெற்று டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையருக்கு விவரமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அங்கிருந்து உடனே எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து தகவல் வந்திருந்ததில், 19-ஆம் தேதி வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவரது  புகாரை உடனே விசாரித்த தேர்தல் ஆணையம், மாநில மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தித் தவறு நடந்துள்ளதைக் கண்டுபிடித்து உடனே அவரை வாக்களிக்க உத்தரவிட்டது. இதே தகவலை மாவட்டத் தேர்தல் அலுவலருக்கும் அனுப்பிய தேர்தல் ஆணையம், முதல் ஆளாக அவரை வாக்களிக்க வைக்குமாறு உத்தரவிட்டதால் அவரைத் தேடி தேர்தல் அலுவலர்கள் அலைந்துள்ளனர். அது அவருக்குத் தெரியாது. அவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை.19-ஆம் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்றவரைப் பார்த்த அலுவலர்கள், உங்களைத்தான் நேற்றிலிருந்து தேடுகிறோம் என்று மிகவும் மரியாதையாகப் பேசி அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தி உபசரித்து பிறகு முதல் ஆளாக வாக்களிக்க வைத்துள்ளார்கள். இது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் சங்கீதா பொறுப்பில்லாமல் பேசியது தான் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதை ஒரு சவாலாக எடுத்துத் தான் இதை அவரால் சாதிக்க முடிந்தது.

இப்போது பல ஊர்களில் பல வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டதைக் காண்கிறோம் பலரும் சொல்கிறார்கள். அவர்களும் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலைப் பார்த்து உறுதி செய்தபின் இவரைப் போல் தலைமைத்தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தால் வாக்குரிமையை மீட்டிருக்கலாம்" என்பதே உண்மை. இந்த நிலையில் சிரிப்பு நடிகர் S Ve Shekhar: ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்..நேர்மையே தெரியாத திருட்டுத்தனம் : என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.

கோயமுத்தூரில்யில் ஓட்டுரிமை இல்லை என பாஜக தொண்டர்கள் போராடிய சம்பவத்தில் மாநில தலைவர் அண்ணாமலையையை சாடிய எஸ்.வி.சேகர் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2024 ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. ஒருமாத காலமாக நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தனர். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு நாளன்று சில தொகுதிகள் பலருக்கும் வாக்குகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கோயமுத்தூரில், தென் சென்னை , கரூர் உள்ளிட்ட தொகுதிகள் பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

அதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தான் போட்டியிடும் கோயம்புத்தூர் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக வேகுற்றம் சாட்டினார். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு முடிந்த இரு தினங்களில் கோயம்புத்தூர் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பீப்புள் ஆஃப் அண்ணாமலை என்ற குழுவைச் சேர்ந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு வாக்குரிமை பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நியாயம் கேட்டு களமிறங்கிய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பலரின் கையில் ஓட்டு போட்டதற்கான அடையாள மை வைக்கப்பட்டிருந்த காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பாரதிய ஜனதா கட்சியினரை சரமாரியாக இணையவாசிகள் வினா தொடுத்தார்கள் 

ஆனால் அதுதொடர்பாக தேர்தல் அலுவலர் அளித்த விளக்கத்தில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோயம்புத்தூர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதன்பின்னர் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  வாக்காளர் பட்டியலை வழங்கி வெளியிட்டார். ஏதேனும் சந்தேகமிருந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண், தேர்தல் அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை அணுகலாம் எனவும் தெரிவித்திருந்த நிலையில் இந்த கோயம்புத்தூர் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர், ' ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா? தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி. நேர்மைதான் அடிப்படை தேச சேவைன்னு தெரியாத திருட்டுத்தனம்' என பெயர் குறிப்பிடாமல் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்துள்ளார். அவரது பதிவில் S.VE.SHEKHER🇮🇳@SVESHEKHER

·Follow

ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா⁉️தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி. நேர்மைதான் அடிப்படை தேச சேவைன்னு தெரியாத திருட்டுத்தனம். என் விமர்சித்துள்ளார்.   இதில் சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர் செயலை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை காரணம். அவர் ஜாதிய ரீதியாக கட்சியில் பேசி வருவதே பலருக்கும் பிடிக்கவில்லை, பிராமணர்கள் மட்டுமே அந்த பதவியில் இருக்க வேண்டும் என்ற ஒரு தனிக் கும்பலின் சார்பில் பேசுவதே ஆகும்.ஆனால் அண்ணாமலை இதைப் பொருட்படுத்த வில்லை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்