மதுரை மாநகரில் மேலப் பொன்னகரம் பகுதியில் வசிக்கும் மகபூப் ஜான்
ம.தி.மு.க-வில் உள்ளார் பல சமூக நல அமைப்புகளோடு சேர்ந்து பணியாற்றியதால் மதுரை நகரின் மக்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் அவரைத் தெரியும். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கைச் செலுத்தி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இருந்தது. அவரிடம் அடையாள அட்டையும் இருந்தது ஆனால், இரண்டாவது வெளிவந்த வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் நீக்கப்பட்டு, இறந்து போன அவரது மனைவி பெயர் மட்டுமே இருப்பதைத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிந்தவர் அதிர்ச்சியடைந்து.நூறு சதவிகித வாக்குப்பதிவுக்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதாவிடம், பெயர் நீக்கப்பட்டுள்ளது குறித்து முறையிட்டாராம். ஆனால், முறையாகப் பதில் அளிக்காமல், வாக்காளர் பட்டியலைச் சரியாகப் பாருங்கள் என்று அலட்சியமாகப் பேசினாராம்.
பொதுவாழ்க்கையில் இருப்பதைக் கூட வெளிப்படுத்தவில்லை. நூறு சதவிகித வாக்குப்பதிவுக்காக மலை மீதெல்லாம் ஏறி பேனர்கள் கட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திய நீங்கள், என்னுடைய புகாரைத் தட்டிக் கழிக்கிறீர்கள்' என்றதற்குக் ஆட்சியர் கோபமானவர், பதில் சொல்லாமல், 'வாக்காளர் பட்டியலை நன்றாகப் பாருங்கள், எங்கள் தேர்தல் அலுவலர்களிடம் சொல்லுங்கள்' என்றே திரும்பத் திரும்பச் சொன்னாராம். மற்ற தேர்தல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லாததைத் தொடர்ந்து தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்குப் புகார் அனுப்பியுள்ளார், அதற்கும் பதில் இல்லை. வாக்குரிமையை மீட்க முடியவில்லையே என்ற கவலையோடு இருந்தவர், தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவரது வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், சத்தியமூர்த்தியிடம் ஆலோசனை பெற்று டெல்லியிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையருக்கு விவரமாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அங்கிருந்து உடனே எந்தப் பதிலும் வரவில்லை. ஆனால் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையத்திடமிருந்து தகவல் வந்திருந்ததில், 19-ஆம் தேதி வாக்களிக்க வாக்குச் சாவடிக்குச் செல்லுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அவரது புகாரை உடனே விசாரித்த தேர்தல் ஆணையம், மாநில மற்றும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களிடம் விசாரணை நடத்தித் தவறு நடந்துள்ளதைக் கண்டுபிடித்து உடனே அவரை வாக்களிக்க உத்தரவிட்டது. இதே தகவலை மாவட்டத் தேர்தல் அலுவலருக்கும் அனுப்பிய தேர்தல் ஆணையம், முதல் ஆளாக அவரை வாக்களிக்க வைக்குமாறு உத்தரவிட்டதால் அவரைத் தேடி தேர்தல் அலுவலர்கள் அலைந்துள்ளனர். அது அவருக்குத் தெரியாது. அவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை.19-ஆம் தேதி வாக்குச்சாவடிக்குச் சென்றவரைப் பார்த்த அலுவலர்கள், உங்களைத்தான் நேற்றிலிருந்து தேடுகிறோம் என்று மிகவும் மரியாதையாகப் பேசி அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தி உபசரித்து பிறகு முதல் ஆளாக வாக்களிக்க வைத்துள்ளார்கள். இது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. மாவட்டத் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் சங்கீதா பொறுப்பில்லாமல் பேசியது தான் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதை ஒரு சவாலாக எடுத்துத் தான் இதை அவரால் சாதிக்க முடிந்தது.
இப்போது பல ஊர்களில் பல வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டதைக் காண்கிறோம் பலரும் சொல்கிறார்கள். அவர்களும் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலைப் பார்த்து உறுதி செய்தபின் இவரைப் போல் தலைமைத்தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தால் வாக்குரிமையை மீட்டிருக்கலாம்" என்பதே உண்மை. இந்த நிலையில் சிரிப்பு நடிகர் S Ve Shekhar: ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்..நேர்மையே தெரியாத திருட்டுத்தனம் : என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.
கோயமுத்தூரில்யில் ஓட்டுரிமை இல்லை என பாஜக தொண்டர்கள் போராடிய சம்பவத்தில் மாநில தலைவர் அண்ணாமலையையை சாடிய எஸ்.வி.சேகர் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 2024 ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. ஒருமாத காலமாக நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தனர். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு நாளன்று சில தொகுதிகள் பலருக்கும் வாக்குகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கோயமுத்தூரில், தென் சென்னை , கரூர் உள்ளிட்ட தொகுதிகள் பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
அதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, தான் போட்டியிடும் கோயம்புத்தூர் தொகுதியில் சுமார் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக வேகுற்றம் சாட்டினார். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு முடிந்த இரு தினங்களில் கோயம்புத்தூர் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பீப்புள் ஆஃப் அண்ணாமலை என்ற குழுவைச் சேர்ந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டு வாக்குரிமை பறிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நியாயம் கேட்டு களமிறங்கிய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பலரின் கையில் ஓட்டு போட்டதற்கான அடையாள மை வைக்கப்பட்டிருந்த காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பாரதிய ஜனதா கட்சியினரை சரமாரியாக இணையவாசிகள் வினா தொடுத்தார்கள்
ஆனால் அதுதொடர்பாக தேர்தல் அலுவலர் அளித்த விளக்கத்தில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் கோயம்புத்தூர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதன்பின்னர் நடைபெறும் சிறப்பு முகாம்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் வாக்காளர் பட்டியலை வழங்கி வெளியிட்டார். ஏதேனும் சந்தேகமிருந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண், தேர்தல் அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை அணுகலாம் எனவும் தெரிவித்திருந்த நிலையில் இந்த கோயம்புத்தூர் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர், ' ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா? தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி. நேர்மைதான் அடிப்படை தேச சேவைன்னு தெரியாத திருட்டுத்தனம்' என பெயர் குறிப்பிடாமல் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சரமாரியாக விமர்சித்துள்ளார். அவரது பதிவில் S.VE.SHEKHER🇮🇳@SVESHEKHER
·Follow
ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்னு கூட தெரியாத முட்டாள். உன் கையில இருக்கிற அடையாள மை 10 வருஷம் முன்னாடி தேர்தல்ல போட்டதா⁉️தலைவன் எவ்வழி தொண்டன் அதே வழி. நேர்மைதான் அடிப்படை தேச சேவைன்னு தெரியாத திருட்டுத்தனம். என் விமர்சித்துள்ளார். இதில் சிரிப்பு நடிகர் எஸ்.வி.சேகர் செயலை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை காரணம். அவர் ஜாதிய ரீதியாக கட்சியில் பேசி வருவதே பலருக்கும் பிடிக்கவில்லை, பிராமணர்கள் மட்டுமே அந்த பதவியில் இருக்க வேண்டும் என்ற ஒரு தனிக் கும்பலின் சார்பில் பேசுவதே ஆகும்.ஆனால் அண்ணாமலை இதைப் பொருட்படுத்த வில்லை
கருத்துகள்