முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி விபத்தில் படுகாயம்

யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி விபத்தில் படுகாயம்.



கைதாகி அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தி சிக்கியத! யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் . கோயமுத்தூரில் இருந்து வந்த சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரைக் கூட்டிச் சென்றனர்.



காவல் துறை உயர் ஐ பி எஸ் அதிகாரிகள், மற்றும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோயம்புத்தூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், சவுக்கு சங்கர் தேனிக்கு வந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோயம்புத்தூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அங்கிருந்து அவர் கோயம்புத்தூருங்கு கூட்டிச் செல்லப்பட்டார்.




சவுக்கு சங்கர் கைது குறித்து காவல்துறையினர் தரப்பில், “தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தது, சவுக்கு சங்கர் அவரது பணி நிமித்தமாக அடிக்கடி தேனி வந்து செல்வார் எனத் தெரிகிறது. அந்தத் தகவலின் அடிப்படையிலேயே கோயம்புத்தூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் அவரை தேனியில் வைத்துக் கைது செய்துள்ளனர். இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி  கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில்,



“திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா யூடியூப் ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல் துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம். ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக் கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி,



அந்த மாய உலகத்தில் மு.க.ஸ்டாலின் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல் துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யுமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.                 



 சவுக்கு சங்கர் ஏன் கைது?

சங்கர் சொல்லும் விஷயத்தில் உண்மை இருக்கலாம் ,              ஆனால், அரசின் காவல்துறை உயர் ஐ பி எஸ் மீது அவர் சொல்லும் விதம் முற்றிலும் சரியல்ல.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவைப் பாருங்கள். ADGP அருண் பற்றி  பேசுவதைப் பாருங்கள்.

இவ்வளவு திமிர்த்தனம் ஆகாது?


இவர் அடிப்படையில் நேர்மையானவராக இருக்க வாய்ப்பே இல்லை.

காவல் துறையில்  compassionate ground ல் கிளார்க்காக வேலைக்கு சேர்ந்தவர்: பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு. இவ்வளவு வசதி வாய்ப்புகள் எப்படி வந்தது? அதனால் தற்போது ADGP அருண் சவுக்கு சங்கரை லேசா ஒரு தட்டு தட்டச் சொல்லியிருப்பாரோ? என்பது தான் தற்போது ஊடகத்தினர் மத்தியில் நடக்கும் விவாதம் 


காரணம்? சவுக்கு சங்கரை கோயமுத்தூருக்கு அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம், தாராபுரம் அருகில் விபத்தில் சிக்கியது. காவல்துறையினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.  சமூகத்தின் வலைப்பதிவு தளங்களில் தமிழ்நாடு அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்கு சங்கர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் கூறி வந்தார். சமீபத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் காவல்துறை தேனியில் கைது செய்தனர்.மேலும் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி காவல்துறையினர் வழக்குப்பதிவு


தேனியில் தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று கைது செய்த கோயம்புத்தூர் காவல்துறை

சவுக்கு சங்கர் உடன் இருந்த இருவரை விசாரித்த போது கஞ்சா வைத்திருந்தது அம்பலமானது 

சவுக்கு சங்கரின் காரிலிருந்த அரை கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது

சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 293 (B), 509 மற்றும் 353 ஐபிசி , ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்தப் பிரிவுகளாகும். மேலும் அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை காவல்துறை பறிமுதல் செய்த நிலையில் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  காரில் மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டி  காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது காவல்துறை 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தேவையின்றி எல்லா இடங்களிலும் மீசையை முறுக்கிய சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பதிவானது. ஆகவே விரைவில் ஜாமீன் கிடைக்காது. இனி காவல் நீடிப்பு Vedio  conference மூலம் மட்டுமே செய்யப்படும்.

இனி காவல்துறை சொல்வது மட்டுமே செய்தி.

இவரது பூர்வீகம்  தஞ்சாவூர் அய்யர் , ஆனாலும், நேர்மையான நடவடிக்கை இல்லை. இதில் பொதுவான நீதி யாதெனில் கருத்து சுதந்திரம் என்பது வேறு கண்ணியக் குறைவான பேச்சு என்பது வேறு, ஊழல் குறித்து பேசலாம் தவறில்லை ஆனால் அதில் வன்மம் கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...