யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி விபத்தில் படுகாயம்.
கைதாகி அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தி சிக்கியத! யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் . கோயமுத்தூரில் இருந்து வந்த சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரைக் கூட்டிச் சென்றனர்.
காவல் துறை உயர் ஐ பி எஸ் அதிகாரிகள், மற்றும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோயம்புத்தூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், சவுக்கு சங்கர் தேனிக்கு வந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோயம்புத்தூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அங்கிருந்து அவர் கோயம்புத்தூருங்கு கூட்டிச் செல்லப்பட்டார்.
சவுக்கு சங்கர் கைது குறித்து காவல்துறையினர் தரப்பில், “தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தது, சவுக்கு சங்கர் அவரது பணி நிமித்தமாக அடிக்கடி தேனி வந்து செல்வார் எனத் தெரிகிறது. அந்தத் தகவலின் அடிப்படையிலேயே கோயம்புத்தூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் அவரை தேனியில் வைத்துக் கைது செய்துள்ளனர். இதற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில்,
“திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா யூடியூப் ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல் துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம். ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக் கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி,
அந்த மாய உலகத்தில் மு.க.ஸ்டாலின் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல் துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதி செய்யுமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
சங்கர் சொல்லும் விஷயத்தில் உண்மை இருக்கலாம் , ஆனால், அரசின் காவல்துறை உயர் ஐ பி எஸ் மீது அவர் சொல்லும் விதம் முற்றிலும் சரியல்ல.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவைப் பாருங்கள். ADGP அருண் பற்றி பேசுவதைப் பாருங்கள்.
இவ்வளவு திமிர்த்தனம் ஆகாது?
இவர் அடிப்படையில் நேர்மையானவராக இருக்க வாய்ப்பே இல்லை.
காவல் துறையில் compassionate ground ல் கிளார்க்காக வேலைக்கு சேர்ந்தவர்: பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு. இவ்வளவு வசதி வாய்ப்புகள் எப்படி வந்தது? அதனால் தற்போது ADGP அருண் சவுக்கு சங்கரை லேசா ஒரு தட்டு தட்டச் சொல்லியிருப்பாரோ? என்பது தான் தற்போது ஊடகத்தினர் மத்தியில் நடக்கும் விவாதம்
காரணம்? சவுக்கு சங்கரை கோயமுத்தூருக்கு அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம், தாராபுரம் அருகில் விபத்தில் சிக்கியது. காவல்துறையினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. சமூகத்தின் வலைப்பதிவு தளங்களில் தமிழ்நாடு அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்கு சங்கர். முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் கூறி வந்தார். சமீபத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் காவல்துறை தேனியில் கைது செய்தனர்.மேலும் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி காவல்துறையினர் வழக்குப்பதிவு
தேனியில் தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று கைது செய்த கோயம்புத்தூர் காவல்துறை
சவுக்கு சங்கர் உடன் இருந்த இருவரை விசாரித்த போது கஞ்சா வைத்திருந்தது அம்பலமானது
சவுக்கு சங்கரின் காரிலிருந்த அரை கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது
சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர்சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 293 (B), 509 மற்றும் 353 ஐபிசி , ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்தப் பிரிவுகளாகும். மேலும் அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை காவல்துறை பறிமுதல் செய்த நிலையில் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது காவல்துறை 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேவையின்றி எல்லா இடங்களிலும் மீசையை முறுக்கிய சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பதிவானது. ஆகவே விரைவில் ஜாமீன் கிடைக்காது. இனி காவல் நீடிப்பு Vedio conference மூலம் மட்டுமே செய்யப்படும்.
இனி காவல்துறை சொல்வது மட்டுமே செய்தி.
இவரது பூர்வீகம் தஞ்சாவூர் அய்யர் , ஆனாலும், நேர்மையான நடவடிக்கை இல்லை. இதில் பொதுவான நீதி யாதெனில் கருத்து சுதந்திரம் என்பது வேறு கண்ணியக் குறைவான பேச்சு என்பது வேறு, ஊழல் குறித்து பேசலாம் தவறில்லை ஆனால் அதில் வன்மம் கூடாது.
கருத்துகள்