முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போக்குவரத்து விதி மீறல்களுக்காக தமிழ்நாடு அரசுப் பேருந்துகளுக்கு அபராதம்

போக்குவரத்து விதி மீறல்களுக்காக தமிழ்நாடு அரசுப் பேருந்துகளுக்கு போக்குவரத்துக் காவல் துறையினர் அபராதம் விதிக்கிறார்கள் எனும் செய்தி.


பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் காவல்துறை தாமதமாக மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளது. பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள், சாலை முழுவதையும் தங்களுக்குச் சொந்தமானது என்பது போலவும், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனங்களை ஓட்டி வந்தனர்.  கட்சி அடிப்படையிலான ஊழியர் தொழிற் சங்கங்களின் ஆதரவுடன், அவர்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருந்தனர் மற்றும் அபராதம் விதிக்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை அல்லது இத்தனை நாட்களாக கேள்வி கேட்கவில்லை.

கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி செல்லும் பேருந்தில் சட்டப்படி டிக்கெட் எடுக்குமாறு காவலரை வற்புறுத்தி நடத்துனரிடம் வார்த்தைப் போரில் ஈடுபட்ட காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக போக்குவரத்துத் துறை செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்துள்ளது. சட்டத்தைக் கடைபிடிப்பது போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவலர்களின் கடமை மற்றும் பொறுப்பு என்றாலும், இது நாள் வரை அரசுப் பேரூந்துகளில் இதுபோன்ற அத்து மீறல்கள் தொடர்பாக காவல்துறை இந்தச் சம்பவத்திற்கு முன் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதை  காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாகும்.


சாலை விதிகளை மீறியதாக தமிழ அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கிறார்கள் போக்குவரத்து காவல்துறையினர் என்ற ஒரு செய்தியை பார்க்க, படிக்க நேர்ந்தது. மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து ஏங்கிக்கொண்டிருந்த நடவடிக்கையை தாமதமாக எடுத்துள்ளது காவல்துறை.   


 போக்குவரத்துத் துறையோ அல்லது காவல்துறையோ யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய கடமையும், பொறுப்புமுள்ளது என்பதை அரசுப் பணியாளர்கள் உணர வேண்டிய அதே நேரத்தில், இது நாள் வரை இதே போன்ற அரசு பேருந்துகளின்  விதி மீறல்களின் மீது காவல்துறை எவ்வளவு  நடவடிக்கை எடுத்தது என்பதையும் அப்படி இல்லையெனில் ஏன் எடுக்கவில்லை என்பதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடலாம்.


எது எப்படியோ, சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இது காவலர்களுக்கும், போக்குவரத்து துறையினருக்குமான பெரும் மோதலாக உருவெடுக்காமல் தமிழ்நாடு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அதனால் உருவாகும் பாதிப்புகள் பொது மக்களுக்கு தான் என்பதையும் இங்கு மறுப்பதற்கில்லை.

இந்தச் சம்பவத்திற்கு முன்னர் ஏ பேன் செய்யப்படவில்லை ? என விமர்சனங்கள் வந்த போதிலும்.

அரசு ஊழியர்கள் அல்லது சட்டத்தை அமல்படுத்துபவர்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம் இந்த மோதலால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் மட்டுமே என்பதால் காவல் துறைக்கும், போக்குவரத்து துறைக்கும் இடையே இது பெரிய மோதலாக மாறாமல் இருப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரகளையில் ஈடுபட்ட காணொளி அண்மையில் வைரலானது.

அதில், அரசுப் பேரூந்தில் அரசுப் பணியில் உள்ளவர்கள் எல்லாருக்குமே பயணச் சீட்டு கிடையாது. நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான். எங்களுக்கும் டிக்கெட்டா என அந்த அரசுப் பேருந்தில் பயணச் சீட்டு எடுக்காமல் அரசு போக்குவரத்து நடத்துநருடன் வாக்குவாதம் செய்த, காவலர் ஆறுமுகப்பாண்டி மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்த நிலையில், தற்போது 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்துக் காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.             சென்னை பரங்கிமலை ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தலைமையில் ஆறுமுகபாண்டியன் உள்ளிட்ட 8 ஆயுதப்படைக் காவலர்கள் மே மாதம் 20- ஆம் தேதியன்று புழல் சிறையிலிருந்து மதுரைக்கு நான்கு கைதிகளையும், பாளையங்கோட்டைக்கு 7 கைதிகளையும் காவல்துறை வாகனத்தில் கூட்டிச் சென்றனர். சிறையில் கைதிகளை ஒப்படைக்கப்பட்ட பின்னர், சார்பு ஆய்வாளர் லிங்கேஸ்வரன் தன்னுடன் வந்த காவலர்களை ஓய்வெடுக்க அறிவுறுத்தினார். பின்னர் மே மாதம் 21 ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் பாளையங்கோட்டை சிறைச்சாலை வளாகத்துக்கு வருமாறு அறிவுறுத்திய நிலையில் தான் ஆயுதப்படை காவலர் ஆறுமுகபாண்டியன் நாங்குநேரியிலுள்ள அவரது நண்பரைப் பார்த்துவிட்டு வந்த போது நாங்குநேரி பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தக் காணொளிக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் அவர் மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி சென்னை பரங்கிமலை ஆயுதப்படை உதவி ஆணையர் சம்பந்தப்பட்ட காவலர் ஆறுமுக பாண்டியனிடம் விசாரணை மேற்கொண்டாபோது திடீரென்று மயங்கி விழுந்ததாகவும். உடனடியாக அவருக்கு ஆலந்தூரிலுள்ள காவலர்களுக்கான மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் எழும்பூரிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆறுமுகபாண்டியன் மன அழுத்ததில் இருந்ததால், மருத்துவர்கள் பரிந்துரைப்படி அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உளவியல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்,

இந்த நடவடிக்கைகள் சரியானதாக இருந்தாலும் காலம் கடந்த செயலாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்