நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த இருவர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடிதம்
சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாமெனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
நீதி பரிபாலனத்தில் தலையிடும் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால், அந்த இரு நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுணன் , வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு கடிதமனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில், ‘நீதிபதி சுவாமிநாதன், அந்த நபர்கள் யார் என்பதை வெளிப்படையாக வெளிப்படுத்தாததால், அவர்களையும், அவர்களை அனுப்பியது யார் என்பதையும் கண்டறிய
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கும் அனுப்பியுள்ளார் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்.
இந்த நிலையில் மேலும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்துகொண்டு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் செயல்படுவதாக, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவரான கொளத்தூர் மணி புகார் செய்தார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினர்
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் வேறு சிலர் படுத்து உருளுவது சரியே என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார், கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நபர் கடவுள் வழிபாடு விவகாரத்தில் புகார் அளித்தார் என்பது ஏற்புடையதாக இல்லை. அதன் விபரம் வருமாறு கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் கோவிலில் ஆண்டு தோறும் மே மாதத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் அன்னதானம் நடைபெறுகிறது. அதில் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டு வந்தனர். இந்த நடைமுறைக்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்ட நிலையில், 2015 ஆம் ஆண்டு இதற்குத் தடை விதிக்கப்பட்டது. பத்தாண்டுகளாக இந்த நடைமுறை நடைபெறாமலிருந்து வந்த நிலையில் எச்சில் இலைகளின் மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் புனிதமான சடங்குக்கு அனுமதி அளிக்கவேண்டும் என கரூர் நவீன்குமார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் வழிபாடுகள் நிகழ்வை நடத்திக் கொள்ளலாமென கடந்த மே மாதம் 17ஆம் தேதி தீர்ப்பளித்தார். மே 18 ஆம் தேதியன்று, நெரூரில் பக்தர்கள் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட்ட இலைகளில் அங்கபிரதட்சணம் செய்தனர். எச்சில் இலையில் உருண்டு வழிபாடு நேர்த்திக்கடன் செய்வதை உயர் நீதிமன்றமே அங்கீகரித்துள்ளது.
இந்ந நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதியிடம் கொளத்தூர் மணி, கு.ராமகிருஷ்ணன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடவுள் வழிபாட்டுக்கு எதிரானவர்கள்
மற்றவர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் படுத்து உருளுவது சரியே என உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்ததை எதிர்த்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வரும் ஜிஆர் சுவாமிநாதன் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிச் செயல்படுவதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதி மற்றும் மதப் பாகுபாடு அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ள நீதிபதியாகத் தொடர ஜிஆர் சுவாமிநாதனுக்கு தகுதியில்லை என்றும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பளித்துள்ளதாகவும், அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த பாண்டியன் என்பவரின் மனுவின் மீதான விசாரணையில் எச்சில் இலைகள் மீது அங்கப்பிரதட்சணம் செய்வதற்குத் தடை விதித்து உத்தரவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், கர்நாடகாவில் குக்கே சுப்ரமண்யா கோவில் உள்பட பல கோவில்களில் மட்டை ஸ்நானம் என்ற எச்சில் இலை மீது நடத்தப்பட்டு வந்த அங்கப்பிரதட்சணம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் மதன், பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி - எச்சில் இலைமீது உருளுவது மத அடிப்படை உரிமை, அதைத் தடுக்க முடியாது என்று உத்தரவுப் பிறப்பிப்பது சட்டப்படி குற்றச் செயல் என்றும் அவர்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
மேலும், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இதுவரை கொடுத்துள்ள சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை கேட்டுக்கொண்டுள்ளனர். ஆக இனி யானை ராஜேந்திரன் கருத்து மற்றும் கொளத்தூர் மணி கருத்து இரண்டும் எதிர் எதிர் நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் இது குறித்துக் கூறியதாவது:
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட, பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகளில், சவுக்கு சங்கர் தரப்பு வழக்கை மட்டும் விசாரணைக்கு எடுத்தது குறித்து, நீதிபதி பதிலளித்துள்ளார். மேல் மட்டத்திலுள்ள இருவர் தன்னைச் சந்தித்ததாக, நீதிபதி கூறியுள்ளார். இந்தச் செயல், நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவது போலாகும்; நீதிமன்ற அவமதிப்புமாகும்.
நீதிபதி தங்கியிருக்குமிடத்தில், பாதுகாப்புக் காவலர்கள் இருப்பார்கள். நீதிமன்றத்திலுள்ள அறை என்றால், உதவியாளர்கள் இருப்பார்கள். அதனால், தன்னைச் சந்திக்க வந்தவர்களை, அங்கேயே பிடித்துக் கொடுத்திருக்கலாம். நீதி பரிபாலன முறையில் குறுக்கிடுவதாகத் தான், சங்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்து தண்டனை வழங்கினார். அப்படியிருக்கும் போது, இந்த இருவருக்கு எதிராகவும், அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
பொதுவாக, ஆட்கொணர்வு வழக்கில், அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கப்படும். இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரலும், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளார். மற்றொரு நீதிபதி பாலாஜியும், பதிலளிக்க அரசை அனுமதிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.
கள்ளச்சாராய வழக்குகளில், குண்டர் தடுப்புச் சட்டம் பிரயோகிக்கும்போது, அதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த அமர்வில், நானும் இருந்துள்ளேன்.
விசாரணைக்கு வந்த நிலையில், குண்டர் தடுப்புச் சட்டக் கைதை இரத்தும் செய்துள்ளோம். ஆனால், அரசு வழக்கறிஞர், பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டால், அவகாசமளித்துத் தான் விசாரித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்