முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுக்கத் துணை நிற்போம் ! கோரிக்கையுடன் ஒரு அறப்போர்

இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுக்கத் துணை நிற்போம் !  கோரிக்கையுடன் ஒரு அறப்போர் 

பத்திரிகையாளர்களின் வேடந்தாங் கலாக இருக்க வேண்டிய சென்னை பத்திரிகையாளர் மன்றம், கயமைத் தனவர்களின் கூடாரமாக, ஜனநாயக முறைப்படி இயங்காத, தேர்தல் எது வும் நடத்தப்படாத ஒரு அமைப்பாக இருந்து வருவது வேதனைக்குரியது.

ஜனநாயக நடைமுறையற்ற அந்த பத்திரிகையாளர் மன்றத்தை, மீட் டெடுத்துச் சீரமைத்து, முறைப்படியான தேர்தலை நடத்தி, பத்திரிகையாளர்களின் புகலிடமாகப் பாதுகாக்க வேண்டும் என்கிற முயற்சிகள் இன்றைக்கு நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.

1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 25 ஆண்டுகளாக தேர்தலே நடத்தப்படாமல் ஜனநாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படாமல், சில வெளியாட்களால், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. ஊருக்கே உபதேசம் செய்யும் பத்திரிக்கையாளர்களுக்கு இது ஒரு அவமானகரமான காரியமாகவே கருதப்படுகிறது.


பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு, மன்றத்தின் செயல்பாடுகளை வழி நடத்திடவேண்டும் .

பல ஆண்டுகளாக தற்காலிகமாக சுயேட்சையாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களின் பிடியிலிருந்து நிர்வாகப் பொறுப்புகளை மீட்டெடுக் கப்பட வேண்டும்.  



பத்திரிகையாளர் மன்றத்தில் நடத் தப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளுக்காக பெரிய அளவில் வசூலிக்கப்படும் வருமானமானத்துக்கு இது வரை எந்தவொரு கணக்குகளும் முன் வைக்கப்படாமல் இருப்பதை மாற்றியமைத்திட வேண்டும். 

ஒரு சிலருக்கே அப்பெரும் வருமானம் பங்களிக்கப்பட்டு வருவதையும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட இத்தகைய கோரிக்கைகள் ஏதும் இதுவரை செவி சாய்க்கப்படாமல், நீதிமன்றத் தடை வழக்குகளாலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளாலும் தட்டிக் கழிக்கப்பட்டே வந்திருக்கின்றன..

பாரதி தமிழன் (எ) பெருமாள் தன்னிச்சையாக இணைச்செயலாளராக தன்னை அறிவித்துக்கொண்டும், உடன் சில அடியாட்களை வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான வருமானத்தை பங்கு போட்டுக் கொண்டும், கண்துடைப்பு வேலைகளைச் செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்றே பத்திரிகையாளர் அனைவரும் குமுறுகிறார்கள்.

மேற்படியான குற்றச்சாட்டுகள் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடத்தப்பட்டு, வழிவகைகள் செய்திட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டும் ஏதொன்றும் இதுவரை சாத்தியப்படுத்தப்படவில்லை.

மூத்த பத்திரிக்கையாளர்கள் இந்து ராம், நக்கீரன் கோபால், அறம் சாவித்திரி கண்ணன் உள்ளிட்டவர்கள் தலையிட்டு முறைப்படுத்த முயன்றும், நந்திகளாக இருந்து வரும் பாரதி தமிழன் (எ)பெருமாள் மற்றும் அவரது கைப்பிள்ளைகள் பணம் கொட்டும் மன்ற நிர்வாகத்தை விட்டுவிடத் தயாராக இல்லை. 

பணத்தை எண்ணி பைக்குள் வைப்ப திலேயே  கவனமாக இருந்தவர்கள் , பத்திரிக்கையாளர் மன்ற வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்காமலும் , பதிவுத்துறை மன்றப் பதிவினைப் புதுப்பிக்காமலும், அலட்சியமாகவே இருந்து வந்துள்ளனர்.

ஹசின் முகமது, மூத்த பத்திரிகை யாளர் சி.ஜி.சேகர், தினகரன் மோகன் உள்ளிட்ட பல மன்ற உறுப்பினர்கள் மேற்படியான மீட்டெடுப்பு நடவடிக்கை களுக்கு  முன்னின்று பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்க வில்லை.

இவற்றையெல்லாம் கடந்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியாளர் செல்வராஜ் மற்றும் விமலேஸ்வரன் உள்ளிட்டோரின் தலைமைப் பொறுப்பிலுள்ள "சென்னை பிரஸ் கிளப் "அமைப்பு முறைப்படியான பதிவுத்துறை மன்றப் பதிவினை பெற்று, நூற்றுக்கணக்கான மூத்த இளம் பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாக்கி, ஜனநாயக முறைப்படியான செயல்பாடுகளால் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் பத்திரிகையாளர்  சங்கங்களையும் அரவணைத்துக் கொண்டு கடந்த நான்கைந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது.

சென்னை பத்திரிகையாளர் மன்ற அதிருப்தி செயல்பாடுகளை எல்லாம் தோலுரித்து வெளிப்படுத்தி, பல சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

பத்திரிக்கையாளர்கள் பலரின் ஆதரவு சக்திகளை ஒன்று திரட்டி, பாரதி தமிழன் (எ )பெருமாள் மற்றும் அவரது அடியாட்களை சென்னை  பத்திரிகையாளர் மன்ற நிர்வாகக் குழுவிலிருந்து வெளியேற்றிட வேண்டும் என்றும், மேலும் மன்றத்தின் சொத்துக்களான வருமானத்தை யெல்லாம்  மீட்டெடுத்திடவேண்டும் என்றும் கங்கணம் கட்டி வந்துள்ளது.

மேற்படியான செயல்பாடுகளுக்காக அனைத்து ஆதரவு சக்திகளோடும் "சென்னை பிரஸ் கிளப்" அமைப்பு களம்மிறங்கி இருப்பதை பத்திரிகை யாளர்கள் அனைவரும் வரவேற்று, உடனிருந்து ஆதரவு தெரிவித்து, மீட்டெடுப்புக்கு துணை நிற்பதும், இவற்றையெல்லாம் அரசின் கவனத் திற்கு கொண்டு செல்வதும் அத்தியாவசியமான கடமையாகும்.

பத்திரிகை ஊடகவியலாளர்கள் கூட்டுஇயக்கப் பேரவை. (UNITED FORUM OF MEDIA JOURNALISTS)

தமிழ்நாடு மூத்த பத்திரிகையாளர்கள் பேரவை (TAMILNADU SENIOR JOURNALISTS FORUM) ஆகியோர் இதை முன்னெடுத்துச் செல்வதற்கு அணைத்து இதழ்களில் இருந்தும் ஆதரவுக்கரம் கூடியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...