இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுக்கத் துணை நிற்போம் ! கோரிக்கையுடன் ஒரு அறப்போர்
பத்திரிகையாளர்களின் வேடந்தாங் கலாக இருக்க வேண்டிய சென்னை பத்திரிகையாளர் மன்றம், கயமைத் தனவர்களின் கூடாரமாக, ஜனநாயக முறைப்படி இயங்காத, தேர்தல் எது வும் நடத்தப்படாத ஒரு அமைப்பாக இருந்து வருவது வேதனைக்குரியது.
ஜனநாயக நடைமுறையற்ற அந்த பத்திரிகையாளர் மன்றத்தை, மீட் டெடுத்துச் சீரமைத்து, முறைப்படியான தேர்தலை நடத்தி, பத்திரிகையாளர்களின் புகலிடமாகப் பாதுகாக்க வேண்டும் என்கிற முயற்சிகள் இன்றைக்கு நேற்றல்ல, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 25 ஆண்டுகளாக தேர்தலே நடத்தப்படாமல் ஜனநாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படாமல், சில வெளியாட்களால், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. ஊருக்கே உபதேசம் செய்யும் பத்திரிக்கையாளர்களுக்கு இது ஒரு அவமானகரமான காரியமாகவே கருதப்படுகிறது.
பத்திரிக்கையாளர் மன்றத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடத்தி, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டு, மன்றத்தின் செயல்பாடுகளை வழி நடத்திடவேண்டும் .
பல ஆண்டுகளாக தற்காலிகமாக சுயேட்சையாக பொறுப்பேற்றுக் கொண்டவர்களின் பிடியிலிருந்து நிர்வாகப் பொறுப்புகளை மீட்டெடுக் கப்பட வேண்டும்.
பத்திரிகையாளர் மன்றத்தில் நடத் தப்படும் பத்திரிகையாளர்கள் சந்திப்புகளுக்காக பெரிய அளவில் வசூலிக்கப்படும் வருமானமானத்துக்கு இது வரை எந்தவொரு கணக்குகளும் முன் வைக்கப்படாமல் இருப்பதை மாற்றியமைத்திட வேண்டும்.
ஒரு சிலருக்கே அப்பெரும் வருமானம் பங்களிக்கப்பட்டு வருவதையும் தடுத்து நிறுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட இத்தகைய கோரிக்கைகள் ஏதும் இதுவரை செவி சாய்க்கப்படாமல், நீதிமன்றத் தடை வழக்குகளாலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளாலும் தட்டிக் கழிக்கப்பட்டே வந்திருக்கின்றன..
பாரதி தமிழன் (எ) பெருமாள் தன்னிச்சையாக இணைச்செயலாளராக தன்னை அறிவித்துக்கொண்டும், உடன் சில அடியாட்களை வைத்துக்கொண்டு லட்சக்கணக்கான வருமானத்தை பங்கு போட்டுக் கொண்டும், கண்துடைப்பு வேலைகளைச் செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்றே பத்திரிகையாளர் அனைவரும் குமுறுகிறார்கள்.
மேற்படியான குற்றச்சாட்டுகள் நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு, ஜனநாயக முறைப்படியான தேர்தல் நடத்தப்பட்டு, வழிவகைகள் செய்திட வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டும் ஏதொன்றும் இதுவரை சாத்தியப்படுத்தப்படவில்லை.
மூத்த பத்திரிக்கையாளர்கள் இந்து ராம், நக்கீரன் கோபால், அறம் சாவித்திரி கண்ணன் உள்ளிட்டவர்கள் தலையிட்டு முறைப்படுத்த முயன்றும், நந்திகளாக இருந்து வரும் பாரதி தமிழன் (எ)பெருமாள் மற்றும் அவரது கைப்பிள்ளைகள் பணம் கொட்டும் மன்ற நிர்வாகத்தை விட்டுவிடத் தயாராக இல்லை.
பணத்தை எண்ணி பைக்குள் வைப்ப திலேயே கவனமாக இருந்தவர்கள் , பத்திரிக்கையாளர் மன்ற வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்காமலும் , பதிவுத்துறை மன்றப் பதிவினைப் புதுப்பிக்காமலும், அலட்சியமாகவே இருந்து வந்துள்ளனர்.
ஹசின் முகமது, மூத்த பத்திரிகை யாளர் சி.ஜி.சேகர், தினகரன் மோகன் உள்ளிட்ட பல மன்ற உறுப்பினர்கள் மேற்படியான மீட்டெடுப்பு நடவடிக்கை களுக்கு முன்னின்று பல முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்க வில்லை.
இவற்றையெல்லாம் கடந்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் செய்தியாளர் செல்வராஜ் மற்றும் விமலேஸ்வரன் உள்ளிட்டோரின் தலைமைப் பொறுப்பிலுள்ள "சென்னை பிரஸ் கிளப் "அமைப்பு முறைப்படியான பதிவுத்துறை மன்றப் பதிவினை பெற்று, நூற்றுக்கணக்கான மூத்த இளம் பத்திரிகையாளர்களை உறுப்பினர்களாக்கி, ஜனநாயக முறைப்படியான செயல்பாடுகளால் அனைத்துப் பத்திரிகையாளர்களையும் பத்திரிகையாளர் சங்கங்களையும் அரவணைத்துக் கொண்டு கடந்த நான்கைந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டுள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்ற அதிருப்தி செயல்பாடுகளை எல்லாம் தோலுரித்து வெளிப்படுத்தி, பல சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு பத்திரிகையாளர் மன்றத்தை மீட்டெடுத்தே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
பத்திரிக்கையாளர்கள் பலரின் ஆதரவு சக்திகளை ஒன்று திரட்டி, பாரதி தமிழன் (எ )பெருமாள் மற்றும் அவரது அடியாட்களை சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகக் குழுவிலிருந்து வெளியேற்றிட வேண்டும் என்றும், மேலும் மன்றத்தின் சொத்துக்களான வருமானத்தை யெல்லாம் மீட்டெடுத்திடவேண்டும் என்றும் கங்கணம் கட்டி வந்துள்ளது.
மேற்படியான செயல்பாடுகளுக்காக அனைத்து ஆதரவு சக்திகளோடும் "சென்னை பிரஸ் கிளப்" அமைப்பு களம்மிறங்கி இருப்பதை பத்திரிகை யாளர்கள் அனைவரும் வரவேற்று, உடனிருந்து ஆதரவு தெரிவித்து, மீட்டெடுப்புக்கு துணை நிற்பதும், இவற்றையெல்லாம் அரசின் கவனத் திற்கு கொண்டு செல்வதும் அத்தியாவசியமான கடமையாகும்.
பத்திரிகை ஊடகவியலாளர்கள் கூட்டுஇயக்கப் பேரவை. (UNITED FORUM OF MEDIA JOURNALISTS)
தமிழ்நாடு மூத்த பத்திரிகையாளர்கள் பேரவை (TAMILNADU SENIOR JOURNALISTS FORUM) ஆகியோர் இதை முன்னெடுத்துச் செல்வதற்கு அணைத்து இதழ்களில் இருந்தும் ஆதரவுக்கரம் கூடியது.
கருத்துகள்