சென்னையில் ஐந்து வயது வயது சிறுமியைக் கடித்த வெளிநாட்டு வளர்ப்பு நாய்கள் வளர்த்த மூவர் கைது.
சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிய ஐந்து வயதுச் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது வளைவுப் பகுதியிலுள்ள மாநகராட்சிப் பூங்காவின் காவலாளி மற்றும் பாரமரிப்பாளராக பணி செய்பவர் ரகு. அவரது மனைவி சோனியா மற்றும் ஐந்து வயது மகள் சுரக்ஷாவுடன் பூங்காவிலுள்ள ஒரு சிறு அறையில் தங்கியுள்ளனர். கடந்த 5-ஆம் தேதி ரகு சொந்த ஊரான விழுப்புரத்துக்கு. உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றதனால் பூங்காவில் சோனியா, மகள் சுரக்ஷா மட்டும் இருந்துள்ளனர்.
அன்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் வீட்டிலிருந்து வெளியேறிய 2 வளர்ப்பு நாய்கள் பூங்காவுக்குள் நுழைந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுரக்ஷா மீது நாய்கள் திடீரென வெறிபிடித்ததுபோல் பாய்ந்து கடிக்கத் தொடங்கின. குழந்தையின் கை, கால் என உடல் முழுவதும் சரமாரியாகக் கடித்துக் குதறியதில் இரத்தம் சிந்தி சிறுமி அலறவே
நாய்களின் இந்த தாக்குதலில் நிலை குலைந்த சிறுமி பயம், அதிர்ச்சி மற்றும் வலியால் கதறியதால் குழந்தையின் அழுகுரல் கேட்டு, காப்பாற்ற ஓடிவந்த தாய் சோனியாவையும் நாய்கள் விரட்டிக் கடித்தன. இருவரின் அலறல் சத்தம் கேட்டு பதட்டமடைந்த அந்த பகுதி மக்கள், விரைந்து சென்று நாயை நீண்ட போராட்டத்துக்கு பிறகு விரட்டினர்.
பலத்த காயமடைந்த சிறுமியை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பினர். தற்போது ஆயிரம் விளக்கிலுள்ள தனியார்மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை விசாரித்தனர். பின்னர் அவர் மீதும், அவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் மகன் மருத்துவர் வெங்கடேஸ்வரன் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
அது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறும்போது, புகழேந்தியின் வீட்டு மெயின் கதவு திறந்திருந்ததால், வீட்டிலிருந்து இரவு 7.30 மணியளவில் வெளியேறிய அவரது வளர்ப்பு நாய்கள் அருகிலிருந்த பூங்காவுக்குள் நுழைந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் கடித்துள்ளது தெரியவந்ததுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
காவல்துறை தரப்பில் கூறும் போது, ‘வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டுக்கு வருவோரையோ வெளியிலோ யாரைக் கடித்தாலும் நாயின் உரிமையாளரே பொறுப்பு. அவர் மீதே வழக்குப் பதிவு செய்யப்படும். 6 மாதம் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடமுள்ளது’ எனத் நெரிவித்தனர்.
செல்லப்பிராணி ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தாலும் வெளிநாட்டு நாய்களை வளர்க்கத் தான் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் 100-க்கு 25 பேர் மட்டுமே உரிய உரிமங்களுடன் நாயை வாங்கிச் செல்கின்றனர். உரிமம் பெறுவது கட்டாயமாகும்” என்றார். செல்லப் பிராணிகளால் ஏற்படும் பல்வேறு இன்னல்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாதவாறு அதன் வழிகாட்டு விதிகள் பலவீனமாக இருப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
செல்லப் பிராணிகள் பராமரிப்பு விதிகளை மீறுவோருக்கு பொது சுகாதார சட்ட விதிகளின் படி, ரூபாய்.1000-க்கும் குறைவாக அபராதம் மட்டுமே வசூலிக்க முடியும்.
விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ், விலங்குகள் இனவிருத்திக் கட்டுப்பாடு விதிகள், 2023-ஐ மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டதில் கூட வளர்ப்பு செல்லப் பிராணிகளை வெளியில் அழைத்து செல்லும் போது கழுத்தில் கயிற்றுடன் தான் அழைத்து செல்ல வேண்டும். செல்லுமிடத்தில் மலம் கழித்து விட்டால் அதை உரிமையாளர் அகற்ற வேண்டும் என யோசனையாக மட்டுமே கூறப்பட்டது.
இந்த விதிகளை மீறினால் உரிமையாளர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான அம்சங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இதனாலேயே பிராணிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.
சிகிச்சை முடியும் வரை சிறுமிக்கான சிகிச்சை செலவை கொடுப்பதாக நாயின் உரிமையாளர் புகழேந்தி காவல்துறையினரிடம் உறுதி அளித்துள்ளார். இது ஒருபுறமிருக்க சிறுமியை கடித்த நாய்களைப் பிடித்துச் செல்லும்படி மாநகராட்சிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருந்து பரிந்துரைக் கடிதம் அனுப்பினர். அதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நாயை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்தும் படி நோட்டீஸ் ஒட்டினர்.
நம் நாட்டில் போயர்போயல், மத்திய ஆசிய ஷெப்பர்டு, காகாசியன் ஷெப்பர்டு, தெற்கு ஆசிய ஷெப்பர்டு, டோர்ன்ஜாக், சர்பிளானினாக், ஜப்பானிய அகிடா, மாஸ்டிப்ஸ், ராட்வெய்லர், பிட்புல், டெர்ரியர்ஸ், ரோடிசியன், உல்ப் டாக், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்டு, கேன் கார்சோ உள்ளிட்ட நாய் இனங்கள் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது, தடையை மீறுதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ராட்வைலரை வீட்டில் வைத்து வளர்க்க முடியாது: சென்னையில் குழந்தை சுரக்ஷ்வை கடித்துக் குதறிய நாய்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ராட்வைலர் எனும் வகையைச் சேர்ந்தது. இவைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது கடினமாகும். முறையாக பயிற்சி கொடுத்தால் மட்டுமே ராட்வைலர் நாயை பழக்கப்படுத்த முடியும். ராட்வைலரை பொறுத்தவரை அது ஒருவரை மட்டுமே உரிமையாளராக தேர்ந்தெடுக்கும். அதன்பின் அவரால் கொடுக்கப்படும் கட்டளையின் படி மட்டுமே அது செயல்படும். அடித்தாலோ அல்லது மிரட்டினாலோ ராட்வைலரை கட்டுப்படுத்த முடியாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
வளர்ப்பு நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வீலர் இன நாய்களை வைத்திருந்ததாக காவல்துறை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.ராட்வைலர் அல்லது ராட்வீலர் அல்லது ரொட்வீலர் என்பது ஜெர்மனியின் ராட்வைல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு வீட்டு நாய் இனம். இது நடுத்தர அளவிலிருந்து பெரிய உருவம் கொண்டது. இது மாடு மேய்க்கும் நாய்களாகப் பயன்பட்டது.இந்த வகை நாய்களை இந்தியாவில் வளர்க்க தடை உள்ளது. இதையும் மீறி வளப்பதால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறித்து ஒரு விழிப்புணர்வு தேவை
இதிலிருந்து நாய்கள் வளர்ப்பும், அவை கடிப்பதால் சிகிச்சைக்கு விற்பனையாகும் கோடிக்கணக்கான மருந்து வர்த்தகத்தில் உலக மருத்துவ மாபியா இருப்பது தெரிகிறது. ராட்வில்லர்
இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட நாய் இனம்.
ஆனால் பலர் தடையை மீறி வளர்ப்பதும்,இனவிருத்தி செய்து விற்பனை செய்வதும் தொடர்கிறது.
இந்த வகை நாய்கள் உரிமையாளர்களையே கடித்து தலையை துண்டித்த நிகழ்வும் நடந்திருக்கின்றன.
இந்த வகை நாய்கள் முரட்டுத்தனம் மிகுந்த இரத்தவெறி பிடித்தவை.
கடிக்கத் துவங்கிவிட்டால் கழுத்துப்பகுதியை குறி வைத்துக் கடித்து, தலையை துண்டாக்கும் வரை விடாது.
எனவே இந்த வகை நாய்களுக்கு இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக வளர்ப்பு நாய்களை வெளியே வாக்கிங் அழைத்து வரும்போது, வாய்க்கவசம் பூட்டி அழைத்து வர வேண்டும்.
மாநகராட்சியில் உரிமம் வாங்க வேண்டும்.
கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை மற்றும் பராமரிப்பு பட்டியலை வைத்திருக்க வேண்டும்.
ஆனால் எதையும் பின்பற்றாமல் செயல்படும் நாய் வளர்ப்போருக்கு தகுந்த விதிமுறைகளை விளக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய்களின் குணம் மற்றும் வளர்ப்பு சிகிச்சை முறைகள் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ ஆ ப கால்நடை மருத்துவர் என்பதால் அவருக்கு முழுமையாக தெரியும்.
மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் இன்று ஒரு குழந்தை நாயால் கடிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறது.
எனவே, தடை செய்யப்பட்ட வெளிநாட்டு நாய்களால் நேரும் பேராபத்தை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணை நடக்கிறது என்ற ஒற்றைச் சொல்லால் சமாளிப்பதை விடுத்து, நாய்களால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பாதுகாப்பு திட்டம் வகுக்க வேண்டும். இதில் பொதுவான நீதி யாதெனில்:மேலும் நமது நாட்டு நாய்கள் பொதுவாகவே மனிதர்களுடன் நட்புடன் பழக கூடிய நாய்கள் இனம் ஆகும்.. நன்றியோடும் நட்பாகவும் பழகக்கூடிய நமது நாட்டு நாய் இனங்களைத் தெருவில் வீசப்படுவதும் முரட்டுதனமும் அதிகரித்து சொகுசு வசதிகளையும் எதிர்பார்க்க கூடிய வெளிநாட்டு இன நாய்களை விரும்பி வீட்டிற்கு நடுவில் வைத்து வளர்க்கும் கலாச்சாரம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.. இந்நிலை தொடரும் பட்சத்தில் நம் இந்திய நாட்டு இன நாய்கள் இனம் அழிவை காணும்..
நமது நாட்டு நாய்களை தெருவில் விட்டுவிட்டு வெளிநாட்டு நாய்களை விலைக்கு வாங்கி வளர்க்காமல் நமது நாட்டு நாய் குட்டிகளை தத்தெடுத்து வளர்த்தாலே தெருநாய்கள் எண்ணிக்கையும் பிரச்சனைகளும் குறைய வாய்ப்புகள் கிடைக்கும்.
கருத்துகள்