முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறுமியைக் கடித்த வெளிநாட்டு வளர்ப்பு நாய்கள் வளர்த்த மூவர் கைது.

சென்னையில் ஐந்து வயது வயது சிறுமியைக் கடித்த வெளிநாட்டு வளர்ப்பு நாய்கள் வளர்த்த மூவர் கைது. 

சென்னை நுங்கம்பாக்கம்  மாநகராட்சிப் பூங்காவில் விளையாடிய ஐந்து வயதுச் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை 4-வது வளைவுப் பகுதியிலுள்ள மாநகராட்சிப் பூங்காவின் காவலாளி மற்றும் பாரமரிப்பாளராக பணி செய்பவர் ரகு. அவரது மனைவி சோனியா மற்றும் ஐந்து வயது மகள் சுரக்‌ஷாவுடன் பூங்காவிலுள்ள ஒரு சிறு அறையில் தங்கியுள்ளனர்.  கடந்த 5-ஆம் தேதி ரகு  சொந்த ஊரான விழுப்புரத்துக்கு.  உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றதனால் பூங்காவில் சோனியா, மகள் சுரக்‌ஷா மட்டும் இருந்துள்ளனர்.

 அன்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் வீட்டிலிருந்து வெளியேறிய 2 வளர்ப்பு நாய்கள் பூங்காவுக்குள் நுழைந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சுரக்‌ஷா மீது நாய்கள் திடீரென வெறிபிடித்ததுபோல் பாய்ந்து கடிக்கத் தொடங்கின. குழந்தையின் கை, கால் என உடல் முழுவதும் சரமாரியாகக் கடித்துக் குதறியதில் இரத்தம் சிந்தி சிறுமி அலறவே 


நாய்களின் இந்த தாக்குதலில் நிலை குலைந்த சிறுமி பயம், அதிர்ச்சி மற்றும் வலியால் கதறியதால்  குழந்தையின் அழுகுரல் கேட்டு, காப்பாற்ற ஓடிவந்த தாய் சோனியாவையும் நாய்கள் விரட்டிக் கடித்தன. இருவரின் அலறல் சத்தம் கேட்டு பதட்டமடைந்த அந்த பகுதி மக்கள், விரைந்து சென்று நாயை நீண்ட போராட்டத்துக்கு பிறகு விரட்டினர்.

பலத்த காயமடைந்த சிறுமியை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பினர். தற்போது ஆயிரம் விளக்கிலுள்ள தனியார்மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தினர் நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை விசாரித்தனர். பின்னர் அவர் மீதும், அவருடைய மனைவி தனலட்சுமி மற்றும் மகன் மருத்துவர் வெங்கடேஸ்வரன் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

அது குறித்து  காவல்துறையினர் தரப்பில் கூறும்போது, புகழேந்தியின் வீட்டு மெயின் கதவு திறந்திருந்ததால், வீட்டிலிருந்து இரவு 7.30 மணியளவில் வெளியேறிய அவரது வளர்ப்பு நாய்கள் அருகிலிருந்த பூங்காவுக்குள் நுழைந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் கடித்துள்ளது தெரியவந்ததுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.



காவல்துறை தரப்பில் கூறும் போது, ‘வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டுக்கு வருவோரையோ வெளியிலோ யாரைக் கடித்தாலும் நாயின் உரிமையாளரே பொறுப்பு. அவர் மீதே வழக்குப் பதிவு செய்யப்படும். 6 மாதம் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க சட்டத்தில் இடமுள்ளது’ எனத் நெரிவித்தனர்.

செல்லப்பிராணி ஆர்வலர் ஒருவர் கூறும்போது, “பராமரிப்பு செலவு அதிகமாக இருந்தாலும் வெளிநாட்டு நாய்களை வளர்க்கத் தான் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் 100-க்கு 25 பேர் மட்டுமே உரிய உரிமங்களுடன் நாயை வாங்கிச் செல்கின்றனர். உரிமம் பெறுவது கட்டாயமாகும்” என்றார்.  செல்லப் பிராணிகளால் ஏற்படும் பல்வேறு இன்னல்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க முடியாதவாறு அதன் வழிகாட்டு விதிகள் பலவீனமாக இருப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்லப் பிராணிகள் பராமரிப்பு விதிகளை மீறுவோருக்கு பொது சுகாதார சட்ட விதிகளின் படி, ரூபாய்.1000-க்கும் குறைவாக அபராதம் மட்டுமே வசூலிக்க முடியும்.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ், விலங்குகள் இனவிருத்திக் கட்டுப்பாடு விதிகள், 2023-ஐ மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டதில் கூட வளர்ப்பு செல்லப் பிராணிகளை வெளியில் அழைத்து செல்லும் போது கழுத்தில் கயிற்றுடன் தான் அழைத்து செல்ல வேண்டும். செல்லுமிடத்தில் மலம் கழித்து விட்டால் அதை உரிமையாளர் அகற்ற வேண்டும் என யோசனையாக மட்டுமே கூறப்பட்டது.

இந்த விதிகளை மீறினால் உரிமையாளர் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான அம்சங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இதனாலேயே பிராணிகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

சிகிச்சை முடியும் வரை சிறுமிக்கான சிகிச்சை செலவை கொடுப்பதாக நாயின் உரிமையாளர் புகழேந்தி காவல்துறையினரிடம் உறுதி அளித்துள்ளார். இது ஒருபுறமிருக்க சிறுமியை கடித்த நாய்களைப் பிடித்துச் செல்லும்படி மாநகராட்சிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் இருந்து பரிந்துரைக் கடிதம் அனுப்பினர். அதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் சார்பில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நாயை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்தும் படி நோட்டீஸ் ஒட்டினர்.                                                     


நம் நாட்டில் போயர்போயல், மத்திய ஆசிய ஷெப்பர்டு, காகாசியன் ஷெப்பர்டு, தெற்கு ஆசிய ஷெப்பர்டு, டோர்ன்ஜாக், சர்பிளானினாக், ஜப்பானிய அகிடா, மாஸ்டிப்ஸ், ராட்வெய்லர், பிட்புல், டெர்ரியர்ஸ், ரோடிசியன், உல்ப் டாக், கனாரியோ, அக்பாஷ், மாஸ்கோ கார்டு, கேன் கார்சோ உள்ளிட்ட நாய் இனங்கள் வளர்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது, தடையை மீறுதல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராட்வைலரை வீட்டில் வைத்து வளர்க்க முடியாது: சென்னையில் குழந்தை சுரக்ஷ்வை கடித்துக் குதறிய நாய்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ராட்வைலர் எனும் வகையைச் சேர்ந்தது. இவைகளை வீட்டில் வைத்து வளர்ப்பது கடினமாகும். முறையாக பயிற்சி கொடுத்தால் மட்டுமே ராட்வைலர் நாயை பழக்கப்படுத்த முடியும். ராட்வைலரை பொறுத்தவரை அது ஒருவரை மட்டுமே உரிமையாளராக தேர்ந்தெடுக்கும். அதன்பின் அவரால் கொடுக்கப்படும் கட்டளையின் படி மட்டுமே அது செயல்படும். அடித்தாலோ அல்லது மிரட்டினாலோ ராட்வைலரை கட்டுப்படுத்த முடியாது என விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 வளர்ப்பு நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வீலர் இன நாய்களை வைத்திருந்ததாக காவல்துறை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.ராட்வைலர் அல்லது ராட்வீலர் அல்லது ரொட்வீலர் என்பது ஜெர்மனியின் ராட்வைல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட ஒரு வீட்டு நாய் இனம். இது நடுத்தர அளவிலிருந்து பெரிய உருவம் கொண்டது. இது மாடு மேய்க்கும் நாய்களாகப் பயன்பட்டது.இந்த வகை நாய்களை இந்தியாவில் வளர்க்க தடை உள்ளது. இதையும் மீறி வளப்பதால் ஏற்படும் அசம்பாவிதங்களைக் குறித்து ஒரு விழிப்புணர்வு தேவை 

இதிலிருந்து நாய்கள் வளர்ப்பும், அவை கடிப்பதால் சிகிச்சைக்கு விற்பனையாகும் கோடிக்கணக்கான மருந்து வர்த்தகத்தில் உலக மருத்துவ மாபியா இருப்பது தெரிகிறது.        ராட்வில்லர்

இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட நாய் இனம்.

ஆனால் பலர் தடையை மீறி வளர்ப்பதும்,இனவிருத்தி செய்து விற்பனை செய்வதும் தொடர்கிறது.

இந்த வகை நாய்கள் உரிமையாளர்களையே கடித்து தலையை துண்டித்த நிகழ்வும் நடந்திருக்கின்றன.

இந்த வகை நாய்கள் முரட்டுத்தனம் மிகுந்த இரத்தவெறி பிடித்தவை.

கடிக்கத் துவங்கிவிட்டால் கழுத்துப்பகுதியை குறி வைத்துக் கடித்து, தலையை துண்டாக்கும் வரை விடாது.

எனவே இந்த வகை நாய்களுக்கு இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக வளர்ப்பு நாய்களை வெளியே வாக்கிங் அழைத்து வரும்போது, வாய்க்கவசம் பூட்டி அழைத்து வர வேண்டும்.

மாநகராட்சியில் உரிமம் வாங்க வேண்டும்.

கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை மற்றும் பராமரிப்பு பட்டியலை வைத்திருக்க வேண்டும்.

ஆனால் எதையும் பின்பற்றாமல் செயல்படும் நாய் வளர்ப்போருக்கு தகுந்த விதிமுறைகளை விளக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாய்களின் குணம் மற்றும் வளர்ப்பு  சிகிச்சை முறைகள் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் இ ஆ ப கால்நடை மருத்துவர் என்பதால் அவருக்கு முழுமையாக தெரியும்.

மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் இன்று ஒரு குழந்தை நாயால் கடிக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறது.

எனவே, தடை செய்யப்பட்ட வெளிநாட்டு நாய்களால் நேரும் பேராபத்தை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசாரணை நடக்கிறது என்ற ஒற்றைச் சொல்லால் சமாளிப்பதை விடுத்து, நாய்களால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் பாதுகாப்பு திட்டம் வகுக்க வேண்டும்.              இதில் பொதுவான நீதி யாதெனில்:மேலும் நமது நாட்டு நாய்கள் பொதுவாகவே மனிதர்களுடன் நட்புடன் பழக கூடிய நாய்கள் இனம் ஆகும்.. நன்றியோடும் நட்பாகவும் பழகக்கூடிய நமது நாட்டு நாய் இனங்களைத் தெருவில் வீசப்படுவதும் முரட்டுதனமும் அதிகரித்து சொகுசு வசதிகளையும் எதிர்பார்க்க கூடிய வெளிநாட்டு இன நாய்களை விரும்பி வீட்டிற்கு நடுவில் வைத்து வளர்க்கும் கலாச்சாரம்  தொடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.. இந்நிலை தொடரும் பட்சத்தில் நம் இந்திய நாட்டு இன நாய்கள் இனம் அழிவை காணும்..

நமது நாட்டு நாய்களை தெருவில் விட்டுவிட்டு வெளிநாட்டு நாய்களை விலைக்கு வாங்கி வளர்க்காமல் நமது நாட்டு நாய் குட்டிகளை தத்தெடுத்து வளர்த்தாலே தெருநாய்கள் எண்ணிக்கையும் பிரச்சனைகளும் குறைய வாய்ப்புகள் கிடைக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்