முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எரிக்கப்பட்டது ஜெயக்குமார் உடலா? அல்லது போலி உடலா? விலகாத மர்மம்!

எரிக்கப்பட்டது ஜெயக்குமார் உடலா? அல்லது போலி உடலா? விலகாத மர்மம்

காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் கொலை வழக்கில் பல மர்மங்களும் புதிர்களும் புயலாய் சுழற்றியடிக்கிறது. ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா?

கரிக்கட்டையாய் கிடந்தது ஜெயக்குமாரின் உடல் தானா? என காவல்துறை இந்த நிமிடம் வரை உறுதிப்படுத்தவில்லை.


மே மாதம் 2 ஆம் தேதியன்று மாலை தனது  காரில் கிளம்பிய ஜெயக்குமார் நேராக திசையன்விளை சென்றவர் பின் அங்கிருந்து மன்னார்புரம் விலக்கு வரை சென்றிருக்கிறார். அங்குள்ள பெட்ரோல் பங்கில்  காருக்கு டீசல் போட்டிருக்கிறார். அவரது காரில் சிலர் இருந்ததும் சி.சி.டி.வியில் பதிவாகியிருக்கிறது. பின்பு அங்கிருந்து 2-3 கி.மீ. தொலைவு வரை சென்றவர் வலது புறம் திரும்பி அணைக்கரை போயிருக்கிறார்.

அங்கிருந்து உறுமன்குளம் சென்று தொடர்ந்து பெட்டைகுளம் சென்றவர், நவ்வலடி அருகிலுள்ள குட்டம் போயிருக்கிறார். இந்தக் குட்டம் ஜெயக்குமார் வசிக்கும் கரைச்சுத்து புதூரிலிருந்து ஐந்தே கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. பின் அங்கிருந்து தோப்புவிளை சென்ற போது இரவு 9 மணிக்கு மேலாகியிருக்கிறது. அதன்பின் திசையன்விளையிலுள்ள சூப்பர் மார்க்கெட்டிற்குப் போயிருக்கிறார் ஜெயக்குமார். ஐந்து மணிக்கு மேல்  45 கி.மீ தொலைவு காரில் சென்றவர்கள் யார்? என்பதையும் விசாரணையை செய்த தனிப்படை ஜெயக்குமார் சென்றது வழியோரத்திலுள்ள வீடுகள் பள்ளிகள் மற்றும் சர்ச்களிலுள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிக்களையும் கைப்பற்றியுள்ளனர்.


ஜெயக்குமார் இரவு 10.30 மணிக்கு மேல் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து ஊர் திரும்பிய போது தான் சம்பவமே நடந்துள்ளது. ஜெயக்குமார் வெளியே செல்கிற போது சிலவேளைகளில் வீடு திரும்பாமல் போகிற இடங்களிலுள்ள வீடுகளில் தங்குவதுண்டாம். பெண் சகவாசமிருக்கலாம் என்ற கோணத்திலும் ஒருவர் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாராம்.


ஜெயக்குமாருக்கு வரவேண்டியதை விட கொடுக்க வேண்டிய கடன் அதிகமிருக்கிறதாம் அந்த நெருக்கடிகளுடன் யாரோ ஒருவர், தொகுதி சீட் பெறுவதற்காக ஒரு கோடி அளவு மதிப்புள்ள தொகையை ஜெயக்குமாரிடம் கொடுத்திருக்கிறராம். ஆனால் அவரால் சீட் வாங்க முடியாமல் போனதால் அதற்கான தொகையை அவர் திரும்பக் கேட்க கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி. அது போக பிற கடன் நெருக்கடிகளும் சேர, மன உளைச்சல், கடன் நெருக்கடிகளால் திணறியிருக்கிறார் ஜெயக்குமார் என்கிறார் ஒரு ஏரியா வாசி. இந்தச் சூழலில் தான் எரிந்த நிலையில் ஜெயக்குமாரின் அடையாளம் தெரியாத உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. உடலினருகே கிடந்த ஜெயக்குமாரின் வாக்காளர் அடையாள அட்டை, கிரெடிட் கார்டுகளைக் கொண்டு தான் கொல்லப்பட்டவர் ஜெயக்குமார் என காவல்துறை சொன்னாலும், அதனை அவர்கள் உறுதிப்படுத்தவில்லை.


மீளமுடியாத நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் தனக்கு வரவேண்டிய தொகைகளைக் கேட்டால் மிரட்டல்கள் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று இப்படி ஒரு மரண வாக்கு மூலக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு (நடந்ததைப் போன்று) தற்கொலையோ அல்லது கொலை செய்யப்பட்டதாகவோ நம்பக்கூடிய வகையில் இப்படி ஒரு எரிப்பு சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம். அதற்காக வேறு ஒருவரின் பாடியைப் பயன்படுத்தியிருக்கலாம். அதற்காக வேறு எங்கும் அலைய வேண்டியதில்லை. திசையன்விளையின் பக்கமுள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஏரியாவில் மனநலம் குன்றியவர்கள் சிலரின் நடமாட்டம் உண்டு. சில வேளைகளில் அனாதைப் பிணமும் கிடப்பதுண்டு. சம்பவத்திற்காக இந்த வகையில் ஒரு பாடியை செட் செய்து கொண்டு வந்து, ஜெயக்குமாரின் உடைகளை அணிவித்து, கல்லில் மேல் வைத்து வயர்களால் கட்டி அடையாளமே தெரியாத வகையில் எரித்திருக்கலாம்.


அது ஜெயக்குமாரின் உடல்தான் என்பதைப் பார்பவர்கள் அடையாளம் தெரிந்து கொள்வதற்காக உடலினருகில் ஜெயக்குமாரின் வாக்காளர் அடையாள அட்டை, கிரடிட் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளைப் போட்டிருக்கலாம் அப்படியான ஒரு சந்தேகமும் காவல்துறையினருக்கு உண்டு என்றும் சொல்லப்படுகிறது அந்தப் புலனாய்வு அதிகாரி, இப்படிச் செய்து உலகை நம்ப வைத்துவிட்டு வெளிநாடு போய்விட்டால் சிலகாலம் நிம்மதியாக இருக்கலாம் கடன் தொல்லையுமுிருக்காது என்ற திட்டத்தில் இப்படி ஒரு டிராமா நடத்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் இரகசியப் புலன் விசாரணை  போகிறதாம்.

அது போன்று ஒரு டிராமா நடந்திருந்தால் அதனை உறுதிப்படுத்துகிற வகையிலும் சில சந்தேகங்கள் ஆணித்தரமாகக் சந்தேகிக்கின்றனர். பொதுவாக கொலை சம்பவத்தை நிகழ்த்துகிற கிரிமினல்கள் பதற்றத்தில் எரிக்கும் போது அதை அப்படியே எரித்து முடித்து விடுவார்கள். அந்த உடலிலுள்ளவைகள் அது எந்தப் பொருளானாலும் எரிகிற தீயில் எரிந்து சாம்பலாகி விடுமேயொழிய இறந்த உடல் உடையிலுள்ளவைகளை உடலருகே போடமாட்டார்கள். அப்படிச் செய்தால் தாங்கள் மாட்டிக் கொள்ளலாம் என்கிற பயம் தான். இதுதான் கிரிமினாலஜி தத்துவம்.

ஆனால் ஜெயக்குமாரின் கருகிய உடல் கிடந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தில் உடலருகில் அடையாளம் காணக் கூடிய வகையில் வாக்காளர் அடையாள அட்டை கிரடிட் கார்ட் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் கிடந்துள்ளன. உடலோடு எரிந்து சாம்பலாக வேண்டிய இந்த அடையாள அட்டைகள் உடலுக்குப் பக்கத்தில் கிடக்க வேண்டிய அவசியமென்ன. இது யதேச்சையான நிகழ்வல்ல. இந்த உடல் இன்னார் தான் என நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகப் போடப்பட்ட அடையாள அட்டைகள் என்பது தான் அவர்கள் அசைக்க முடியாத சந்தேகம்.

அடுத்து, ஜெயக்குமார் அன்றைய தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற போது (சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்தபோது உள்ள படம்) காக்கி பேண்ட் உடன் வெள்ளை சட்டையை இன் பண்ணியிருந்தார். காலில் ஷூ இடுப்பில் பெல்ட் அணிந்திருந்தார். ஆனால் எரிந்து கிடந்த உடலின் காலில் ஷூ எரிந்த நிலையில் காணப்பட்டாலும், அவர் அணிந்திருந்த பெல்ட் முறுறிலும் எரிந்து அந்தப் பெல்ட்டின் மாட்டுகிற ஸ்டீலினான கிளிப் எரிய வாய்ப்பில்லை. நிச்சயம் சம்பவ இடத்தில் அது கிடந்திருக்கும். இரண்டு பிரிவு தடயவியல் துறையின் எக்ஸ்பர்ட்கள் சம்பவ இடத்தை ஆராய்ந்து பார்த்து அலசிய போது கூட இடுப்பு பெல்ட்டின் கிளிப் கிடைக்கவில்லை என்பது கனத்த சந்தேகம். இதனால் தான் கிடந்தது ஜெயக்குமாரின் உடலா. அல்லது போலி உடலா என்ற சந்தேகம் காவல்துறைக்குண்டு என்கிறார்கள்.

அதே வேளையில் ஜெயக்குமாரின் குடும்பத்தார்களும் அந்த உடல் ஜெயக்குமாரின் உடலா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதற்கு விடை காணும் பொருட்டே ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரினுக்கு மரபனுப் பரிசோதனையான டி.என்.ஏ. பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. புனே அனுப்பப்பட்டுள்ள சாம்பிள்களின் ஆய்வறிக்கையின் முடிவு வந்தால் தான் அசல் உடலா  அல்லது போலியான உடலா எனத் தெரிய வரும் புலனாய்வும் முடிவுக்கு வரும் என்கிறார்கள் புலனாய்வு அதிகாரி.

இதனிடையே திருநெல்வேலி வந்த தென்மண்டல ஐ.ஜி.யான கண்ணன் ஜெயக்குமார் எழுதிய கடிதங்கள், அவர் எழுதியது தானா? கையெழுத்து அவருடையது தானா? என்பது குறித்து தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ராமஜெயம் வழக்கினை எடுத்த மாத்திரத்திலேயே கொலை என அறியப்பட்டது. ஆனால் காங்கிரஸ். தலைவர் மரணத்தை அவ்வாறு கூற முடியாது. டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதின் முடிவு வரவேண்டியுள்ளது. வழக்கும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.

இதனிடையே பரப்பாடியிலுள்ள கம்பெனி ஒன்றில் அதிக அளவிலான தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். அங்கே தேர்தல் பரப்புரையின் போது அவர்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக கட்சியினர் வாகனத்தில் போயிருக்கிறார்கள். அதுசமயம் அங்கே ஜெயக்குமார் இருந்திருக்கிறார். வாகனத்தில் வந்தவர்களிடம் ஜெயக்குமாரைக் கைகாட்டி அவர் தான் மாவட்ட தலைவர் என்று காட்டப்பட்டதாம். அங்குள்ளவர்கள் மூலமாக இந்தத் தகவலும் தனிப்படைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிற டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் புயலையும் பூகம்பத்தையும் கிளப்பலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்