முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு பா ஜ க முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசைக்கு அமைச்சர் அமித்ஷா கண்டிப்பாகக் கூறிய அறிவுரை

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் பகிரங்கமாகவே  மோதல்;  பதவியேற்பு விழா மேடையில் கண்டித்த அமைச்சர் அமித்ஷா - டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அதிருப்தி.  இதில் உண்மை நிலை என்ன இதுவே பலரும் எழுப்பி வரும் வினா?

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பின் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், "நான் கட்சிக்காகக் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். மற்றும் நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் இங்கே தான் இருப்பேன். சிலர் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஏன் வந்தீர்கள் என்று கேட்கிறார்கள்; அதற்கு நானே கவலைப்படவில்லை உங்களுக்கு என்ன கவலை? நாங்கள் எல்லாம் இரண்டாம் இடம் வரக்கூடியவர்கள் அல்ல;



வியூகம் அமைத்து கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்திருந்தால் கூடுதலாக தொகுதிகள் பெற்றிருப்போம்" என்றார். அதையடுத்து நான் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் போது கட்சியில் குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது குற்றப்பின்னணி உள்ளவர்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.

இது பாரதிய ஜனதா கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்  முன்னாள் தலைமைக்கும், இன்னாள் தலைமைக்குமிடையே மோதல் போக்கு நிகழ்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிற நிலையில் டெல்லி சென்று விட்டு தமிழ்நாடு திரும்பிய தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை இனிமேல் பேட்டி எல்லாம் அலுவலகத்தில் தான் கொடுப்போம். விமான நிலையத்தில் பேட்டி கிடையாது. எல்லாவற்றையும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்து உங்களிடம் கூறுவார்கள் என விமான நிலைத்தில்  செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்ற நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஆந்திரப் பிரதேசத்தில் நடந்ததில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டபோது மேடையில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அமித்ஷாவுக்கு வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார்.


பதிலுக்குத் தமிழிசை சௌந்தரராஜன் எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் காணொலிக் காட்சி பரவியது.   இதுகுறித்து பல்வேறு அரசியல் விவாதம் நடந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜனைப் பொறுத்த அளவில் இது ஒரு மிகப் பெரிய அகில இந்திய விளம்பரம்! ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்வு கூட இந்த நிகழ்வு காரணமாக பின்னுக்கு தள்ளப்பட்டு, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனைப் பற்றியே அனைத்து ஊடகங்களும், பொது மக்களும் வித விதமாகப் பேசுகிறார்கள்!

பலரும் அவருக்காக உருகுகிறார்கள்! அவர் சார்ந்துள்ள சமூகத்தின் சார்பாக கரிக்கோல் ராஜ் உள்ளிட்ட பலர் நியாயம் கேட்கிறார்கள், அதில் சிலர் கொந்தளிக்கிறார்கள்! அவரது ஜாதிச் சங்கமோ போர்க்கொடி தூக்கி உள்ளது!

ஒரு அரசியல்வாதி என்ற வகையில் இவை அவருக்கு செலவில்லாமல் கிடைத்த விளம்பரங்கள் ஜாக்பாட்! 

அவர் கட்சி சார்ந்த ஒரு தலைவர் கூப்பிட்டு கோபமாகப் பேசும் போது கூட சிரித்துக் கொண்டே இருந்தது அது அரசியல் கலந்த சாமாரத்தியம், அது சமாளிக்கத்தக்க சமார்த்தியமாக வெளிப்பட்ட போது, அவருக்கு இன்னும் கோபம் கூடியது!  அவரது அதிதீவிரத்தை தமிழிசை அலட்சியப்படுத்தியது போல அவர் நினைத்ததாலேயே அவரது கோபம் இரட்டிப்பாகியதாகவே தெரிகிறது!

இந்தச் சம்பவம் பற்றி மற்றவர்கள் தான் அவருக்கு நேர்ந்த அவமானமாகநினைவு படுத்தி இருக்காங்க.. ஆனா.அவங்க  தனக்கு கிடைத்துள்ள அபரீத முக்கியத்துவத்தை ரசித்தபடி அமைதியாகவே இருக்காங்க!

ஆளுநர் பதவியில் கூட அவர்களுக்குப் பரிந்து பேசி சமூக ஊடகங்களில் பலரும் இப்படி கத்தி வீசி கிடைத்தது தான்! பாருங்க, என்னால தமிழ்நாட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு பெருகிப் போச்சு ..

டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் யார்? பாரதிய ஜனதா கட்சிக்காரர்.. அதனால் ஏராளமான பேர் இப்போது அந்தம்மாவுக்கு ஆதரவா மாறிக்கிட்டு இருக்காங்க..

ஐயோ, ஊர்கூடி கும்மிகிட்டு இருக்காங்கன்றத இவர் கிட்ட எப்படி புரிய வெக்கிறது?என்ன நடந்தது என்று யாமறியேன்... ஆனால் அமைச்சர் அமித்ஷாவின் உடல் மொழி  "தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை!" என்று எச்சரிக்கை விடுப்பது போலவே இருக்குது. 

இதுக்கு மேலே டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு யாரும் புரிய வைக்க முடியாது. 

என்னதான் உட்கட்சிப் பிரச்சினை என்றாலும் இப்படி ஒரு விழா பொது மேடையில் ஒரு முன்னாள் ஆளுநரை எச்சரிக்கை செய்வது ஏற்புடையதல்லவே.

இவ்வளவு நடந்த பிறகும் தமிழிசை சௌந்தரராஜன் அரசியலில் இருக்க நினைப்பதில் அர்த்தமில்லை எனச் சிலர் கருதுகின்றனர். தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் யாரும் இனி தேவையில்லாமல் பிரஸ்மீட் செய்யறேன்னு மைக் பிடித்து பேசுவதற்கு... சாரி அல்லது உளறுவதற்கு டில்லி தடா போட்டது இன்னும் எந்த ஊடகமும் வெளியிடவில்லை தான்.

திட்டுன்னா திட்டு...‌ உங்க வீட்டு திட்டோ எங்க வீட்டுத் திட்டோ இல்ல... வண்டி வண்டியா வாங்கி கட்டிட்டாங்க... எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் சவுக்கடி கொடுத்த மாதிரி. இப்படி பேசுற பலர் 

இதெல்லாம் இங்க இருக்கும் பலருக்குத் தெரியாது. அதைச் சொன்னாலும் புரியாது.

அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அவமானங்களையே அதிர்ஷ்டமாக்கி கொள்ளும் வல்லமை கொண்டவர்களே! அதிகம் அடுத்தகட்ட நகர்வுக்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் போய்க்கிட்டு இருக்காங்க. என்பதே அவரது x பக்கம் பதிவு உணர்த்தும் செய்தியாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு