அருணாச்சலப் பிரதேச முதல்வராக பெமா காண்டு, 17 ஜூலை 2016 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வருகிறார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் முதல்வராக இன்று பெமா காண்டு பதவியேற்றார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் முதல்வராகிறார். அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ பி நட்டா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் பங்கேற்றனர்.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 46 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்ததில் 10 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றது. போட்டியின்றி வெற்றி பெற்ற வேட்பாளர்களில் முதல்வர் பெமா காண்டும் ஒருவராவார் . பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சரவையில் பெண் ஒருவருக்கு
வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் ஜூன் 2-ஆம் தேதி வெளியானதில் தேசிய மக்கள் கட்சி (என்பிஇபி) 5, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 3, அருணாச்சல் பிரதேச மக்கள் கட்சி (பிபிஏ) 2, காங்கிரஸ் கட்சி 1 இடங்களிலும் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பேமா கண்டுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பேமா கண்டுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
பதவியேற்றுள்ள மற்ற அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளவர், மேலும் கூடுதலான வேகத்தில் வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யும் அவர்களின் எதிர்கால நல்வாய்ப்புக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றுள்ள பேமா கண்டு அவர்களுக்கு வாழ்த்துகள். அமைச்சர்களாக பதவியேற்றுள்ள அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் சேவையில் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது நல்வாழ்த்துகள். மேலும் கூடுதல் வேகத்துடன் மாநில வளர்ச்சியை இந்த அணி உறுதி செய்யும்.”
கருத்துகள்