இன்டியா கூட்டணிக் கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து,
உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி. மக்களின் தீர்ப்பை வரவேற்கிறேன். தேர்தல் முடிவு பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய அடி. பாரதிய ஜனதா கட்சியின் மக்கள் விரோதப் போக்கைத் தொடர்ந்து இணைந்து கடுமையாக எதிர்ப்போம்.
அவர்களின் பாசிச அரசியலை எதிர்த்து இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும். மக்களின் விருப்பத்தை இந்தியா கூட்டணி பூர்த்தி செய்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடர்ந்து பாடுபடுவோம். பாரதிய ஜனதா கட்சியின் வெறுப்பு மற்றும் ஊழல் அரசியலுக்கு மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் பதிலளித்து உள்ளனர். மக்களின் விருப்பத்திற்கேற்ப தேவையான நேரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கார்கே தெரிவித்தார் ர். அதற்கு பிறகு டில்லி விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார். மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் , தமிழ்நாடு, ஆந்திரா இடையே தென்மாநிலங்களுக்கான உரிமைகளை பாதுகாப்பார் என நம்புகிறேன்” என ‛‛ எக்ஸ்'' தளத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்