முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிராம் நத்தம் நிலங்கள், ரயத்துவாரி, சர்க்கார் என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, சட்ட ரீதியாகச் செல்லுமா சட்ட வல்லுநர்கள் கருத்து

குடியிருப்பு பயன்பாட்டுக்காக, மக்கள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் ரயத்துவாரி கிராம் நத்தம் நிலங்கள், ரயத்துவாரி, சர்க்கார் என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, சட்ட ரீதியாகச் செல்லாது என்பதால், அதை இரத்து செய்ய வேண்டும்


என மூத்த சட்ட வல்லுனர்கள், மற்றும் சமூக சித்தாந்த அறிஞர்கள் வலியுறுத்தல்.

தமிழ் நாட்டில் ஒவ்வொரு கிராமத்திலும் நஞ்சை மற்றும் புஞ்சை நிலம் தவிர மானாவாரி மற்றும் தரிசு நிலங்கள் உள்ளன அதில் பல நூற்றாண்டுகளாக மேடான பகுதிகள் குடியிருப்பு பயன்பாட்டுக்காக மன்னர்கள் காலத்திலேயே ஒதுக்கப்பட்டன.



இவ்வாறு ஒதுக்கப்படும் நிலங்கள் கிராம நத்தம் என்று 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் குறிப்பிடப்பட்டு வந்ததன் அடிப்படையிலேயே, வருவாய் துறையும் பல்வேறு வகையான ஆவணங்களைப் பராமரித்து வந்தது. இதில் குடியிருப்பு தவிர்த்து வேறு பயன்பாட்டுக்கு செல்லக்கூடாது என்பதற்காக, இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் அதில் மூலப் பத்திரகள் பதிவானது இருக்கும். அதுவே டைட்டிலை உறுதிப்படுத்துவதாக அமையும்,



ஆனால், காலப்போக்கில் கட்டுமானத் திட்டங்களை நகர் ஊரமைப்புத் துறை அனுமதி, பத்திரப்பதிவு, மற்றும் வங்கிக்கடன் போன்ற நிகழ்வுகளில், வருவாய் வரி செலுத்தும் நிகழ்வு ஆவணமாக பட்டா தேவைப்படுகிறது. இந்தத் தேவையை கருத்தில் கொண்டு, கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்கு நத்தம் நிலவரித் திட்டம் எனப் பெயர் 



கடந்த, 1984 மற்றும் 85 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுதுமுள்ள கிராம ரயத்துவாரி நத்தம் புறம்போக்கு மற்றும் அரசு புறம்போக்கு நத்தம் மற்றும் பொதுவான பயன்பாடு நிலங்கள் குறித்த விரிவான உதவி நிலவரித்திட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பகுதி வாரியாக கணக்கெடுப்பும் நடத்தப்பட்டதில், தனியார் வசம் உள்ள ரயத்துவாரி நிலங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டதுடன், அவற்றின் எல்லைகளும் வரையறுக்கப்பட்டன.  அதில் விடுபட்டு பின்னர் முறையீடுகள் இன்று வரை நீடித்தது நடைபெறுகிறது அதன் அடிப்படையில் தான், கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  அதவே UDR ஸ்கீம் எனப்படும் தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில், நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை.


ஒவ்வொரு மாவட்டத்திலும், 1,000 த்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையிலேயே உள்ள நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மத்திய நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை, 2023 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதியில் அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது.

அதில், தனியார் பெயரில் ரயத்துவாரி பட்டா உள்ள கிராம நத்தம் நிலங்கள் இனி ரயத்துவாரி என்றும், பட்டா வழங்கப்படாமல் உள்ள அனைத்து நத்தம் நிலங்களும் சர்க்கார் நிலம் என்றும் வகைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துடன், பட்டா இல்லாத கிராம நத்தம் நிலங்கள் தொடர்பான பரிவர்த்தனைகள், பட்டா வழங்கும் பணிகளை நிறுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய்த் துறையின் இந்த நடவடிக்கை, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



கிராம நத்தம் நிலங்கள் குறித்த அடிப்படை தெரியாமல், அதைப் பெயர் மாற்றம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக ரீதியாக இதற்குச் சில காரணங்கள் இருக்கலாம்.

ஆனால், இதை நடைமுறை ரீதியாகப் பார்த்தால், இதில் பல்வேறு பிரச்னைகள் எழும்.



தமிழ்நாடு முழுவதும், தனியார் வீடு கட்டி வசிக்கும் அனைத்து நிலங்களுக்கும், பட்டா வழங்கும் பணிகள் முழுமை அடையாத நிலையில், இந்த முடிவு பல்வேறு சிக்கல்களைத் தான் ஏற்படுத்தும்.

கிராம நத்தம் நிலங்களில், 40 50 ஆண்டுகளாக வசிப்பவர்கள் பட்டா பெற விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது, பட்டா இல்லாத நத்தம் நிலங்கள் சர்க்கார் நிலம் என்பது எந்த வகையிலும் நியாயமாகாது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் நீதிமன்றத்தை அணுகினால், நிச்சயம் இந்த குறிப்பிட்ட அரசாணை ரத்தாகிவிடும். காரணம் தற்போது நிலங்கள் அனைத்தும் மன்னர் ஆட்சிக்குட்பட்ட காலம் தொட்டு சுதந்திரம் பெற்ற பின்னர் பல சமஸ்தானத்தின் இணைப்பு நடந்த பிறகு தான் நிலம் அ பதிவேடு 13 பப்ளிக்கேஷன் செய்து அரசாங்கம் அரசாணைகள் 19 பி நோட்டிபிகேசஷன் செய்து வெளியிடப்பட்டது முன்பக்கம் அது பதிவில் இருக்கும் அதுவே செட்டில்மென்ட் அதை மாற்றி மாற்றம் செய்வது சட்ட விதிகளைத்  திருத்துவது போலாகிவிடும்.

நத்தம் நிலங்கள் விஷயத்தில் பட்டா வழங்கபடாத நிலங்கள் குறித்த தெளிவான முடிவை எடுக்காமல், இப்படிப் பெயர் மாற்றம் செய்வது எதிர்காலத்தில் பொதுவான பாதை உள்ளிட்ட புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும். பாரம்பரியமாக மக்கள் குடியிருக்கும் ரயத்துவாரி நிலங்கள் பறிபோகும் சூழல் ஏற்படும்.

எனவே, சட்ட ரீதியாக இதில் காணப்படும் பிரச்னைகளை உணர்ந்து, இந்த முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். ஒவ்வொரு நிலத்துக்கும் என்ன வகைபாடு என்பது, பல்வேறு காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஆய்வுகள் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. இந்த வழியில் தான், குடியிருப்புப் பயன்பாட்டுக்காக மட்டும் என ஒதுக்கப்பட்ட நிலங்கள், கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்டன. முழுமையாக தனியாரின் ஏகபோகத்தில் இருந்து வரும் இந்த நிலங்களுக்கு பட்டா வழங்காததற்கு காரணங்கள் பல உள்ளன.

நடைமுறையில் குறிப்பிட்ட சில பணிகளில் பிரச்சனை ஏற்படுகிறது என்பதற்காக தான், இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல் கிராம நத்தம் நிலங்களை ரயத்துவாரி மற்றும் சர்க்கார் என பெயர் மாற்றம் செய்வது முற்றிலும் தவறு. ஏற்கனவே, அனாதீனம் என்பது உரிமையாளர் இருந்து அதை கண்டு அறியப்படாத அனாதை நிலங்கள் தான் அனாதீனம் அது தனியாரால் அபகரிக்கப்பட்டும் வருகின்றன.

வருவாய் துறையின் இந்த நடவடிக்கையால், கிராம நத்தம் நிலங்கள் உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டிலிருந்து, தமிழ்நாடு அரசின் வழியாக வேறு நபர்களுக்குச் செல்லும் ஆபத்தும் உள்ளது. எனவே, இந்த முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.தமிழ்நாடு  முழுதும் பல்வேறு பகுதிகளில் கிராம நத்தம் நிலங்களில் வசிப்போர், அதில் குறிப்பிட்ட பகுதியை கோவில், சாலைகள் மயானம் போன்ற பொது பயன்பாட்டுக்கு அளித்துள்ளனர்.

பெரும்பாலான கிராமங்களில், உள்ளூர் மக்கள் மற்றும் மன்னர்கள் அளித்த நத்தம் நிலங்களில் தான் கோவில்கள், தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.இவை பொது பயன்பாடு என்ற அடிப்படையில் தான் பராமரிக்கப்படுகின்றன. தற்போது, இந்த நிலங்களை சர்க்கார் நிலம் என்று, அரசு உரிமை கொண்டாடுவது புதிய சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தும்.

கிராம வாரியாக நத்தம் நிலங்களின் பயன்பாடு மாறுகிறது. பல்வேறு பகுதிகளில் அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு, உள்ளூர் மக்கள் வழங்கிய நத்தம் நிலங்கள் தொடர்ந்து பொதுப் பயன்பாட்டில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

எனவே, இது தொடர்பாக வெளிவந்த அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே பல்வேறு தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது,  அது மறுக்க்கப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு வரும் போது தானாகவே அரசாணை ரத்தாகிவிடும் சூழல் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு