ஆந்திரப் பிரதேசம் மாநிலம் கன்னாவரம் பகுதியில்
முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றதில் நான்காவது முறையாக ஆந்திரப் பிரதேச முதல்வராக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்த், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ பி நட்டா,
உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் ஆளுநரும் பாஜக பிரமுகருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம் சரண்,ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற பின் கூட்டணிக் கட்சியான ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகர் சிரஞ்சீவி சகோதரருமான பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசம் மாநில அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். மேலும் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷும் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற திரு. என். சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"புதிய ஆந்திர அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். முதலமைச்சரான திரு. என். சந்திரபாபு நாயுடுவுக்கும், அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். தெலுங்கு தேசம், ஜனசேனா, பிஜேபி அரசு ஆந்திராவின் பெருமையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும், மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியில்புதுச்சேரி ஆளுனர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், 'அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் அதிக இடங்களில் வென்றிருக்கலாம்.
நாங்கள் ஒரு வியூகம் அமைத்திருந்தோம். கூட்டணி வைக்காததால் மோசம் போய் விட மாட்டோம். ஆனால், மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எங்கள் வியூகத்தில் விருப்பமில்லை' என அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.
ஒரே கட்சியைச் சேர்ந்த இரு மாநில முகம் கொண்ட தலைவர்கள் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டதால் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட விழாவில் மேடையில் இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, வணக்கம் கூறினார். உடனே தமிழிசையை அருகில் அழைத்த உள்துறையின் அமைச்சர் அமித்ஷா, அவரிடம் ஏதோ பேசினார். இந்த காணொலிக் காட்சி இணையத்தில் வைரலாகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பாரதிய ஜனதா கட்சியில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக டாக்டர் தமிழிசையை அமைச்சர் அமித்ஷா கண்டித்ததாக சிலர் கருத்தும் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்