முன்னாள் பாரதப் பிரதமர் திரு பி வி நரசிம்மராவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்மராவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
திரு பி வி நரசிம்மராவ், அவரது தலைமைப் பண்பு & அறிவாற்றலுக்காக என்றும் நினைவுகூரப்படுவதுடன், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த ஆண்டின் முற்பகுதியில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது எங்களது அரசுக்கு கிடைத்த கௌரவம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது
“முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்மராவ் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
அவரது தலைமைப் பண்பு & அறிவாற்றலுக்காக என்றும் நினைவுகூரப்படுவதுடன், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த ஆண்டின் முற்பகுதியில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது எங்களது அரசுக்கு கிடைத்த கௌரவம்”. எனக் கூறியுள்ளார் P.V. நரசிம்ம ராவ் - முன்னாள் பாரதப் பிரதம மந்திரி.
ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் வெவ்வேறு பதவிகளை வகித்த நரசிம்ம ராவ் அவர்கள் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மே மாதம் 1991ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று நரசிம்ம ராவ் அவர்கள் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றார். தனது நிதி மந்திரியாக முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் மன்மோகன் சிங் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
அதுவரை காங்கிரஸ் கட்சியின் ஜவகர்லால் நேரு காலத்திய சோஷலிச தத்துவத்தைப் புறந்தள்ளி இந்தியப் பொருளாதாரத்தை உலக முதலீட்டாளருக்குத் திறந்து விட்டார் பாசிச வழியில். இந்தியப் பொருளாதாரம் இந்த அளவிற்கு பிரமாண்டமாக வளர்ந்து நிற்பதற்கு அடித்தளமிட்டது ஜவகர்லால் நேரு குடும்பத்திலிருந்தில்லாமல் வெளியிலிருந்து பிரதமரான பி வி நரசிம்ம ராவ் என்றால் அது மிகையில்லை. இந்தியப் பொருளாதாரத்தை அரசு உயர் அதிகாரிகளின் அசுரத்தனமான சிவப்பு நாடா கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்தது மிகப் பெரிய விஷயம்.
இந்தியா 1990 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில் மிக மோசமான நிலையை எட்டியிருந்தது. சோவியத் யூனியன் பலவாறு சிதறியது போன்ற சர்வதேச அரசியல் போக்குகளின் தாக்கம் ஆகியவற்றால், மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்த இந்தியப் பொருளாதாரம், கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்குச் சென்றது, தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இருக்கும் நிலை.
அப்பொழுதெல்லாம் எந்த அளவிற்கு அன்னிய செலவாணியின் தேவையிருந்தது என்றால், அரசு ஊழியர்களுக்கு ஐந்து வருடங்கள் சம்பளமில்லாத விடுமுறை அளித்து வெளிநாடுகளில் வேலை செய்ய அனுமதிப்பது முதற் கொண்ட நடைமுறைகள் இருந்தது. அந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது.
சிரிக்காத பிரதமர் என்று பெயர் எடுத்திருந்தாலும் மற்ற விஷயங்களில் தனது முத்திரையைப் பதித்தார் என்பதும் இந்தியாவின் முதலாளித்துவ பொருளாதார வலிமைக்கு அடித்தளமிட்ட பெருமையும் இவரையே சாரும். முதன்முதலாக காங்கிரஸ் வரலாற்றில் நேரு குடும்பத்திலிருந்து இல்லாமல் வெளியார் ஒருவர் பிரதம மந்திரியாக ஆனது லால் பகதூர் சாஸ்திரிக்குப் பின் இவர் தான்.
அவர் பதவியேற்ற போது இந்தியாவின் அன்னியச் செலவாணி கையிருப்பு 9.2 பில்லியன் டாலர்களிலிருந்து தற்போதைய அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் அன்னியச் செலவாணி 648 பில்லியன் டாலர்கள். இது சொல்லும் செய்தி அவரது ஆட்சி காலத்தில் எவ்வளவு கடுமையான அன்னியச் செலவாணி நிதி நிலமையை கையாள வேண்டியிருந்திருக்கும் என்பது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இவரது சேவையை சரியாக புரிந்து கொண்டு பாரத் ரத்னா அளித்து கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே பாரத் ரத்னாவிற்கு தகுதியானவர் இவர். இவருக்கு காங்கிரஸ் ஆட்சியிலேயே பாரத் ரத்னா கொடுப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில்.
அவரது பிறந்த நாளில் இந்தச் சிறப்பு காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ஒருவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கௌரவம் பெறுவதில் இருந்தது நாம் தெரிந்து கொள்ளும் பொது நீதி இதுவே.
கருத்துகள்