முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் பாரதப் பிரதமர் திரு பி வி நரசிம்மராவுக்கு பிரதமர் மரியாதை

முன்னாள் பாரதப் பிரதமர் திரு பி வி நரசிம்மராவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


முன்னாள் பிரதமர் திரு பி வி  நரசிம்மராவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

திரு பி வி நரசிம்மராவ், அவரது தலைமைப் பண்பு & அறிவாற்றலுக்காக என்றும் நினைவுகூரப்படுவதுடன், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த ஆண்டின் முற்பகுதியில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது எங்களது அரசுக்கு கிடைத்த கௌரவம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது

“முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்மராவ் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.


அவரது தலைமைப் பண்பு & அறிவாற்றலுக்காக என்றும் நினைவுகூரப்படுவதுடன், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த ஆண்டின் முற்பகுதியில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது எங்களது அரசுக்கு கிடைத்த கௌரவம்”.  எனக் கூறியுள்ளார்         P.V. நரசிம்ம ராவ் - முன்னாள் பாரதப் பிரதம மந்திரி.


ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் வெவ்வேறு பதவிகளை வகித்த நரசிம்ம ராவ் அவர்கள் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மே மாதம் 1991ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில்  பெரும்பான்மை பெற்று நரசிம்ம ராவ் அவர்கள் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றார். தனது நிதி மந்திரியாக முன்னாள்  ரிசர்வ் வங்கியின் ஆளுனர் மன்மோகன் சிங் அவர்களைத் தேர்ந்தெடுத்தார். 

அதுவரை காங்கிரஸ் கட்சியின் ஜவகர்லால் நேரு காலத்திய சோஷலிச தத்துவத்தைப் புறந்தள்ளி இந்தியப் பொருளாதாரத்தை உலக முதலீட்டாளருக்குத் திறந்து விட்டார் பாசிச வழியில். இந்தியப் பொருளாதாரம் இந்த அளவிற்கு பிரமாண்டமாக வளர்ந்து நிற்பதற்கு அடித்தளமிட்டது ஜவகர்லால் நேரு குடும்பத்திலிருந்தில்லாமல் வெளியிலிருந்து பிரதமரான பி வி நரசிம்ம ராவ் என்றால் அது மிகையில்லை. இந்தியப் பொருளாதாரத்தை அரசு உயர் அதிகாரிகளின் அசுரத்தனமான சிவப்பு நாடா கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்தது மிகப் பெரிய விஷயம். 

இந்தியா 1990 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில்  மிக மோசமான நிலையை எட்டியிருந்தது. சோவியத் யூனியன் பலவாறு சிதறியது போன்ற சர்வதேச அரசியல் போக்குகளின் தாக்கம் ஆகியவற்றால், மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்த இந்தியப் பொருளாதாரம், கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்குச் சென்றது, தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில்  இருக்கும் நிலை.

அப்பொழுதெல்லாம் எந்த அளவிற்கு அன்னிய செலவாணியின் தேவையிருந்தது என்றால், அரசு ஊழியர்களுக்கு  ஐந்து வருடங்கள் சம்பளமில்லாத விடுமுறை அளித்து வெளிநாடுகளில் வேலை செய்ய அனுமதிப்பது முதற் கொண்ட நடைமுறைகள் இருந்தது. அந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது.  

சிரிக்காத பிரதமர் என்று பெயர் எடுத்திருந்தாலும் மற்ற விஷயங்களில் தனது முத்திரையைப் பதித்தார் என்பதும் இந்தியாவின் முதலாளித்துவ பொருளாதார வலிமைக்கு அடித்தளமிட்ட பெருமையும் இவரையே சாரும். முதன்முதலாக காங்கிரஸ் வரலாற்றில் நேரு குடும்பத்திலிருந்து இல்லாமல் வெளியார் ஒருவர் பிரதம மந்திரியாக ஆனது லால் பகதூர் சாஸ்திரிக்குப் பின் இவர் தான்.   

அவர் பதவியேற்ற போது இந்தியாவின் அன்னியச் செலவாணி கையிருப்பு 9.2 பில்லியன் டாலர்களிலிருந்து தற்போதைய அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் அன்னியச் செலவாணி 648 பில்லியன் டாலர்கள். இது சொல்லும் செய்தி ‌அவரது ஆட்சி காலத்தில் எவ்வளவு கடுமையான அன்னியச் செலவாணி நிதி நிலமையை கையாள வேண்டியிருந்திருக்கும் என்பது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இவரது சேவையை சரியாக புரிந்து கொண்டு பாரத் ரத்னா அளித்து கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே பாரத் ரத்னாவிற்கு தகுதியானவர் இவர். இவருக்கு காங்கிரஸ் ஆட்சியிலேயே பாரத் ரத்னா கொடுப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில்.

அவரது பிறந்த நாளில் இந்தச் சிறப்பு காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ஒருவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கௌரவம் பெறுவதில் இருந்தது நாம் தெரிந்து கொள்ளும் பொது நீதி இதுவே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு