முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்னாள் பாரதப் பிரதமர் திரு பி வி நரசிம்மராவுக்கு பிரதமர் மரியாதை

முன்னாள் பாரதப் பிரதமர் திரு பி வி நரசிம்மராவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்


முன்னாள் பிரதமர் திரு பி வி  நரசிம்மராவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

திரு பி வி நரசிம்மராவ், அவரது தலைமைப் பண்பு & அறிவாற்றலுக்காக என்றும் நினைவுகூரப்படுவதுடன், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த ஆண்டின் முற்பகுதியில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது எங்களது அரசுக்கு கிடைத்த கௌரவம் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது

“முன்னாள் பிரதமர் திரு பி வி நரசிம்மராவ் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.


அவரது தலைமைப் பண்பு & அறிவாற்றலுக்காக என்றும் நினைவுகூரப்படுவதுடன், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த ஆண்டின் முற்பகுதியில் அவருக்கு பாரதரத்னா விருது வழங்கியது எங்களது அரசுக்கு கிடைத்த கௌரவம்”.  எனக் கூறியுள்ளார்         P.V. நரசிம்ம ராவ் - முன்னாள் பாரதப் பிரதம மந்திரி.


ராஜிவ் காந்தியின் அமைச்சரவையில் வெவ்வேறு பதவிகளை வகித்த நரசிம்ம ராவ் அவர்கள் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மே மாதம் 1991ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில்  பெரும்பான்மை பெற்று நரசிம்ம ராவ் அவர்கள் பிரதம மந்திரியாக பொறுப்பேற்றார். தனது நிதி மந்திரியாக முன்னாள்  ரிசர்வ் வங்கியின் ஆளுனர் மன்மோகன் சிங் அவர்களைத் தேர்ந்தெடுத்தார். 

அதுவரை காங்கிரஸ் கட்சியின் ஜவகர்லால் நேரு காலத்திய சோஷலிச தத்துவத்தைப் புறந்தள்ளி இந்தியப் பொருளாதாரத்தை உலக முதலீட்டாளருக்குத் திறந்து விட்டார் பாசிச வழியில். இந்தியப் பொருளாதாரம் இந்த அளவிற்கு பிரமாண்டமாக வளர்ந்து நிற்பதற்கு அடித்தளமிட்டது ஜவகர்லால் நேரு குடும்பத்திலிருந்தில்லாமல் வெளியிலிருந்து பிரதமரான பி வி நரசிம்ம ராவ் என்றால் அது மிகையில்லை. இந்தியப் பொருளாதாரத்தை அரசு உயர் அதிகாரிகளின் அசுரத்தனமான சிவப்பு நாடா கட்டுப்பாடுகளிலிருந்து விடுவித்தது மிகப் பெரிய விஷயம். 

இந்தியா 1990 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் பொருளாதாரத்தில்  மிக மோசமான நிலையை எட்டியிருந்தது. சோவியத் யூனியன் பலவாறு சிதறியது போன்ற சர்வதேச அரசியல் போக்குகளின் தாக்கம் ஆகியவற்றால், மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்த இந்தியப் பொருளாதாரம், கிட்டத்தட்ட திவாலாகும் நிலைக்குச் சென்றது, தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில்  இருக்கும் நிலை.

அப்பொழுதெல்லாம் எந்த அளவிற்கு அன்னிய செலவாணியின் தேவையிருந்தது என்றால், அரசு ஊழியர்களுக்கு  ஐந்து வருடங்கள் சம்பளமில்லாத விடுமுறை அளித்து வெளிநாடுகளில் வேலை செய்ய அனுமதிப்பது முதற் கொண்ட நடைமுறைகள் இருந்தது. அந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது.  

சிரிக்காத பிரதமர் என்று பெயர் எடுத்திருந்தாலும் மற்ற விஷயங்களில் தனது முத்திரையைப் பதித்தார் என்பதும் இந்தியாவின் முதலாளித்துவ பொருளாதார வலிமைக்கு அடித்தளமிட்ட பெருமையும் இவரையே சாரும். முதன்முதலாக காங்கிரஸ் வரலாற்றில் நேரு குடும்பத்திலிருந்து இல்லாமல் வெளியார் ஒருவர் பிரதம மந்திரியாக ஆனது லால் பகதூர் சாஸ்திரிக்குப் பின் இவர் தான்.   

அவர் பதவியேற்ற போது இந்தியாவின் அன்னியச் செலவாணி கையிருப்பு 9.2 பில்லியன் டாலர்களிலிருந்து தற்போதைய அதாவது 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் அன்னியச் செலவாணி 648 பில்லியன் டாலர்கள். இது சொல்லும் செய்தி ‌அவரது ஆட்சி காலத்தில் எவ்வளவு கடுமையான அன்னியச் செலவாணி நிதி நிலமையை கையாள வேண்டியிருந்திருக்கும் என்பது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இவரது சேவையை சரியாக புரிந்து கொண்டு பாரத் ரத்னா அளித்து கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. உண்மையிலேயே பாரத் ரத்னாவிற்கு தகுதியானவர் இவர். இவருக்கு காங்கிரஸ் ஆட்சியிலேயே பாரத் ரத்னா கொடுப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில்.

அவரது பிறந்த நாளில் இந்தச் சிறப்பு காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ஒருவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கௌரவம் பெறுவதில் இருந்தது நாம் தெரிந்து கொள்ளும் பொது நீதி இதுவே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...