முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லைகாவின் கோரிக்கையை ஏற்று இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

லைகாவின் கோரிக்கையை ஏற்று இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி. இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. 



அதன்படி இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு நாளான நாளை ஜூலை மாதம் 12 ஆம் தேதி ஒரு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமென்றும், காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி, இரவு 2 மணிக்குள் இறுதிக்காட்சி நிறைவடைய வேண்டுமென்றும், நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமென்றும் தமிழ்நாடு அரசு அரசாணை மூலம் தெரிவித்துள்ளது.ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது 


இந்தியன் 2 . கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினை, கொரோனா லாக் டவுன் என அடுத்தடுத்து சிக்கல்களில் மாட்டிக்கொண்ட இந்தியன் 2, ட்ராப் ஆகிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமலின் விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால், மீண்டும் இந்தியன் 2-க்கு உயிர் கொடுத்து இப்போது ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது. சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல இடங்களில் இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் ஓபனாகிவிட்டது.  



இந்த நிலையில் தான் இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், படக்குழுவினர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை இன்று ஜுலை மாதம் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஹெச்.எம்.எஸ் காலனி வர்மக்கலை, தற்காப்புக்கலை, ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், இந்தியன் முதலாம் பாகம் தயாரித்த போது நடிகர் கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டதற்காக தனது பெயரும் படத்தில் இடம்பெற்றது. இந்தியன் 2 திரைப்படத்தில் அதே வர்மகலை முத்திரையை தனது அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். ஆகவே இந்தியன் 2 படத்தை திரையரங்குகள், ஓடிடி தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என ராஜேந்திரன் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வமகேஸ்வரி முன் விசாரணைக்கு வந்தது. கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், இயக்குநர் சங்கர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜரானார். வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் 1993, 1994 ஆகிய ஆண்டுகளில் எழுதியுள்ள 2 புத்தகத்தில் வர்மக்கலை குறித்தும், முத்திரை குறித்தும் நுணுக்கமாக கூறப்பட்டு உள்ளது. புத்தக தகவல்களை மையமாக வைத்து ஆலோசனை செய்து தான் இந்தியன் முதல் பாகம் எடுக்கப்பட்டது. 

ஆனால், இந்தியன் 2-ல் எங்களை ஆலோசிக்காமல் வர்மகலை முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, புத்தகங்களைத் தழுவியே இந்தியன் படம் உருவாக்கப்பட்டது, இந்தியன் 2 பட டைட்டில் கார்டில் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் பெயரை பதிவு செய்ய வேண்டும் என கேட்கிறோம் என ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பிரபு வாதாடினார். ஆகவே இது ஒரு தவறான வழக்கு, ஜுலை 11 ஆம் தேதி இயக்குநர் சங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும். வர்மகலை என்பது உலக அளவிலுள்ள ஒரு கலையாகும், அதனை கண்டுபிடித்தது சித்தர் அகஸ்தியர். இந்தியன் 2 படத்தில் வர்மகலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்துத்தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் படத்திற்கும் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரனுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என இயக்குனர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் சாய் குமரன் வாதாடினார்,   


  இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வ மகேஸ்வரி, படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்துள்ளார். அதன் படி அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை மாதம் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்தியன் 2 திரைப்படம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த விசாரணை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவத்தை தொடங்கி தமிழில் 2014-ஆம் ஆண்டு கத்தி திரைப்படத்தை இவர் தயாரித்தார். படத்தின் ரிலீஸுக்கு முன்பே கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப, அதையும் கடந்து வெளியான இத்திரைப்படம் வசூலில் ஹிட் அடித்ததுடன் பெருவாரியான பாராட்டுக்களையும் குவித்தது. இதை தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, இப்படை வெல்லும், எமன், தியா என சிறுபட்ஜட் படங்கள் ஒருப்பக்கம், கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், வட சென்னை, காப்பான் என டாப் நடிகர்களின் படங்கள் இன்னொரு பக்கம் என பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளது லைகா ப்ரொடக்‌ஷன்ஸ். மேலும் இந்தியாவில் அதிக பட்ஜட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கக்கூடிய ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவின் வீச்சை இன்னும் வீரியமாக பதிவு செய்தது லைகா நிறுவனம். இதுமட்டுமின்றி நானும் ரவுடிதான், விசாரணை, காலா, பரியேறும் பெருமாள் போன்ற தரமான திரைப்படங்களை விநியோகித்து, சினிமாவிற்கான ஆரோக்கியத்தை பேனவும் லைகா தவறவில்லை. அடுத்ததாக யோகி பாபு நடித்துள்ள பன்னி குட்டி, திரிஷாவின் ராங்கி என சிறிய படங்களோடு, கமலின் இந்தியன்-2, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய மெகா ப்ராஜக்ட்களையும் கைவசம் வைத்துள்ளது லைகா ப்ரொடக்‌ஷன்ஸ்.இத்துடன் வரும் 2021-ஆம் ஆண்டில், இன்னும் பல்வேறு சிறிய மற்றும் பெரிய தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தில் உள்ள லைகா, ஹிந்தி சினிமாவிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை தரமான தமிழ் படங்களை கொடுத்து வந்த லைகா நிறுவனமும் அதன் சேர்மன் சுபாஸ்கரணும், நிச்சயம் இந்திய சினிமாவில் பெரிய மாயங்களை நிகழ்த்தி காட்டுவார்கள் என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு