லைகாவின் கோரிக்கையை ஏற்று இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி. இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
அதன்படி இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு நாளான நாளை ஜூலை மாதம் 12 ஆம் தேதி ஒரு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படுமென்றும், காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி, இரவு 2 மணிக்குள் இறுதிக்காட்சி நிறைவடைய வேண்டுமென்றும், நாளொன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுமென்றும் தமிழ்நாடு அரசு அரசாணை மூலம் தெரிவித்துள்ளது.ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது
இந்தியன் 2 . கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினை, கொரோனா லாக் டவுன் என அடுத்தடுத்து சிக்கல்களில் மாட்டிக்கொண்ட இந்தியன் 2, ட்ராப் ஆகிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கமலின் விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால், மீண்டும் இந்தியன் 2-க்கு உயிர் கொடுத்து இப்போது ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது. சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல இடங்களில் இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கும் ஓபனாகிவிட்டது.
இந்த நிலையில் தான் இந்தியன் 2 படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில், படக்குழுவினர் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை இன்று ஜுலை மாதம் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஹெச்.எம்.எஸ் காலனி வர்மக்கலை, தற்காப்புக்கலை, ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில், இந்தியன் முதலாம் பாகம் தயாரித்த போது நடிகர் கமல்ஹாசன் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து தன்னிடம் ஆலோசித்து அந்த முத்திரை பயன்படுத்தப்பட்டதற்காக தனது பெயரும் படத்தில் இடம்பெற்றது. இந்தியன் 2 திரைப்படத்தில் அதே வர்மகலை முத்திரையை தனது அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். ஆகவே இந்தியன் 2 படத்தை திரையரங்குகள், ஓடிடி தளங்கள் என எந்த வகையிலும் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என ராஜேந்திரன் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வமகேஸ்வரி முன் விசாரணைக்கு வந்தது. கமல்ஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், இயக்குநர் சங்கர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜரானார். வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் 1993, 1994 ஆகிய ஆண்டுகளில் எழுதியுள்ள 2 புத்தகத்தில் வர்மக்கலை குறித்தும், முத்திரை குறித்தும் நுணுக்கமாக கூறப்பட்டு உள்ளது. புத்தக தகவல்களை மையமாக வைத்து ஆலோசனை செய்து தான் இந்தியன் முதல் பாகம் எடுக்கப்பட்டது.
ஆனால், இந்தியன் 2-ல் எங்களை ஆலோசிக்காமல் வர்மகலை முத்திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, புத்தகங்களைத் தழுவியே இந்தியன் படம் உருவாக்கப்பட்டது, இந்தியன் 2 பட டைட்டில் கார்டில் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் பெயரை பதிவு செய்ய வேண்டும் என கேட்கிறோம் என ராஜேந்திரன் தரப்பு வழக்கறிஞர் பிரபு வாதாடினார். ஆகவே இது ஒரு தவறான வழக்கு, ஜுலை 11 ஆம் தேதி இயக்குநர் சங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும். வர்மகலை என்பது உலக அளவிலுள்ள ஒரு கலையாகும், அதனை கண்டுபிடித்தது சித்தர் அகஸ்தியர். இந்தியன் 2 படத்தில் வர்மகலை ஆசான் பிரகாசம் குருக்கள் என்பவரை வைத்துத்தான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியன் படத்திற்கும் வர்மக்கலை ஆசான் ராஜேந்திரனுக்கும் எந்தவொரு தொடர்புமில்லை என இயக்குனர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் சாய் குமரன் வாதாடினார்,
இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி செல்வ மகேஸ்வரி, படக்குழு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுத்துள்ளார். அதன் படி அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை மாதம் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்தியன் 2 திரைப்படம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த விசாரணை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவத்தை தொடங்கி தமிழில் 2014-ஆம் ஆண்டு கத்தி திரைப்படத்தை இவர் தயாரித்தார். படத்தின் ரிலீஸுக்கு முன்பே கடுமையான எதிர்ப்புகள் கிளம்ப, அதையும் கடந்து வெளியான இத்திரைப்படம் வசூலில் ஹிட் அடித்ததுடன் பெருவாரியான பாராட்டுக்களையும் குவித்தது. இதை தொடர்ந்து எனக்கு இன்னொரு பேர் இருக்கு, இப்படை வெல்லும், எமன், தியா என சிறுபட்ஜட் படங்கள் ஒருப்பக்கம், கோலமாவு கோகிலா, செக்கச் சிவந்த வானம், வட சென்னை, காப்பான் என டாப் நடிகர்களின் படங்கள் இன்னொரு பக்கம் என பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளது லைகா ப்ரொடக்ஷன்ஸ். மேலும் இந்தியாவில் அதிக பட்ஜட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களில் முதல் இடத்தில் இருக்கக்கூடிய ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவின் வீச்சை இன்னும் வீரியமாக பதிவு செய்தது லைகா நிறுவனம். இதுமட்டுமின்றி நானும் ரவுடிதான், விசாரணை, காலா, பரியேறும் பெருமாள் போன்ற தரமான திரைப்படங்களை விநியோகித்து, சினிமாவிற்கான ஆரோக்கியத்தை பேனவும் லைகா தவறவில்லை. அடுத்ததாக யோகி பாபு நடித்துள்ள பன்னி குட்டி, திரிஷாவின் ராங்கி என சிறிய படங்களோடு, கமலின் இந்தியன்-2, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் ஆகிய மெகா ப்ராஜக்ட்களையும் கைவசம் வைத்துள்ளது லைகா ப்ரொடக்ஷன்ஸ்.இத்துடன் வரும் 2021-ஆம் ஆண்டில், இன்னும் பல்வேறு சிறிய மற்றும் பெரிய தமிழ் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தில் உள்ள லைகா, ஹிந்தி சினிமாவிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை தரமான தமிழ் படங்களை கொடுத்து வந்த லைகா நிறுவனமும் அதன் சேர்மன் சுபாஸ்கரணும், நிச்சயம் இந்திய சினிமாவில் பெரிய மாயங்களை நிகழ்த்தி காட்டுவார்கள் என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது
கருத்துகள்